Followers

Wednesday, November 6, 2013

பூர்வ புண்ணியம் 56


வணக்கம் நண்பர்களே!
                     ராகு தசாவைப்பற்றி எழுதிவரும்பொழுது புற்றுநோயைப்பற்றி சொன்னேன் அல்லவா. அதனைப்படித்துவிட்டு பல நண்பர்கள் எனக்கு தகவலை அனுப்பியுள்ளனர். என்னுடைய பையனுக்கு ராகு தசா நடைபெற்றது எனது கணவருக்கு புற்றுநோய் வந்துவிட்டது என்று சொன்னார். இப்படி பல தகவல் வந்துக்கொண்டே இருக்கின்றது.

இந்த செய்தியால் என்ன தெரிகிறது என்றால் ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் முன்ஜென்மத்திலும் ஒன்றாகவே வாழ்ந்திருக்கின்றனர் என்று தெரிகிறது. இல்லை என்றால் சம்பந்தப்பட்ட நபருக்கு மட்டுமே புற்றுநோய் வரவேண்டும். ஆனால் அவரின் குடும்பத்தினருக்கு வருகிறது என்றால் கண்டிப்பாக முன்ஜென்மத்தில் அனைவரும் ஒன்றாகவே இருந்திருக்கின்றனர். 

ஒரு குடும்பத்தில் ஒருவர் தவறு செய்தாலும் அது குடும்பத்தில் உள்ளவர்களையும் போய்சேரும்.ஒரு தவறு செய்யும்பொழுது அந்த பாவம் அனைவருக்கும் போய்சேருகிறது. இந்த ஜென்மத்திலாவது பிறர்க்கு தவறை செய்யாமல் இருங்கள். 

ராகு என்பது முன்ஜென்மத்தில் நாம் செய்த தவறினை காட்டும் ஒரு கிரகம் என்பது உங்களுக்கு தெரியும். ராகு கேதுவை வைத்து தான் பித்ருதோஷத்தை கணிக்கிறார்கள். ராகுவின் தசாவில் முன்ஜென்மத்தில் நாம் செய்த தவறுக்கு தண்டனை இந்த ஜென்மத்தில் நமக்கு கிடைக்கிறது.இந்த ஜென்மத்திலாவது அடுத்தவரை கெடுக்காமல் இருந்தால் நல்லது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: