Followers

Thursday, November 28, 2013

குரு தசா பலன்கள் பகுதி 4


வணக்கம் நண்பர்களே!
                    குரு தசாவில் அனைவருக்கும் நல்லது நடைபெற்று இருக்கும் என்ற சொன்னவுடன் பல நண்பர்கள் எனக்கு நடைபெறவில்லை சார் பிரச்சினை அதிகமாக தந்தது என்று சொன்னார்கள்.

அனைவருக்கும் நல்லதை மட்டும் தரும் என்று சொல்லமுடியாது. ஒரு சிலருக்கு மட்டும் நல்லதை செய்யும். அதோடு நான் பலபேருக்கு சொல்லும் ஒரு வார்த்தை தசாநாதன் நன்றாக இருந்தாலும் கெட்டு இருந்தாலும் தசாநாதனுக்கு ஒரு பரிகாரம் கண்டிப்பாக செய்யுங்கள் என்று சொல்லிருக்கிறேன். பல பேர் இதனைப்பற்றி கண்டுக்கொள்வதில்லை. கண்டிப்பாக செய்யவேண்டும்.

குரு தசாவைப்பொருத்தவரை பூர்வபுண்ணியத்தில் இருந்து எடுத்து உங்களுக்கு நல்லதை செய்யும். அதே நேரத்தில் குரு இந்த ஜென்மத்தில் கொடுக்காமல் அடுத்த ஜென்மத்தில் கொடுத்துவிட்டால் இந்த ஜென்மத்தில் குரு தசாவால் பிரச்சினை மட்டுமே வரும்.

நடப்பு ஜென்மத்திலேயே குரு தன் பலனை தரவேண்டும். அதற்கு மட்டுமே பரிகாரத்தை செய்துவிடுங்கள் என்று சொல்லுவது உண்டு.குரு தசா நடந்தால் அதற்கு தகுந்தமாதிரி நம்மை மாற்றிக்கொள்ளவேண்டும். ஆன்மீகத்தில் அதிகமாக ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும். பெரியோர்களிடம் மரியாதையாக நடந்துக்கொள்ளவேண்டும். இப்படி பல விசயங்கள் இருக்கின்றது ஒவ்வொன்றாக நாம் பார்க்கலாம்.

குரு கிரகம் ஒரு நேர்மையான கிரகம் நீங்கள் செய்யும் தொழிலும் அதுபோல் இருப்பது நல்லது. பொதுவாக குரு உடல் உழைப்பு இல்லாமல் மூளையை வைத்து மட்டும் வேலையை செய்வது போல் செய்துக்கொடுப்பார். அதேப்போல் நீங்கள் தேர்ந்தெடுக்கும் தொழிலும் இருக்கவேண்டும். மூளையை முதலீடாக வைத்து சம்பாதிக்கவேண்டும். 

நமது நண்பர்கள் நல்ல வயதில் தசா வரவேண்டும் என்று சொல்லுவார்கள். அதாவது சம்பாதிப்பதற்க்கு ஏற்றார்போல் தசா வரவேண்டும் என்று சொல்லுவார்கள்.குருவின் விசயத்தில் அதுகிடையாது. ஏன் என்றால் மூளை கடைசி காலத்தில் கூட நன்றாக சிந்திக்க வைக்க செய்பவர் குரு பகவான். 

மூளை தான் முதலீடு என்கின்ற பொழுது அதனைப்பற்றி கவலைப்படுவதில்லை. அடுத்ததாக ஒன்றைச்சொல்லவேண்டும் ஒரு மனிதனுக்கு இரண்டு கட்டம் உண்டு. 35 வயது வரை ஒருவர் நன்றாக வாழ்ந்தால் அதன் பிறகு கஷ்டப்படுவார். 35 வயது வரை ஒருவர் கஷ்டப்பட்டால் 35 வயதுக்கு பிறகு நன்றாக வாழ்வார். இது ஒரு அனுபவம்.

குரு தசாவில் இந்த கணக்கு ஏற்றுக்கொள்ளபடமாட்டாது ஏன் என்றால் குரு தசா எப்பொழுதும் அதனின்பலனை கொடுப்பார். 35 வயதிற்க்குள் நன்றாக வாழ்ந்தவர்கள் அதன் பிறகு எப்படிப்பட்ட தசா வந்தாலும் அவனால் வெற்றி பெறுவது கடினம். அதற்கு விதிவிலக்காக குரு தசா இருக்கும்.

நான் சொன்னது அனுபவம் உங்களின் ஊரில் உள்ளவர்களை ஒரு லிஸ்ட் எடுத்து பார்த்தால் அவர்களின் வாழ்க்கை அதனை காட்டும். சும்மா எடுத்து பாருங்கள். பொதுவாக இளமையில் கஷ்டப்பட்டு இருந்தால் முதுமையில் ஒரு அனுபவமாக அவர்கள் செயல்பட்டு பல தலைமுறைக்கு சொத்து எல்லாவற்றையும் சேர்த்து வைப்பார்கள்.

நமது பதிவுக்கு வரும் குரு தசா நண்பர்கள் அனைவரும் இனி வரும் காலங்களில் உங்களின் மூளையை உபயோகப்படுத்துங்கள். குரு தசா உங்களுக்கு கொட்டிக்கொடுக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: