Followers

Friday, November 8, 2013

காயத்ரி மந்திரம் செய்பவர்களுக்கு


வணக்கம் நண்பர்களே!
                    காயத்ரி மந்திரம் செய்பவர்களின் கவனத்திற்க்காக ஒன்றை சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன். உங்களின் பிரச்சினையை உங்களால் தீர்க்கமுடியும் அதே நேரத்தில் முதலிலேயே பெரிய பிரச்சினையை எடுக்காதீர்கள். சின்ன சின்ன பிரச்சினையை எடுத்துக்கொண்டு செய்து வரவும்.

கொஞ்சநாள்கள் சென்ற பிறகு பெரிய பிரச்சினையை கையில் எடுத்துங்கள். முதலிலேயே பெரிய பிரச்சினையை எடுத்தால் நமக்கு பிரச்சினை தான் வரும். ஆன்மீகத்தில் முதல் நிலையில் இருப்பவர்கள் சின்ன சின்னதாக செய்துக்கொண்டு மேலே வரவேண்டும்.

ஒரு மனிதன் தானாகவே சக்தியுடையவனாக வருவதற்க்கு கொஞ்ச நாள்கள் ஆகும். அதுவரை நீங்கள் உருஏற்றிக்கொண்டே வரவேண்டும். தேவையில்லாமல் உங்களின் சக்தியை வீணாகவும் செலவு செய்யக்கூடாது.சேமித்துக்கொண்டே வரவேண்டும். 

உங்களுக்கு பெரியபிரச்சினை வரும்பொழுது அதனை நீங்கள் பயன்படுத்தலாம். அப்பொழுது உடனே பிரச்சினை தீர்ந்துவிடும். தென்னை மரத்தில் காய் பறிப்பதற்க்கு ஏறி தான் பறிக்கவேண்டும். கீழே இருந்துக்கொண்டு மேலிருந்து கீழே விழும் என்று பார்த்துக்கொண்டு இருந்தால் விழும் நேரத்தில் தான் விழும். நாம் ஏறிக்கொண்டு இருக்கிறோம்.பொறுமையாக ஏறி பறிப்போம். மெதுவாக ஏற கற்றுக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

antonyarun said...

Dear
Thanks for your wonderful advise

Anntony

rajeshsubbu said...

வணக்கம் தங்களின் வருகைக்கு நன்றி