Followers

Sunday, November 17, 2013

உங்களின் வீடு எப்படி?


ணக்கம் ண்பர்களே!
                     பல வீடுகளுக்கு நான் செல்லும்பொழுது அவர்களின் வீட்டில் பூஜையறையை பார்ப்பது உண்டு பூஜையறையை பார்த்த உடனே அங்கு என்ன இருக்கும் என்று தெரிந்துவிடும்.

நல்ல சக்தி அவர்களின் வீட்டில் வாசம் செய்கிறதா அல்லது துர்சக்திகள் அவர்களின் வீட்டில் வாசம் செய்கிறதா என்று தெரிந்துவிடும். பல வீடுகளில் துர்சக்திகள் வாசம் செய்கின்றது. இது எதனால் அப்படி வாசம் செய்கின்றது என்று பார்த்தால் ஒன்று அந்த வீட்டில் அதற்கு முன்பு யாராவது தற்கொலை செய்திருக்ககூடும். அல்லது அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு எதிராக யாராது செய்திருக்கிறார்கள். ஒரு சிலருக்கு வியாபார போட்டிக்காவும் செய்து இருக்கிறார்கள். 

ஒரு வீட்டில் துர்சக்திகள் இருப்பதற்க்காக அறிகுறி எப்படி தெரியும் என்றால் சம்பந்தமே இல்லாமல் வீட்டில் வளர்க்கும் செல்லபிராணிகள் கத்தும். யாரோ வீட்டிற்க்குள் வருவது போல் மனம் உணரும். 

நீங்கள் உடனே சம்பந்தமே இல்லாமல் யாராவது சந்தேகப்படாதீர்கள். இயற்கையாகவே அந்த வீட்டிற்க்குள் துர்சக்திகள் வாசம் செய்யவும் வாய்ப்பு இருக்கிறது.

உங்களின் வீட்டை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லுவதின் காரணம் இதற்காக மட்டுமே. வீட்டிற்க்குள் தேவையற்ற பொருட்களை உடனே வெளியில் எடுத்துபோட்டுவிடுங்கள். வாரத்திற்க்கு ஒருமுறையாவது வீட்டை தண்ணீர் விட்டு கழுவி விடுங்கள். மஞ்சளை தெளித்துவிடுங்கள். 

கடலை பார்க்க சென்றால் கடலில் இருந்து நீரை எடுத்து வந்து உங்களின் வீடு முழுவதும் தெளித்துவிடுங்கள்.  அப்படியும் துர்சக்திகள் வாசம் இருப்பது தெரியவந்தால் தகுந்த நபரை வைத்து பூஜை செய்யுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: