Followers

Wednesday, November 6, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 74


வணக்கம் நண்பர்களே!
                    ராகு தசாவைப்பற்றி பார்க்கலாம். ராகுவிற்க்கு பரிகாரத்தை செய்யசொல்லி பல பேர்க்கு நான் பரிந்துரை செய்கிறேன். பொதுவாக எல்லா கிரக பிரச்சினைக்கும் செய்யுங்கள் என்று சொல்லுகிறேன். 

இவர்களின் நேரமா அல்லது அலட்சியமா என்று தெரியவில்லை. செய்வது கிடையாது. பிரச்சினை வந்தவுடன் பரிகாரம் செய்யவதற்க்கு செல்லுகிறார்கள். வந்தபிறகு செய்வதால் ஒன்றும் பயன்கிடையாது. அவர் செய்யவேண்டியதை செய்துவிட்டு போய்விடுவார். நாம் பரிகாரம் செய்து என்ன நடக்கபோகிறது. விஷத்தை உடலில் ஏற்றியப்பிறகு என்ன செய்யமுடியும். பட்டு தான் ஆகவேண்டும்.

ஒரு பரிகாரம் செய்வதற்க்கு ஆயிரம் ரூபாய் கூட ஆகாது ஆனால் இவர்களுக்கு நோய்வந்தவுடன் பல லட்சம் செலவு செய்ய நேரிடும்.ராகு தசாவில் அதிகப்பட்சமாக கொடுக்கும் தண்டனை புற்றுநோய். புற்றுநோய் வந்துவிட்டால் அதற்கு செலவு செய்யும் தொகை மிக அதிகமாக இருக்கும்.

உங்களின் குடும்பத்தில் ஒருவருக்கு ராகு தசா நடைபெற்றால் அந்த குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு ஒருவருக்காவது புற்றுநோய் வந்துவிடுகிறது. இந்த நோய் முற்றியவுடன் அவர்கள் படும்பாடு தாங்கமுடியாத ஒன்று. சிகிச்சையின் போதை நமது மானத்தை வாங்கிவிடும். 

எப்படி எல்லாம் கேவலப்படுத்தவேண்டுமே அப்படி கேவலப்படுத்தும். ஒரு காலக்கட்டத்தில் குடும்பத்தில் உள்ள நபர்களே விட்டுவிட்டு போகும் சூழ்நிலை எல்லாம் இருக்கின்றது அது தான் ராகுவின் அதிகப்பட்ச வீரியமான தாக்குதலாக் இருக்கின்றது. ராகு தசாவா எச்சரிக்கை தேவை.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: