Followers

Thursday, November 14, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 78



வணக்கம் நண்பர்களே !
                    அனைத்து வேலையும் முடித்துவிட்டு சென்னை வந்துவிட்டேன். தொடர்ந்து பார்க்கலாம். ராகு தசாவை எழுதிய நாட்கள் முதல் பல நண்பர்கள் தொடர்புக்கொண்டு அவர்களின் அனுபவத்தையும் என்னுடன் பகிர்ந்து வருகிறார்கள். ராகு தசாவில் அவர்கள் பட்டபாடு எல்லாவற்றையும் சொன்னார்கள். நான் ஒவ்வொரு தலைப்பையும் தேர்ந்தெடுத்து எழுதுவது எல்லாம் கடவுளாக பார்த்து தான் கொடுக்கிறார் என்று நினைக்கிறேன்.

எழுதும் அனைத்து தலைப்பும் எப்படியோ அனைவரின் மனதிலும் சென்று தொட்டுவிடுகிறது. ராகு தசா மட்டும் ஒருத்தருக்கு நடக்கவேண்டும் என்பதில்லை. ராகுவின் புத்தி நடந்தாலும் அதே பலனை நமக்கு கொடுத்துவிடும். ராகு தசாவின் பலன்கள் எப்படி பலனை தருகின்றதோ அதேப்போல் ராகுவின் நட்சத்திரத்தை உடையவர்களுக்கும் இருப்பார்கள்.

ராகு தசாவை மட்டும் ஒருவன் கடந்து வந்துவிட்டால் அவன் ஒரு ஞானி தான். அதற்கு என்று தனியாக பயிற்சி செய்யவேண்டியதில்லை. அந்தளவுக்கு வாழ்க்கையின் பாடத்தை ராகு தசா கற்றுக்கொடுக்கும்.

ராகு தசா ஏன் அந்தளவுக்கு நம்மை தாக்குகிறது என்று கேட்டால் அதற்க்கான பதில் நாம் தான் காரணம். நமது கலாசாரத்தை விட்டுவிட்டு அயல்நாட்டு கலாசாரத்தின் மீது நமக்கு மோகம் என்று வந்ததோ அன்றே ராகுவின் பிடியில் நாம் சென்றுவிட்டோம்.

உடையில் இருந்து உணவு வரை அயல்நாட்டு கலாசாரம் மீது நமக்கு அதிகமான ஆசை எழுகிறது. அந்த ஆசையில் மட்டும் தான் நமக்கு அனைத்தையும் ராகு கொடுக்கிறது. அயல்நாட்டு கலாசாரம் மீது ஆசை ஏற்பட்டதால் அந்த ஆசைக்கு நாம் பட்டு ஆகாவேண்டும் அல்லவா. ராகுவால் நாம் படுகிறோம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

B.Guru Venkatesh said...

yes its true sir
3 varusathuku munnadi ragu desai mudinjudhu naan college la seiyadha thappukulam enaku thittu avamam kedachudhu .eppuduyo thappichiten ragu desaila irundhu