Followers

Sunday, January 19, 2014

நீங்கள் உயர்ந்த நிலைக்கு வரவேண்டுமா?


வணக்கம் நண்பர்களே!
                    நான் எத்தனையோ தொழில் அதிபர்களிடம் பழகியிருக்கிறேன். அவர்களின் ஜாதகங்களையும் நான் பார்த்திருக்கிறேன் அவர்களின் ஜாதகங்கள் ஒன்றும் அந்தளவுக்கு மிகப்பெரிய ஜாதகங்கள் ஒன்றும் கிடையாது இருந்தாலும் அவர்களுக்கு எந்த வித பிரச்சினையும் இல்லாமல் வாழ்க்கை நல்ல முறையில் சென்றுக்கொண்டிருக்கிறது  அவர்கள் முன்னேற்றம் அடைந்தற்க்கு காரணமாக ஒரு சில விசயங்கள் இருக்கின்றன. 

அவர்கள் விடியற்காலையில் எழுபவர்களாக இருந்திருக்கிறார்கள். நம்மால் முடியாத ஒரு வேலையை ஏன் சொல்லுகிறீர்கள் என்று நினைப்பது புரிகிறது. அடுத்தாக அவர்கள் தினமும் பல மணி நேரம் ஒரு தெய்வத்திற்க்கு என்று பூஜை செய்திருக்கிறார்கள். குறைந்தது இரண்டு மணி நேரமாவது பூஜை செய்திருக்கிறார்கள்.

அவர்கள் குரு என்பவர் இல்லாமல் பல மணி நேரம் அவர்களே மனமுருகி ஒரு தெய்வத்திற்க்கு பூஜை செய்திருக்கிறார்கள். அப்படி அவர்கள் பல ஆண்டுகள் இதற்கு என்றே செலவு செய்து இன்று பல்வேறு முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள்.  ஒவ்வொரு பணக்காரர்களுக்கும் நூறு கோடிக்கு மேல் சொத்து இருக்கின்றது. 

ஒருவர் ஒரு நாளைக்கு பூஜை செய்தே பல்வேறு கோரிக்கைகளை கேட்கும் இந்த காலத்தில் இவர்கள் தினமும் இப்படி பூஜை செய்திருக்கிறார்கள். நடக்குமா நடக்காத என்ற ஆராய்ச்சி எல்லாம் செய்யாமல் இவர்கள் பூஜை செய்திருக்கிறார்கள் என்றால் அவர்களின் மனதின் நம்பிக்கை எப்படிப்பட்டது என்று நினைக்கும்பொழுது எனக்கே வியப்பாக இருக்கின்றது.

உங்களுக்கு எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என்றால் நீங்களும் இப்படி இறங்குவது நல்லது. கண்டிப்பாக மிகப்பெரிய முன்னேற்றத்தை நீங்கள் வணங்கும் தெய்வம் கொடுத்துவிடும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_6058.html) சென்று பார்க்கவும்... நன்றி...

rajeshsubbu said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார். தளத்தை பார்வையிட்டேன் நன்றி