Followers

Wednesday, January 29, 2014

எங்கே சென்றேன்?


ணக்கம் நண்பர்களே!
                    பல நண்பர்கள் இரண்டு நாட்களாக என்னிடம் சார் நீங்கள் எங்கு சென்றாலும் பதிவில் சொல்லிவிட்டு தான் செல்லுவீர்கள் திடீர் என்று சொல்லாமல் சென்று வந்திருக்கிறீர்களே என்று கேட்டார்கள்.

சொந்த வேலை என்று சொன்னாலும் அது நமது நண்பர்களுக்கு செய்யும் வேலையாக தான் இருக்கின்றது. பல இளைஞர்கள் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார் அவர்களுக்கு உதவவேண்டும் என்பதற்க்காக ஒரு சில ஊர்களுக்கு சென்று அவர்களுக்கு ஆன்மீகவழியில் உதவிக்கொண்டிருக்கிறேன். இந்த நண்பர்கள் அனைவரும் ஜாதககதம்பம் வழியாக வந்தவர்கள்.

பல இளைஞர்கள் வாழ்க்கையில் சின்ன தவறு செய்துவிட்டு கஷ்டப்படுகிறார்கள் அவர்களை போட்டு இந்த உலகம் கஷ்டப்படுத்துகிறது. அவர்களின் விதி அப்படி செய்திருக்கிறார்கள் யாரும் வேண்டும் என்றே செய்வது கிடையாது.

அப்படிப்பட்ட இளைஞர்கள் நமது ஜாதககதம்பத்தை படிக்கிறார்கள் நேராக வந்துவிடுகிறார்கள். வேறு வழி அவர்களுக்கு கிடையாது அதனால் அவர்களுக்கு தேவையான உதவியை செய்துக்கொடுக்கிறேன். ஆன்மீகவழியில் மட்டும் தான் செய்துக்கொடுத்துக்கொண்டிருக்கிறேன். இப்படி செய்யும்பொழுது நேரடியாக நான் வந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி கூப்பிடுகிறார்கள் அதனால் சென்று வருகிறேன்.

இப்பொழுது அவர்களுக்கு நான் எந்தவித உதவியையும் எதிர்பார்த்து நான் செய்வது கிடையாது. அவர்கள் எங்களை காப்பாற்றினால் உங்களுக்கு தேவையானதை நான் செய்து தருகிறேன் என்று சொல்லுகிறார்கள். சரி என்று நான் சொல்லிவிட்டு செய்து கொடுக்கிறேன்.

இந்த மாதத்தில் ஏகாப்பட்ட இளைஞர்கள் என்னை தேடி வந்திருக்கின்றனர் அவர்களுக்கு நான் செய்துக்கொண்டிருக்கிறேன். என்னால் முடிந்த உதவியை வழங்க அவர்களை தேடிச்செல்லுகிறேன்.அந்தந்த ஊர்களுக்கு செல்லும்பொழுது நமது நண்பர்களை போனில் தொடர்புக்கொண்டு அவர்களையும் சந்திக்கிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

Unknown said...

what kind of help u r doing to those youths? If u tell clearly then we can also will be benefited know?

rajeshsubbu said...

வணக்கம் அனைத்தும் தொழில் சம்பந்தப்பட்ட விசயங்களுக்காக செய்து தருகிறேன். நன்றி