Followers

Sunday, November 3, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 64


வணக்கம் நண்பர்களே!
                    நேற்று ஒரு நண்பர் என்னிடம் பேசி இருந்தார். அவர் பனிரெண்டாவது வீட்டில் எனக்கு ராகு இருக்கிறார். பல சோதிடர்கள் எனக்கு ராகு தசா நல்லதை செய்யும் என்று சொல்லிருந்தார். நேற்று தீபாவளி என்பதால் உடனே நானும் நல்லதை செய்யும் என்று சொல்லிருந்தேன். நல்ல நாளும் அதுவாக ஏன் தீயப்பலனை சொல்லவேண்டும் என்றும் அப்படி சொல்லிவிட்டேன். அவர் மறுபடியும் இதனை படிக்க கூடும் அப்பொழுது அவர் புரிந்துக்கொள்வார்.

ராகு அவர்க்கு விருச்சிக ராசியில் இருக்கின்றது என்றும் சொல்லியிருந்தார். செவ்வாய் ஆறாவது வீட்டில் இருக்கின்றது என்றும் சொல்லிருந்தார். ராகு தசா நல்லதை செய்யும் என்று அவர்களின் சோதிடர்கள் சொல்லியுள்ளார்கள் என்றும் சொல்லிருந்தார். இந்த தகவலை வைத்து நாம் பார்க்கும்பொழுது கண்டிப்பாக அவருக்கு ராகு தசா நல்லதை செய்யாது என்றே தோன்றுகிறது. 

பனிரெண்டாவது வீடு என்பது ஜெயிலையும் காட்டும் இடம் தான் அது. செவ்வாயின் வீடு என்பதால் தகராறு ஏற்பட்டு ஜெயிலுக்கு போகும் நிலை கூட ஏற்படும் அல்லது அயல்நாட்டில் வசிக்ககூடும் என்று சொல்லலாம். இவர் ஏற்கனவே அயல்நாட்டில் தான் வாழ்ந்துக்கொண்டுருக்கிறார். ஏற்கனவே ராகு ஒரு பலனை கொடுத்துவிட்டார்.

ராகு தசாவில் எப்படி ஜெயில் வாசம் ஏற்படும் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்க தோன்றும். பனிரெண்டாவது வீடு என்பது ஒரு கணக்கு அடுத்தது ராகு என்பது அடுத்த கணக்கு. அதைவிட ஒரு முக்கியமான ஒன்று ஜாதகத்தில் இருக்கின்றது அது என்ன என்றால் குருவின் நிலைமையை நன்றாக அலசவேண்டும். 

குரு கிரகம் ஒருவருக்கு நல்ல நிலைமையில் இருக்கும்பொழுது அவர்க்கு எப்பேர்ப்பட்ட பிரச்சினை வந்தாலும் அது உடனே தீர்ந்துவிடும். ஒருவர்க்கு குரு நல்ல நிலைமையில் இருந்து அவர்க்கு பிரச்சினை வந்தால் காவல்நிலையத்தில் உன் பேரில் புகார் தெரிவிக்க போகிறேன் என்று அடுத்தவர்கள் சொல்லுவார்கள் ஆனால் அவர்களே மனமாறி வந்துவிடுவார்கள். கடைசி நேரத்தில் குரு கிரகம் காப்பாற்றிவிடும். இதற்க்கு தான் குரு கிரகம் நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லுவது. குரு கிரகம் நன்றாக இல்லாமல் ராகு தசா நடைபெற்றது என்றால் கண்டிப்பாக காவல்நிலையத்தில் அல்லது ஜெயில் வாசம் உண்டு என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


No comments: