Followers

Monday, November 4, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 69


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு காலத்தில் பெரம்பூர் ரயில்வே ஸ்டேஷனில் நின்றுக்கொண்டு இருக்கும்பொழுது எனது நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார். இந்த ரயிலை இந்த தண்டவாளங்கள் எப்படி சுமக்கின்றன என்றார்.

நான் அவரிடம் இது என்ன பெரிய விசயம் அவரிடம் இந்த பெரிய பூமியே சும்மா அப்படியே மிதந்துக்கொண்டு தான் இருக்கின்றது என்றேன்.உலகமே மிதந்துக்கொண்டு தான் இருக்கின்றது. அதனால் தான் என்னவோ மனிதனும் போதையில் மிதங்கவேண்டும் என்று நினைக்கிறான். மிதப்பது தான் கடவுளின் இருப்பிடம் என்று நினைக்கிறேன். ராகு தசா கூட அதனை தான் உங்களுக்கு செய்கின்றது.

இந்த பூமியை பாம்பு தான் தாங்கி பிடித்துக்கொண்டு இருக்கின்றது என்று புராண புத்தகத்தில் படித்தது உண்டு.ராகு தான் பாம்பு. ஒரு வேளை பாம்பு தாங்கிபிடிப்பதால் அனைவரும் மிதக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

ராகு தசா நடைபெறும் பொழுது உங்களின் கனவில் நீங்கள் மிதப்பது போலவே உணர்வீர்கள். அப்படி மிதப்பது போல் உங்களுக்கு கனவு வந்தால் ஆன்மீகத்தில் நீங்கள் உயரபோவீர்கள் என்று அர்த்தம்.

நடக்கும் தசாவை பொருத்து தான் உங்களின் கனவும் வரும்.ராகு தசாவில் கனவை வைத்தே அது எந்த விதத்தில் நடந்துக்கொண்டு இருக்கின்றது என்பதை நாம் தெரிந்துக்கொள்ளலாம். அதனை அடுத்த பதிவில் பார்க்கலாம். இப்பொழுது நீங்கள் தூங்கும்பொழுது ராகு தசாவில் மிதப்பது போல் கனவு கண்டால் வர இருக்கும் குரு தசா உங்களை மிகப்பெரிய ஆன்மீகவாதியாக மாற்ற போகின்றது என்று அர்த்தம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: