Followers

Tuesday, November 12, 2013

நண்பர்களே உங்களின் கவனத்திற்க்கு


வணக்கம் நண்பர்களே!
                    பல நண்பர்கள் என்னிடம் பேசும்பொழுது எங்களுக்கு ராகு தசா நடைபெறவில்லை. எங்களுக்கு ராகு தசா நடைபெறுவதற்க்குள் நாங்கள் இந்த பூமியை விட்டு சென்றுவிடுவோம் என்று சொல்லுகிறார்கள். அவர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக இந்த பதிவு.

நமக்கு ஒரு கிரகம் தான் வேலை செய்யும் மீதி உள்ள கிரகங்கள் வேலை செய்யவில்லை என்று சொல்லமுடியாது உங்களுக்கு இந்த கிரகம் மட்டும் தான் வேலை செய்யும் என்று பாதி கிரகத்தை மட்டும் வைத்திருக்கலாமே. உங்களின் ஜாதகத்தில் அனைத்து கிரகத்தையும் போட்டு வைத்திருப்பதின் காரணம் அனைத்து கிரகத்தின் பலனும் உங்களுக்கு நடைபெறும்.

நமக்கு ராகு தசா நடைபெறவில்லை என்றால் நமக்கு நடைபெறும் தசாவில் அதன் புத்தியில் ராகு வந்து அதன் பலனை கொடுத்துவிடும். பதினெட்டு வருடங்கள் அனுப்பவிக்கவேண்டிய பலனை ராகுவின் புத்தியில் சேர்த்துக்கொடுத்துவிடும்.நல்லதாக இருந்தாலும் கெடுதலாக இருந்தாலும் அதிவேகமாக நடைபெறும்.

நமக்கு ராகு தசா நடைபெறவில்லை என்று சொல்லிக்கொண்டு இருக்கவேண்டாம். ராகு தசாவின் பலனை படித்துக்கொள்ளுங்கள் கண்டிப்பாக ராகுவின் புத்தியில் அந்த பலனை தந்துவிடும்.

ஒரு சிலர் ராகு தசாவை படிக்கவிலலை என்று தோன்றுகிறது. கண்டிப்பாக படியுங்கள். ராகு தசா பலன்கள் ராகுவின் புத்தியில் கொடுத்துவிடும்.

நண்பர்களே
          வியாழக்கிழமையில் இருந்து அதிக பதிவை தருகிறேன். வேலை அதிகமாக இருப்பதால் அதிகபதிவு கொடுககமுடியவில்லை. சோதிடபலனுக்காக காத்திருப்பவர்களுக்கு வியாழக்கிழமையில் இருந்து பலனை தருகிறேன். 

நாளை 13.11.2013 புதன்கிழமை அன்று திருப்பூரில் என்னை சந்திக்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

Unknown said...

வணக்கம் அண்னா.. எனது பெயர் பழனிகுமார்.. வயது 23.. எனக்கு இப்பொழுது ராஹு தசை சுக்கிர புக்தி நு சொல்ராங்க.. எனகு கன்னி ராசி மகர லக்னம்.. ராகு ராசியிலிருந்து 4ம் இடம் தனுசில் அதாவது லக்கினதிற்ற்கு 12ல் இருகிறது.. சனி 5ல் அதாவது லக்கினத்தில் இருக்கிரது.. குரு கடகத்தில் இருக்கிரது.. சூரியனும் புதனும் மீனத்தில்.. செவ்வாய் கேது மிதுனத்தில் இருக்கிரது அண்ணா..

என் குல தெய்வம் கோவில் கட்ட ஆரம்பித்து 6 வருடங்களுக்கு மேல் ஆகிரது.. இன்னும் எங்கள் குல தெய்வ கோவிலை கட்டி முடிக்க முடிய வில்லை.. என் குல தெய்வ கோவிலை எப்போது கட்டி கும்பாபிஷேகம் நடக்கும்.. எதும் குற்றம் குறைகள் இருக்கிரதா.. எப்பொழுது முடியும் என்று தயவு செய்து கூருங்கள்.. மருத்து விடாதிர்கள் அண்ணா.. plss..

rajeshsubbu said...

வணக்கம் என்னை தொடர்புக்கொண்டு தெரிந்துக்கொள்ளுங்கள். நன்றி