Followers

Saturday, November 30, 2013

நம்பினால் நம்புங்கள்


வணக்கம் நண்பர்களே!
                        இந்த உலகம் பயப்படுறதுக்கு என்னிக்குமே தயாரா இருக்கு. பயமுறுத்துறதுக்கு தான் ஒரு ஆள்  தேவை என்று ஏதோ ஒரு படத்தில் இந்த வசனம் வரும். மாந்தீரிகத்தால் உங்களை நான் முடக்கிறேன். உங்களை கொல்லுகிறேன் என்று சொல்லுவதும் இப்படிபட்ட ஒன்று.

மாந்தீரிகம் செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. ஒருவரை கொல்லுவதற்க்கு அவ்வளவு எளிதில் எந்த தெய்வமும் உடன் வராது. மாந்தீரிகம் செய்பவனும் தான் மாந்தீரிகன் என்று ஒருபோதும் வெளியில் சொல்லமாட்டான். உண்மையான நிலவரம் இப்படி இருக்கும்பொழுது தெருவுக்கு தெரு மாந்தீரிகம் செய்யவர்கள் நான் அந்த வசியம் செய்கிறேன். இது செய்கிறேன் என்று போர்ட் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள்.

ஒரு உண்மையை சொல்லுகிறேன். தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் மாந்தீரிகம் செய்பவர்கள் மொத்தம் எத்தனை பேர் தெரியுமா ஐந்து பேர் மட்டுமே. அதில் தமிழ்நாட்டில் ஒருவர் வயதாகிவிட்டதால் இப்பொழுது அவர் செய்யாமல் இருக்கிறார். கேரளாவில் நான்கு பேர் மட்டுமே செய்கிறார்கள். இந்த நான்கு பேரும் பணத்திற்க்காக ஒரு போதும் செய்யமாட்டார்கள். 

இவர்கள் எப்பொழுது தன்னைப்பற்றி வெளியில் சொல்லிக்கொள்வதில்லை. நான்கு பேரில் ஒருவர் சந்நியாசியாக வெளியில் சுற்றிக்கொண்டு இருக்கிறார். மூன்று பேர் மட்டும் கேரளாவில் இருக்கின்றனர். அப்படி இருக்கும்பொழுது நாட்டில் எவ்வளவு போலிகள் என்று பாருங்கள். இதனை கண்டு நீங்கள் அஞ்சவேண்டியதில்லை. உங்களை பயமுறுத்தி கொல்லுவது மட்டுமே போலி மாந்தீரிகர்களின் வேலை. 

உண்மையாக செய்யும் நான்கு பேரும் ஒரு நாளும் மனிதர்களை கொல்லமாட்டார்கள். மந்திரத்தால் ஒருவரும் சாகமாட்டார்கள். பயத்தால் சாவுகிறவர்கள் அதிகம் பேர்.உண்மையாக செய்யும் நான்கு பேரும் அவர்கள் செய்யும் வழிகள் மற்றும் மூலிகைகளைப்பற்றி எந்த ஒரு தகவலும் புத்தகத்திலும் மற்றும் இண்டர்நெட்டிலும் இதுவரை வரவில்லை.

வடஇந்தியாவில் அதிகபேர் இருக்கின்றனர். அவர்கள் இங்கு வரவதில்லை. பிறமதங்களில் ஒரு சிலர் இருக்கின்றனர். மாந்தீரிகம் செய்து உன்னை கொன்றுவிடுவான் என்று உங்களிடம் சொன்னால் தாராளமாக செய்துக்கொள் என்று சொல்லிவிட்டு வாருங்கள். அவர்களால் ஒன்றும் செயயமுடியாது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: