Followers

Sunday, November 17, 2013

கார்த்திகை தீபதிருநாள்


வணக்கம் நண்பர்களே!
                     இன்று கார்த்திகை தீபம். அனைவருக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்கள். இந்து மதத்தின் அடையாளமே தீபம் ஏற்றுவதில் தான் இருக்கின்றது. உங்களின் வீட்டில் மற்றும் கோவிலில் தீபம் ஏற்றும்பொழுது விளக்குக்கு இரண்டு திரி போட்டு ஏற்றுங்கள் அல்லது ஐந்து திரி போட்டு ஏற்றவேண்டும்.உங்களின் வீட்டில் மற்றும் கோவிலில் இதனை பின்பற்றுங்கள்.

தீபத்தை எப்படி ஏற்றவேண்டும் என்பதைப்பற்றி இங்கே சென்று பாருங்கள்.


நமது அம்மனின் கோவிலில் இன்று சிறப்பு பூஜை நடைபெறும். நமது நண்பர்கள் பூஜைக்கு என்று அனுப்பிய பணத்தில் இருந்து நடைபெறுகிறது. மாத மாதம் நண்பர்கள் அனுப்பும பணத்தில் மீதி இருந்த பணம் மூலம் இன்று பூஜை நடைபெறுகிறது. 

என்றோ நீங்கள் அனுப்பிய பணம் இன்று பூஜை செய்யப்படுகிறது. பணம் அனுப்பியவர்கள் இதனை படிக்காமல் கூட இருக்கலாம் ஆனால் உங்களுக்கு இன்று மிகப்பெரிய சக்தியின் அருள் கிடைக்க போகிறது. நம்மை அறியாமல் இப்படி தான் புண்ணியத்தை சேர்க்கும் வழி. தீபதிருநாளில் அனைவரும் மகிழ்ச்சியோடு இறைவனை நினைப்போம்.



நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: