Followers

Monday, November 18, 2013

கோச்சாரசனி


வணக்கம் நண்பர்களே!
                     நமது நண்பர்கள் அனைவரின் முக்கியமான கவனத்திற்க்கு உங்களுக்கு கோச்சாரசனியின் நிலையை கொஞ்சம் நன்றாக கவனித்துக்கொள்வது நல்லது.

சோதிடர்கள் அனைவரும் தசாவின் நிலையை தான் நன்றாக பரிசிலனை செய்து பலனை சொல்லுவார்கள். கோச்சாரசனியின் நிலையை அந்தளவுக்கு சொல்லுவதில்லை காரணம் கோச்சாரநிலையை வைத்து சொன்னால் நல்ல சோதிடர்கள் என்று ஒற்றுக்கொள்ளமாட்டார்கள் என்ற காரணத்தால் மட்டுமே இவ்வாறு சொல்லுவது உண்டு.

கோச்சாரபலன்கள் எந்த கிரகம் வேலை செய்யாவிட்டாலும் சனிக்கிரகம் சரியாக வேலை செய்யும். ஏழரைசனி, கண்டசனி, அஷ்டமசனி போன்றவை நம்மை பிடித்து ஆட்டிவைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எப்படிப்பட்ட தசாவும் இதற்கு விதிவிலக்கு. 

கோச்சாரசனியை பற்றி ஏன் சொல்லுகிறேன் என்றால் வீட்டில் யாராது ஒரு நபர் இறந்துவிடுவார்கள் என்பதால் இதில் அதிகமாக கவனம் எடுக்கச்சொல்லுகிறேன்.

இரண்டாவது வீட்டில் சனி நின்றால் குடும்பத்தில் உள்ள ஒரு நபருக்கு கண்டம் ஏற்பட்டுவிடும். நான் அனைவரிடமும் சொல்லுவது என்ன என்றால் உங்களின் மொத்த குடும்பத்தின் ஜாதகத்தையே பாருங்கள் என்ற தான் சொல்லுவேன். அனைவரும் ஒன்றாக இருப்பவர்கள் என்பதால் அப்படி சொல்லுவேன். 

வீட்டில் உள்ள ஒரு நபர் இறப்பு என்பது மிகவும் துக்கமான ஒரு விசயமாக தான் இருக்கும்.மனித வாழ்க்கையில் ஒரு சிறு பிரிவை கூட தாங்கமுடியாத மக்கள். எப்படி நிரந்தர பிரிவை தாங்கமுடியும்.

இதற்கு பரிகாரம் உங்களின் வீட்டில் ஒரு சுபவிழாவையாவது ஏற்பாடு செய்யுங்கள். வீட்டில் எப்படியும் கூட்டத்தை சனி கூட்டும். அவர் கூட்டுவதற்க்குள் நாமே கூட்டத்தை கூட்டிவிட்டால் ஒரு நபர் உயிர் இழப்பை தடுக்கலாம் அல்லவா.

அதிகமாக நான் பரிந்துரைக்கும் பரிகாரம் குலதெய்வ கோவிலில் ஒரு விருந்தை நடத்துங்கள் என்று சொல்லுவேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

Unknown said...

வணக்கம் அண்ணா.. எனக்கும் ஏழரைசனி தான் நடந்து கொண்டிருக்கிறது.. என் ராசி கன்னி ஹஷ்தம் நட்ச்சத்திரம்.. என்க்கும் வீட்டில் உள்ளோர்க்கும் பிரச்சனை ஆகுமா அண்ணா..