Followers

Sunday, November 3, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 66


வணக்கம் நண்பர்களே!
                    ராகு தசாவில் பல விசயங்களைப்பற்றி பார்த்து வருகிறோம் அதில் ஒருவருக்கு ராகு தசா நடைபெறும் காலத்தில் முக்கியமான தகவலைப்பற்றி பார்க்கலாம்.

உங்களுக்கு ராகு தசா நடைபெறும் காலத்தில் உங்களின் குடும்ப உறுப்பினர்களின் நிலையையும் கொஞ்சம் கூடுதல் கவனத்தில் எடுத்துக்கொள்வது நல்லது. அவர்களின் உடல்நலனில் அக்கறை காட்டவேண்டும்.  அதே நேரத்தில் உங்களின் உடல்நிலையிலும் அக்கறை காட்டவேண்டும்.

உடல்நிலையில் எப்படி பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்றால் ராகு தசா நடைபெறும் காலத்தில் நமக்கு உடலில் அதிகமான நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அந்த நேரத்தில் பல நோய்கள் உடலில் தொற்றிக்கொள்ளும்.  இது உங்களுக்கு மட்டும் இல்லை உங்களின் குடும்பத்தினருக்கும் அதிக அக்கறை காட்டவேண்டும். ஒன்று நினைக்கலாம் எனது ஜாதகத்தில் பிரச்சினை என்றால் என்னை மட்டும் தானே அது பாதிக்கவேண்டும் எப்படி பிறரை பாதிக்கும் என்று கேட்க தோன்றும். அது அப்படி தான். அனுபவத்தில் பலருக்கு நடக்கும்பொழுது சொல்லிவிடுவது நல்லது என்பதால் உங்களிடம் சொல்லிவிடுகிறேன்.

ராகு தசா நடைபெறும் காலத்தில் அதிகம் புற்றுநோயை தற்சமயம் ஏற்படுத்துகிறது. புற்றுநோயை உருவாக்குவதில் ராகுவும் குருவும் சேர்ந்து தான் ஏற்படுத்துவார்கள். உங்களின் ஜாதகத்தில் ராகு தசா நடைபெற்று குரு வீக்காக இருந்தார் என்றால் உங்களின் உடலை ஒரு முறை முழுபரிசோதனை செய்துக்கொள்வது நல்லது.

புற்றுநோய் கண்டிப்பாக வந்துவிடும் அல்லது வருவதற்க்கு வாய்ப்பு அதிகமாக இருக்கும். இன்றைக்கு நகரத்தில் இருந்து கிராமங்கள் வரை இந்த நோய் அதிகமாக இருக்கின்றது. இந்த நோய் வந்தால் அதைவிட பெரியகொடுமையை சிகிச்சை என்ற பேரில் அனுபவிக்க வேண்டும்.

ராகு தசா நடைபெறும் காலத்தில் இந்த விசயத்தில் அதிகம் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. நான் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன். உங்களின் கையில் தான் உள்ளது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

3 comments:

கார்த்திக் சரவணன் said...

வணக்கம், தங்களது தளம் "மின்னல்வரிகள்" பாலகணேஷ் அவர்களால் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான சுட்டி:

http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_5.html

rajeshsubbu said...

வணக்கம் சார் தளத்தை பார்வையிட்டேன்.
நன்றி சார்.

sury siva said...

ராகு தசா நடைபெறும் காலத்தில் அதிகம் புற்றுநோயை தற்சமயம் ஏற்படுத்துகிறது. புற்றுநோயை உருவாக்குவதில் ராகுவும் குருவும் சேர்ந்து தான் ஏற்படுத்துவார்கள். //

வலைச்சரம் வழியே இங்கு வந்தேன்.

ராகு தசை காலத்தில் பொதுவாக உடல் நலம் பாதிக்க வாய்ப்பு இருக்கும் என்று சொல்லுங்கள்.
ராகு தசை குரு புக்தி காலத்தில் உடல் நலம் பாதிக்க அதிக வாய்ப்பு இருக்கும் என்றும் சொல்லுங்கள்.
ஆட்சேபம் இல்லை.

ஆனால், ராகு தசை குரு புக்தி ஜோதிடம் தோன்றிய காலத்திலே இருந்து இருக்கத்தான் செய்கிறது.
ஏதோ தற்சமயம் அது புற்று நோய் ஏற்படுத்துகிறது என்ற புதிர் போட்டது எனக்கு
சிரிப்பாக வருகிறது.

எந்த புத்தகத்தில், அதாவது பழைய க்ரந்தங்களில், அதாவது ப்ருஹத் ஜாதகம், கால ப்ரகாசிகா, கேரள ஜோதிடம்
இது பற்றி ஏதேனும் குறிப்புகள் கண்டீர்களா அல்லது அது உங்கள் ஆராய்ச்சியா ??

இல்லை, ராகு தசை வந்தாலே கஷ்டம், நோய், கடன் என்று எல்லாம் போட்டு பயமுறுத்த பார்க்காதீர்கள்.

ராகு ஒருவரது ஜாதகத்தில் எந்த இடத்தில் எந்த ராசியில் எந்த பாவாதிபனாக, எந்த நக்ஷத்திரத்தின் பாதத்தில்,
எந்த கிருஹங்கள் பார்வையில் இருக்கிறார் என்பதையெல்லாம் பார்க்கவேண்டும்.

மேலும், ராகு இருக்கும் இடத்தின் அதிபனைக்கொண்டு ராகுவின் பலனையும் சொல்லவேண்டும். ராகுவை யார் பார்க்கிறார்கள் என்பதையும் கண்டறியவேண்டும். அவரது திக் பலன் என்ன என்பதைக் கணக்கிடுதல் முக்கியம். சனிவத் ராகு குஜவத் கேது என்று வசனமும் இருக்கிறது. சனி ஆயுஷ்காரகன். அவன் ஒரு ஜாதகத்தில் வலுவாகவும், லக்னாதிபனாக இருந்தாலோ அல்லது ராகு லக்னத்திற்கு ஆறாம் இடத்தில் இருந்தாலோ, அல்லது ஜாதகர் ஆயுளில் ராகு வருவதற்கே இல்லை என்று கண்டாலும், ராகு வைப் பார்த்து பயப்பட தேவையில்லை.

ராகு ஒரு சாயா கிருஹம். அது நன்மையும் செய்யும் கெடுதலும் செய்யும்.
அதற்கான வாய்புக்களை ஆராய,
அஷ்டவர்க்கத்தில் ராகுவின் பரல்கள் எத்தனை என்றும் கணக்கிடுதல் அவசியம்.

ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன.

ஒரு விஷயம் சொல்லவேண்டும்.

பலானி க்ருஹச்சாராணி சூசயிந்தி மனீஷினஹ என்பது வாக்கியம். கிருஹஙகள் என்ன செய்யலாம் என்று ஒரு கோடி காண்பிக்கத்தான், பல தீபிகாவும், பிருஹத் ஜாதகமும், ஜோதிடரை பணிக்கின்றன. இப்படித்தான் நடக்கும் என்று எந்த ஒருவராலும் சொல்ல இயலாது.

நீங்கள் இதை பிரசுரிக்கவேண்டும் என்பது என் கருத்து அல்ல. அதை தீர்மானிக்க வேண்டியது நீங்கள் தான்.

சுப்பு தாத்தா.