Followers

Wednesday, November 20, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 84


வணக்கம் நண்பர்களே !
                     ராகு தசாவைப்பற்றி பார்த்து வருகிறோம் இதில் ராகு தசாவில் கடுமையான நோய் தாக்குதலுக்கும் ஆளாகுவார்கள் என்று சொல்லிருந்தேன்.

கிராமத்தில் இப்படி நோய் தாக்குதலில் இருக்கும் நபர்களை ஒரு கட்டத்திற்க்கு பிறகு என்ன செய்வார்கள் என்றால் அவர்களே கருணை கொலை செய்துவிடுவார்கள். இதனைப்பற்றி நான் கேள்விப்பட்டு இருக்கின்றேன். சம்பந்தப்பட்ட நபர் படும் வேதனை தாங்கமுடியாமல் இப்படி செய்வார்கள் என்று சொன்னார்கள்.

ராகு என்பது கண்ணுக்கு தெரியாது வலியும் கண்ணுக்கு தெரியாது. வலி தான் உச்சகட்டமாக இருக்கும். சம்பந்தப்பட்ட நபர்களுக்கு மருத்துவரை வைத்தே கருணை கொலை செய்வார்கள் என்றும் கேள்விப்பட்டது உண்டு.இது எல்லாம் வெளியில் தெரியாமல் நடக்கிறது என்று நினைக்கிறேன்.

நோய்வாய்ப்பட்டு உடலில் புழு அதிகமாக உருவாகிவிடும். அதனை வைத்து பார்ப்பது கடினம் என்று இப்படி செய்வார்கள் என்று கேள்விப்பட்டேன். இது எல்லாம் மிகவும் கொடுமை. என்ன செய்வது ராகு தசாவின் கொடுமையை சொல்லும்பொழுது இதனை சொல்லவேண்டும் என்பதால் சொல்லுகிறேன்.

எப்பொழுதும் கொலை செய்யும் ஆத்மா. ஒழுங்காக வீட்டை விட்டு வெளியே செல்லாது அதனால் தான் பழைய பதிவில் சொல்லிருந்தேன். ராகு தசாவில் இறக்கும் நபர்களின் ஆத்மா ஒழுங்கான முறையில் செல்லுவதில்லை என்று சொல்லிருக்கிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: