Followers

Monday, November 18, 2013

அவசியமான பதிவு


ணக்கம் ண்பர்களே!
                     நமது நண்பர்கள் அனைவரும் மிகவும் திறமைசாலிகள் என்பது அடிக்கடி எனக்கு புரிய வைப்பார்கள். எப்படி என்றால் எப்பொழுது பிரச்சினையின் தீவிரம் அதிகமாக இருக்கின்றதோ அப்பொழுது எனக்கு போன் செய்து இந்த பிரச்சினையில் இருக்கின்றேன் என்னை காப்பாற்றுங்கள் என்று சொல்லுவார்கள்.

பிரச்சினை என்ன என்றால் சார் எனது தந்தை அல்லது தாய் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கின்றார் அவரை காப்பாற்றுங்கள் டாக்டர்கள் கைவிட்டு விட்டார்கள் அதனால் அவரை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று சொல்லுவார்கள். கடைசியில் கடவுளை சரணாகதி அடையுங்கள் என்பது தவறு இல்லை.

எல்லாம் முடிந்த பிறகு நாம் எதனையும் செய்துவிடமுடியாது. கடைசி கட்டத்தில் இருப்பவரையும் காப்பாற்ற முடியும். அந்த நேரத்தில் நான் அங்கு இருக்கவேண்டும். அதுவும் மிகவும் கடினமான ஒரு விசயமாக தான் இருக்கும். 

என்னை போனில் கூப்பிட்டு காப்பாற்றுங்கள் என்று சொன்னால் நான் அம்மனிடம் வேண்டுகிறேன் என்று தான் சொல்லுவேன்.இப்பொழுது நான் அடிக்கடி பயணம் மேற்க்கொள்ள வேண்டி இருக்கிறது. எந்த ஊரில் எந்த இடத்தில் இருப்பேன் என்று கூட சொல்லமுடியாத அளவுக்கு பயணங்கள் இருக்கின்றன. அப்படி இருககும்பொழுது நீங்கள் என்னிடம் சொல்லும்பொழுது வேண்டுதல் மட்டுமே வைக்கமுடியும்.

நீங்களே அம்மனிடம் வேண்டுதலை வைத்துக்கொள்ளுவது நல்லது. என்னிடம் சொல்லுவதும் அம்மனிடம் சொல்லுவதும் ஒன்றே. நீங்கள் வேண்டுதல் வைத்துக்கொள்ளுங்கள்.

மனிதனை காப்பாற்ற தான் ஒவ்வொரு ஆன்மீகவாதியும் நினைப்பான். அந்த இடத்தில் பணம் என்பதே இருக்காது. எனக்கு போன் செய்து நமது நண்பர்கள் சார் உங்களுக்கு பணம் தருகிறேன் எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று கேட்டுக்கொள்கிறார்கள். ஒரு விசயம் ஒன்றை புரிந்துக்கொள்ளுங்கள். எனக்கு பணம் தேவை தான் அதற்க்காக ஒரு உயிரை வைத்துக்கொண்டு பேரம் பேச பேசும் அளவுக்கு நான் இன்னும் கீழ் இறங்கவில்லை.

எனக்கு பணம் தான் முக்கியம் என்றால் இந்த ஜாதககதம்பத்தை எழுதவே வேண்டியதில்லை. பணம் மட்டுமே சம்பாதிக்கும் வழி என்னிடம் இருக்கின்றது.ஜாதககதம்பம் மட்டுமே பணம் வாங்காமல் பல நன்மைகளை செய்துக்கொண்டு இருக்கின்றது. அடுத்தவர்களை ஒப்பிட்டு பார்க்கும்பொழுது இது எல்லாம் ஒரு பணமே இல்லை என்று உங்களுக்கு புரியும்.

அதிகபட்சம் தொழில் செய்பவர்களிடம் இருந்து தான் பணம் எனக்கு முதன்மையான வழியில் சம்பாதிக்கிறேன். அதுவும் அவர்களை மேம்படுத்திவிட்டு அதில் இருந்து தான் பணத்தை பெறுகிறேன். கடைசியாக சொல்லுவது என்னிடம் சொல்லுவதைவிட நீங்கள் நேரிடையாக அம்மனிடம் வேண்டுதலை வைத்துவிடுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: