Followers

Monday, November 25, 2013

குரு தசா பலன்கள் பகுதி 1


வணக்கம் நண்பர்களே!
                     இன்று முதல் குரு தசாவை தொடங்குவோம். ஒரு சுபரான கிரகத்தின் தசாவை பார்ப்பது நல்லது அல்லவா. இந்த சுபரினால் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் பல மாற்றங்களை ஏற்படுத்திக்கொடுக்கின்றது. 

நான் கூட அடிக்கடி சொல்லும் வார்த்தை குரு கிரகம் மட்டும் நன்றாக இருந்தால் போதும் மீதி உள்ள கிரகங்கள் கெட்டாலும் குரு கிரகத்தால் ஒரு மனிதன் நன்றாக வாழ முடியும் என்று சொல்லிருந்தேன். அப்படிப்பட்ட குரு தன்னுடைய தசாவில் எப்படி எல்லாம் பலனை தரும் என்பதை பார்ப்பதற்க்காக இந்த குரு தசாவை தேர்ந்தெடுத்தேன்.

ஒரு மனிதனின் ஜாதகமே பூர்வபுண்ணியத்தை வைத்து தான் பலன் தரும் என்று உங்களுக்கு தெரியும். பூர்வபுண்ணியத்தை காட்டக்கூடிய கிரகமான குரு கிரகம் எப்படி அதனுடைய தசாவில் பலன் தரும் என்பதை பார்ப்பதற்க்கு உங்களுக்காக இதனை எழுதுகிறேன்.

குரு கிரகம் ஒரு முழுசுபர் என்று சொல்லுகிறார்கள். இந்த சுபர் அனைவருக்கும் நன்மை தருமா எவர்க்கு நன்மை தரும் என்றும் பார்த்துவிடலாம். சோதிடத்தில் இருக்கும் கிரகங்களில் ஒரே நல்லவன் குரு. அவனே கெடும்பொழுது அவனின் தசா எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்க்கும் இதனை எழுதுகிறேன்.

நீங்கள் அனைவரும் இதனை படிக்கவேண்டும். எனக்கு குரு தசா நடைபெறபோவதில்லை அதனால் இதனை படிக்கதேவையில்லை என்று விட்டுவிடவேண்டாம். அனைத்து கிரகங்களும் சேர்ந்து தான் பலனை தரும். ஒவ்வொருவருக்கும் அதன் அதன் தசாவில் கண்டிப்பாக குரு புத்தியை நீங்கள் சந்திப்பீர்கள். அந்த புத்திக்காலங்களில் தனது பலனை கொடுத்துவிடுவார்.

நான் எழுதபோகும் குரு தசா அனைத்தும் எனது சொந்த அனுபவத்தில் இருந்து எடுத்து எழுதபோகிறேன். எனது அனுபவம் தான் ஜாதககதம்பம். அதேப்போல் குரு தசாவும் அனுபவமே. இந்த அனுபவம் உங்களுக்கு நிச்சயமாக நல்லதை தரும். 

புலிப்பாணி பாடல் மாதிரி பாராப்பா கேளப்பா என்று எல்லாம் இருக்காது. உங்களுடன் சாதாரணமாக உரையாடுதல் போல் தான் இருக்கும். தொடர்ந்து ஆதரவு தரும் நீங்கள் இதற்கும் ஆதரவு தர வேண்டுகிறேன்.


எல்லா வல்ல அங்காளபரமேஸ்வரி துணையோடு தொடங்குவோம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

10 comments:

Anonymous said...

நல்ல விதமாகத் துவங்கி ராகு தசாவை விட அதிக பதிவுகள்
இதற்குத் தர என் வாழ்த்துக்கள்.

அமுதா கிருஷ்ணா said...

kadaga lagnam...guru kadagathil..ponnuku age 23..guru dasa start achu...within 2 years now she is pilot in Airforce..when she was in school and college no plan for pilot and all. nijammave guru utchathil uyara paraka vachuduchu....

rajeshsubbu said...

//* ஸ்ரவாணி said...
நல்ல விதமாகத் துவங்கி ராகு தசாவை விட அதிக பதிவுகள்
இதற்குத் தர என் வாழ்த்துக்கள் *//

வணக்கம் தங்களின் வாழ்த்துக்கு நன்றி. முடிந்தவரை நிறைய பதிவுகள் தருகின்றேன்.
நன்றி

rajeshsubbu said...

//* அமுதா கிருஷ்ணா said...
kadaga lagnam...guru kadagathil..ponnuku age 23..guru dasa start achu...within 2 years now she is pilot in Airforce..when she was in school and college no plan for pilot and all. nijammave guru utchathil uyara paraka vachuduchu.... *//

வணக்கம் தங்களின் தகவலுக்கு நன்றி

அமுதா கிருஷ்ணா said...

குரு உச்சத்தில் இருந்தால் மற்றும் பத்தாது. அது கரெக்டான வயதில் தசையாக வரவேண்டும். அதற்கு முற்பிறவியில் புண்ணியம் செய்து இருக்க வேண்டும்.

குரு புத்தியும் இப்படி தூக்கி விடுமா.குரு தசை வராட்டி..

கார்த்திக் சரவணன் said...

ராகுவுக்குப் பின் குருதசை... எனக்கு லக்கினாதிபதி (தனுசு).. தொடருங்கள்....

rajeshsubbu said...

//* அமுதா கிருஷ்ணா said...
குரு உச்சத்தில் இருந்தால் மற்றும் பத்தாது. அது கரெக்டான வயதில் தசையாக வரவேண்டும். அதற்கு முற்பிறவியில் புண்ணியம் செய்து இருக்க வேண்டும்.

குரு புத்தியும் இப்படி தூக்கி விடுமா.குரு தசை வராட்டி *//

வணக்கம் தங்களின் தகவலுக்கு நன்றி. குரு புத்தியும் கண்டிப்பாக தூக்கிவிடும். அதனைப்பற்றி வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

rajeshsubbu said...

//* ஸ்கூல் பையன் said...
ராகுவுக்குப் பின் குருதசை... எனக்கு லக்கினாதிபதி (தனுசு).. தொடருங்கள்.... *//
தங்களின் வருகைக்கு நன்றி சார். நல்ல லக்கினமாக உங்களுக்கு அமைந்துள்ளது.

rajeshsubbu said...
This comment has been removed by the author.
KJ said...

Pothuvaga utcha dasai sariyana vayathil varuvathey naam seitha punniyam.