Followers

Saturday, November 23, 2013

சனி+சந்திரன்


ணக்கம் ண்பர்களே!
                     சனியும் சந்திரனும் சேரும்பொழுது புனர்பூ தோஷம் என்பார்கள். இது ஒருவருடைய ஜாதகத்தில் இந்த தோஷம் ஏற்பட்டால் அவருக்கு என்ன பலன் தரும் என்பதை பார்க்கலாம்.

இந்த நபர்களை சுற்றி இருக்கும் நபர்கள் இவருக்கு துரோகம் செய்துக்கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு அது தெரியும் ஆனாலும் அவர்களை நம்பியே இவர்கள் இருப்பார்கள். பல துரோகங்களை இவர்கள் வாழ்க்கையில் சந்திபார்கள். சனிக்கும் சந்திரனுக்கு ஒற்றுவராது. சந்திரனை வைத்து தானே ஏழரைசனியை சொல்லுகிறார்கள். 

சனியும் சந்திரனும் சேர்ந்து இருந்தால் அவர்களுக்கு மனநிலையில் பாதிப்பு மற்றும் சரீர பாதிப்பு ஏற்படும். குடும்பத்தில் உள்ள நபர்களாலேயே இவர்கள் வஞ்சிக்கப்படுவார்கள். இவர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது மிகவும் கடினமாக இருக்கும். இவரை பெற்றோர்கள் கூட இவர்களுக்குகாக வருத்தப்படுவார்கள்.

ஒரு சிலருக்கு சந்திரன் சனியின் நட்சத்திரத்தில் இருந்தாலும் அல்லது சனியின் வீட்டில் இருந்தாலும் இந்த பிரச்சினையை அவர்கள் சந்திப்பார்கள். அனைவருக்கும் என்று சொல்லமுடியாது ஒரு சிலருக்கு இப்படி ஏற்பட்டு இருக்கின்றது.

இவர்களுக்கு திருமணம் செய்யும்பொழுது நிச்சயம் செய்தவுடன் உடனே திருமணத்தை நடத்திவிட வேண்டும் அப்படி இல்லை என்றால் நிச்சயாதார்த்ததுடன் திருமணம் நின்றுவிட வாயப்பு இருக்கின்றது.

இவர்களுககு இந்த தோஷம் நீக்கி நல்ல யோக அமைப்பு ஏற்படவேண்டும் என்றால் சிவலிங்கத்திற்க்கு பசுபால் கொண்டு ஒன்பது திங்கள்கிழமை அபிஷேகம் செய்து வரவேண்டும். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: