Followers

Friday, November 15, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 81


ணக்கம் ண்பர்களே!
                     ராகு தசாவைப்பற்றி பார்த்து வருகிறோம். ராகு என்பது தாத்தாவை குறிக்கும் கிரகம் என்பதால் தாத்தாவை நாம் முன்பே பார்த்திருக்கவேண்டும் அதனை மறந்துவிட்டேன் இப்பொழுது பார்த்துவிடலாம். 

ராகு நன்றாக இருந்து தசா நடைபெறும்பொழுது நமது தாத்தா சொத்து நமக்கு கிடைக்கும். தாத்தா சொத்து பேரனுக்கு தானே சொந்தம். தாத்தாவின் சொத்து உங்களுக்கு கிடைக்கும். 

தாத்தாவின் ஆசி இந்த நேரத்தில் கிடைக்கும். தாத்தாவின் சொத்து கிடைக்கும்பொழுது தாத்தாவின் ஆசிகிடைக்காத என்ன? முன்னோர்களின் ஆசி நமக்கு மிகப்பெரிய பலம்.அந்த ஆசியை நமக்கு ஏற்படுத்தி தந்து ராகு நமது வாழ்வில் வெளிச்சத்தை ஏற்படுத்திக்கொடுப்பார்.

உங்களின் கனவில் கூட உங்களின் தாத்தா அடிக்கடி வந்து செல்வார் அப்படி அவர் வந்து சென்றால் அவர் உங்களுக்கு ஆசி வழங்குகிறார் என்று அர்த்தம். அந்த நேரத்தில் தாத்தாவிற்க்கு திதி கொடு்த்து அவரின் முழுஆசியும் பெற்று ராகு தசாவை நன்றாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

ராகு கெட்டு தசா நடைபெறும் காலத்தில் உங்களின் தாத்தா உங்களை விட்டு சென்றுவிடுவார். இறைவனிடம் சென்றுவிடுவார். தாத்தாவின் வழியாகவே பிரச்சினை வந்துவிடும். தாத்தா உங்களுக்கு சேரும் சொத்தை பிறர்க்கு உயில் எழுதிவைத்துவிடுவார்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: