Followers

Tuesday, November 26, 2013

சவால்


வணக்கம் நண்பர்களே!
                     சோதிடமாக இருக்கட்டும் ஆன்மீகமாக இருக்கட்டும் எப்பொழுதும் மனிதன் கடைசியில் தான் இதனை கையில் எடுப்பான் அதுவரை அவன் இதனை கண்டுக்கொள்ள மாட்டான்.

எப்பொழுது வாழ்க்கையில் அடிவிழுகிறதோ அப்பொழுது இதனை கையில் எடுப்பது மனிதனின் குணம். அடிவிழும் வரை நாத்திகம் பேசிக்கொண்டு இருப்பான் அடி விழுந்த பிறகு ஆன்மீகத்தை தேடஆரம்பித்துவிடுவான். பல பேர்களின் என்னிடம் நாத்திகம் பேசியவர்கள் ஒரு கட்டத்திற்க்கு மேல் என்னிடம் சரணாகதி அடைந்தவர்கள் உண்டு. 

தொழில்களுக்கு உதவது கூட எந்த தொழில் நஷ்டம் அடைந்து இருக்கின்றதோ அந்த தொழிலை பார்த்து தேர்வு செய்து அவர்களுக்கு உதவுகிறேன். அப்படி உதவும்பொழுது மட்டுமே நாம் யார் என்று நிறுபிக்க முடியும்.

புதிய தொழில்களை தேர்ந்தெடுக்கும்பொழுது நாம் உழைக்கின்றோம் அதனால் எனது தொழில் வளர்ச்சி அடைகிறது என்று தான் சொல்லுவார்கள். நான் அவர்களிடம் அதிகமாக வைத்துக்கொள்வது கிடையாது. என்று தொழில் தோல்வி அடைகிறதோ அன்று தான் நம்மை தேடுவார்கள்.

நான் ஒரு சில நேரங்களில் என்னை இப்படி நாடி வருபவர்களை நன்றாக கீழே விழட்டும் அதன் பிறகு காப்பாற்றலாம் என்று இழுத்தடிப்பதும் உண்டு. ஏன் என்றால் அப்பொழுது தானே நமது திறமை தெரியும்.

இது எல்லாம் ஒவர் என்று நீ்ங்கள் நினைக்ககூடும். மனிதனின் மனம் அப்படிபட்டது. நாம் என்ன தான் செய்தாலும் இவன் ஒன்றும் செய்யவில்லை என்று சென்றுவிடுவார்கள். அதனால் இப்படி செய்வது உண்டு.எந்த ஒரு காரியத்தையும் கடைசி நேரத்தில் எடுத்து செய்யும்பொழுது நமக்கு ஒரு சவாலாக இருக்கும். அந்த சவாலை நான் என்றும் விரும்புவேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: