Followers

Monday, November 25, 2013

ஆன்மீக அனுபவங்கள் 135


ணக்கம் ண்பர்களே!
                     நீங்கள் அம்மனை எடுப்பதற்க்கு காயத்ரி மந்திரம் போல் எதையாவது செய்து எடுப்பீர்களாக என்று ஒரு நண்பர் கேட்டார். கண்டிப்பாக காயத்ரி மந்திரம் செய்வது போல் செய்து எடுப்போம். எதுவும் பயிற்சி இல்லாமல் செய்யமுடியாது. குரு நினைத்தால் உடனே கொடுக்கலாம். அப்படி கொடுக்கும்பொழுது நம்மிடம் அதிகநாட்கள் ஒரு தெய்வம் நிற்காது.நாம் பயிற்சி செய்து எடுப்பது போல் மட்டுமே செய்ய வேண்டும்.

காயத்ரி மந்திரம் செய்யும்பொழுது நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதனை அப்படியே நாங்கள் செய்வோம். முதன் முதலில் ஒரு தெய்வத்தை எடுப்பது மிகவும் கடினமான வேலையாக மட்டுமே இருக்கும்.ரொம்ப கடினமான ஒரு வேலையாக அது இருக்கின்றது. ஏன் என்றால் அவ்வளவு எளிதில் அது நம்மிடம் வந்துவிடாது. 

முதலில் அந்த தெய்வம் நம்மை வந்து பார்க்கும் நம்மோடு வருவதற்க்கு அது ஒத்துழைக்காது.அந்த தெய்வம் நம்மிடம் வரும்பொழுது மட்டுமே நம்மால் அதனை வைத்து வேலை செய்யமுடியும்.ஒரு தெய்வம் வந்தவுடன் அதனை வைத்து வேலை செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்று.

ஒரு தெய்வத்தை வைத்துக்கொண்டு நடப்பது மிகவும் கடினமான ஒன்று. ஒரு மனிதன் தனியாக நடப்பதற்க்கு எளிது நம்மோடு ஒரு ஆள் இருந்தால் எப்படி இருக்கும். அது கடினமான ஒரு வேலையாக இருக்கின்றது. அது நம்மிடம் இருந்தால் மட்டுமே நம்மால் நினைத்தவுடன் வேலையை செய்து முடிக்கமுடியும்.

இப்பொழுது வியாபாரத்திற்க்கு என்று முன்பணம் வாங்காமல் செய்வது எல்லாம் இந்த காரணத்தால் மட்டுமே. என்னிடம் மட்டுமே அது நிற்க்கும் நான் சொல்லுவதால் பிறர்க்க உதவி செய்யும். இல்லை என்றால் கண்டிப்பாக அடுத்தவர்களுக்கு வேலை செய்யாது. அடுத்தவர்கள் என்னை கவனிக்கும் வரையில் தான் அங்கு வேலை நடைபெறும் என்று ஏமாற்றும் எண்ணம் வருகிறதோ அன்றே அது என்னிடம் வந்துவிடும். அதனால் தான் முதலில் பணம் வாங்காமல் செய்துக்கொடுத்துக்கொண்டு இருக்கின்றேன்.

நான் எடுத்த சக்தி என்னிடம் விடடு அவ்வளவு எளிதில் போகாது. என்நலன் கருதி எல்லா வேலையும் செய்யும். அதனால் ஒரு தெய்வத்தை எடுப்பது எல்லாம் மிகவும் கடினம். எடுத்துவிட்டால் நமக்கு நல்லது. மனிதன் சுயநலம் கருதி தான் தெய்வத்தை எடுக்கிறான் அதனால் முதலில் கஷ்டப்படவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: