Followers

Wednesday, November 6, 2013

வாழ்க்கையை மேம்படுத்த வழி


வணக்கம் நண்பர்களே!
                    என்னிடம் பல பேர்கள் பேசும் பொழுது சொல்லுவார்கள். எனக்கு இந்த மாதம் பணப்பிரச்சினை வரும் சார். இந்த மாதம் எனக்கு உடல் நிலை பிரச்சினையை ஏற்படுத்தும் என்று சொல்லுவார்கள். நான் சரி என்று சொல்லுவது உண்டு. உண்மையான காரணம் என்ன என்றால் தசாநாதன் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று அர்த்தம். கோச்சாரப்பலன் மட்டும் அவர்களுக்கு நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது என்று அர்த்தம்.

ஒரு ஜாதகத்தில் கோச்சாரப்பலன் மட்டும் பலனை தந்துக்கொண்டுருக்கிறது என்றால் நீங்கள் மிகவும் துர்பாக்கியசாலி தான். கோச்சாரபலன்கள் எத்தனை நாளைக்கு நமக்கு பலன் கொடுக்கும். ஒரு வருடம் அல்லது இரண்டரை வருடங்கள் பலன் கொடுக்கும் அதற்கு மேல் பலன் கொடுக்காது.

கோச்சாரப்பலன்களை வைத்துக்கொண்டு நாம் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையமுடியுமா என்றால் கண்டிப்பாக முடியாது. ஒரு தொழிலும் ஒழுங்காக செய்யமுடியாது. அதிகப்பட்சம் இரண்டு வருடங்கள் கூட தாங்காது. நடத்திக்கொண்டிருக்கும் தொழில் கைவிட்டு போய்விடும்.

உங்களுக்கு நடக்கும் தசாவின் கைஓங்க வேண்டும் அப்பொழுது மட்டுமே நீங்கள் விரும்பும் வாழ்க்கை வாழலாம். எப்படிபட்ட தசாவாக இருந்தாலும் அதனை செயல்படவைக்கவேண்டும். செயல்படத்தினால் மட்டுமே ஒரளாவது வாழ்க்கையில் வெற்றி பெறமுடியும்.

உங்களுக்கு ராகு கெட்டு இருந்தால் ராகுவின் பதினெட்டு வருடங்கள் நீங்கள் கஷ்டப்பட்டு்க்கொண்டு இருந்தால் வாழ்க்கையில் அனைத்தையும் நீங்கள் இழக்கவேண்டிவரும். 

ராகு நம்மை எப்படி எல்லாம் அடிக்கிறார் என்று பார்த்துக்கொண்டு இருக்ககூடாது. அவரை அரவணைக்க வைக்க வேண்டும். அப்பொழுது மட்டுமே நமது வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ளமுடியும். 

கோச்சாரப்பலன் நல்லது செய்யும் என்று பார்த்துக்கொண்டு இருந்தால் வாழ்க்கை ஒரு சாதாரணமான வாழ்க்கையாக இருக்கும். உங்களுக்கு நடக்கும் தசாவை பார்த்து அந்த தசாநாதனை மேம்படுத்த எண்ணுங்கள். தசாநாதனுக்கு உரிய பரிகாரத்தை செய்யுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: