Followers

Tuesday, November 26, 2013

குரு தசா பலன்கள் பகுதி 2


வணக்கம் நண்பர்களே!
                     குரு தசா ஆரம்பித்தவுடன் நண்பர்களிடம் இருந்து ஏகா வரவேற்பு இருக்கின்றது. ஏன் குரு தசாவிற்க்கு அதிகமான வரவேற்பு என்றால் ஜாதக கதம்பத்தை படிக்கும் அதிகப்பட்சம் பேர் குரு தசா நடைபெற்றுக்கொண்டு இருக்கும். 

ஒரு ஆள் ஆன்மீகம் சோதிடம் என்பதை எல்லாம் படிக்கவேண்டும் என்றால் குரு தசா நடந்தால அல்லது குரு கிரகம் நன்றாக அமைந்தால மட்டுமே அதிக ஈடுபாட்டோடு படிப்பார்கள்.பிற கிரகங்களின் தசாவில் இதனை படிக்க சொன்னால் தூங்கிவிடுவார்கள். இது எல்லாம் எதற்க்கு என்று கேட்பார்கள்.குரு தசாவிற்க்கு வரவேற்பு இருப்பதன் காரணம் இதனால் மட்டுமே. படிக்கும் அதிகப்பட்ச பேருக்கு குரு தசா நடைபெறுகிறது.

நல்ல ஆன்மீகத்தில் இருப்பவர்கள் மற்றும் உலகவிசயங்கள் புரிந்தவர்கள் அதிகம் விரும்புவது குரு தசாவை மட்டுமே. உலகத்தில் பிரபலமாக வேண்டும் என்றால் அவர்களுக்கு குரு தசா நடைபெற்றால் போதும். ஏதோ ஒரு மூலையில் தெருவில் இருப்பவனை தூக்கிக்கொண்டு கோபுரத்தில் உட்காரவைத்துவிடும்.

மனிதன் புகழ்க்கு மயங்குபவன். அப்புறம் ஏன் குரு தசாவுக்கு ஏங்கமாட்டார்கள்.அப்படி என்ன தான் குரு தசாவில் இருககும் என்றால் ஒருவரது மூளையை நன்றாக வேலை செய்ய வைக்கும். சிந்தனை செய்யும் திறன் அதிவேகமாக இருக்கும். பொதுவாக ஒருவர் முன்னேற்றம் அடையாமல் இருப்பதற்க்கு காரணம் பொதுமான அறிவு திறன் இல்லாத காரணத்தால் மட்டுமே முன்னேற்ற்ம் அடையாமல் இருப்பான்.

அறிவு இருந்தால் போதும் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம்.குரு கிரகம் ஒரு மனிதனுக்கு அதிகமான அறிவை பெற்று தரும். குரு தசா அந்த வேலையை தான் முதலில் செய்யும்.நீங்கள் இதனை சோதனை செய்து பார்க்கலாம். ஒருவருக்கு குரு தசா நடைபெற்றால் அவரின் பேச்சை நாம் ரசிக்கும்படி செய்யும். உலகஞானத்தை தருவதில் குரு தசாவிற்க்கு ஈடுஇணை யாரும் கிடையாது.

தொடர்ந்து பார்க்கலாம்...

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

5 comments:

dreamwave said...

நன்றி

rajeshsubbu said...

//* dreamwave said...
நன்றி *//

வணக்கம் தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி

கார்த்திக் சரவணன் said...

தொடருங்கள் சார்.. நிறைய விஷயங்கள் எதிர்பார்க்கிறேன்...

rajeshsubbu said...

//* ஸ்கூல் பையன் said...
தொடருங்கள் சார்.. நிறைய விஷயங்கள் எதிர்பார்க்கிறேன்... *//

வணக்கம் கண்டிப்பாக முடிந்தவரை தருகிறேன். நன்றி

Anonymous said...

நீங்கள் சொல்லுவது முற்றிலும் சரி. அறிவும் அருளுமே
அனைத்தும் சரி செய்ய வல்லது.
அதற்கு வந்து விழுந்து இருக்கும் பின்னூட்டங்களே சாட்சி .
குரு மூளை மற்றும் சீரண உறுப்புகளை ஆளுகிறது .
பொது விஷயங்கள் என்றில்லாமல் நிறைய நுணுக்கமான
பயனுள்ள விஷயங்களை எதிர்பார்க்கிறேன் உங்களிடமிருந்து.
உத்வேகமுடன் தொடர வாழ்த்துக்கள்.