Followers

Sunday, November 3, 2013

நம்பினால் நம்புங்கள்


வணக்கம் நண்பர்களே!
                    நம்பினால் நம்புங்கள் பார்த்த நீண்ட நாட்கள் சென்றுவிட்டது தொடர்ந்து பார்க்கலாம். இந்த விசயம் உங்களுக்கு படித்துவிட்டு ஆச்சரியமும் படலாம் அல்லது சிரிக்கவும் செய்யலாம் இப்படி எல்லாம் செய்யமுடியுமா என்று கூட கேட்க தோன்றும் ஆனால் நடந்தது உண்மையான ஒரு நிகழ்வு.

எனது குரு செய்த விசயத்தை உங்களிடம் சொல்லுகிறேன். ஒரு தம்பதினர் குழந்தை இல்லை என்று எனது குருவை சந்தித்துள்ளனர். சந்தித்து ஆசி பெற்றவுடன் அவர் இத்தனை நாட்களில் உங்களுக்கு குழந்தை இருக்கும் என்று சொல்லி அனுப்பிவிட்டார். அந்த தம்பதினர்களுக்கு குழந்தை உருவாகியது. கொஞ்ச நாட்களில் அந்த பெண்ணுக்கு ஏதோ ஒரு வியாதி என்று ஸ்கேன் எடுத்து பார்த்து சொல்லியுள்ளார்கள். மீண்டும் ஒரு ஸ்கேன் எடுத்து பார்த்துவிட்டு உறுதியாகிவிட்டால் அந்த குழந்தையை கலைக்கவேண்டும் என்று சொல்லியுள்ளார்கள் மருத்துவர்கள். அவரின் கணவர் குருவை சந்தித்து பேசியுள்ளார். 

குரு அதற்கு இன்று போய் ஸ்கேன் செய்து பார் என்று சொல்லியுள்ளார்.  சரி என்று போய்விட்டார். அதற்குள் குரு செய்ய வேண்டியதை செய்துவிட்டார். மருத்துவர்கள் சொன்ன நாள் போய் பார்த்தால் ஸ்கேனில் அந்த நோய் இருந்தது கண்டுபிடிக்கமுடியவில்லை. 

நடந்தது என்ன என்றால் ஸ்கேனுக்கு அந்த நோயை கண்டுபிடிக்கமுடியாதபடி செய்துவிட்டார். நான் அவரிடம் கேட்கும்பொழுது அறிவியல் சாதனங்களுக்கு தெரியாது போல் செய்துவிடவேண்டியது தான் என்று சொல்லி செய்துவிட்டார். நம்மால் நோயையும் குணப்படு்த்தமுடியும். அந்த பெண்ணையும் காப்பாற்றமுடியும். அந்த குழந்தையும் காப்பாற்றமுடியும். யாருக்கும் பிரச்சினை இல்லாமல் இதனை நடத்திகொடுக்கமுடியும் என்று செய்துக்கொடுத்தார்.அழிக்கவேண்டும் என்ற சொன்ன குழந்தையும் பிறந்தது. அந்த பெண்ணும் நன்றாக இருக்கிறார்.

ஆன்மீகத்தால் அறிவியலையும் ஏமாற்றமுடியும். அறிவியலால் கண்டேபிடிக்க முடியாதபடி செய்துவிடமுடியும்.ஆன்மீகத்தால் முடியாத காரியம் எதுவும் கிடையாது.

நம்பினால் நம்புங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: