Followers

Saturday, January 7, 2012

சனி பெயர்ச்சி



வணக்கம் அனைத்து தளத்திலும் சனிபெயர்ச்சி பலன்கள் வந்தன நாமும் பலன்கள் எழுதகூடாது என்று முடிவெடுத்து பரிகாரம் கூறலாம் என்று நினைத்தேன்.

சனிபெயர்ச்சி பார்த்து அனைத்து பேரும் ஏதாவது ஒரு விதத்தில் பயந்தார்கள். இந்த ராசிக்கு நல்லது அல்ல கெட்டது நடக்கும் என்று ஒவ்வொரு நாளிதழிலும் தளத்திலும் பயமுறுத்திருப்பார்கள் அதனைப் பற்றி எல்லாம் கவலை படாதீர்கள் இறைவனிடம் சரண் அடைந்து மக்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கு உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் நல்லது செய்தால் சனி பகவான் கெடுதல் செய்யமாட்டார். நல்லதே தான் செய்வார்.

எவரிடம் சரண் அடையலாம் ?

இந்த உலகில் எட்டு திசையில் இருந்து நன்மை தீமை என்று அனைத்திற்க்கும் காரணமாக இருப்பவர்கள் அஷ்டதிக்பாலகர்கள். இவர்கள் இந்த பூலோகத்தில் வந்து வணங்கிய ஸ்தலம் திருவண்ணாமலை அருணாசல ஈஸ்வர். அஷ்டதிக்பாலகர்களே இவரை வணங்கினால் இவர் யார் என்று உங்களுக்கு கூற தேவையில்லை.

அதனால் உங்களுக்கு எந்த சனி பிடித்திருந்தாலும் அல்லது விட்டுருந்தாலும் திருவண்ணாமலை வந்து இவரிடம் சரண் அடையுங்கள். நீங்கள் நினைத்தது நடக்கும் இது அனுபவ உண்மை. எவ்வளவு பிரச்சனைகள் உடன் வந்து என்னை சந்திப்பவர்களுக்கு நான் கூறும் பரிகாரம் திருவண்ணாமலை கிரிவலம்.

சனிபெயர்ச்சி முடிந்து முதல் பௌர்ணமி வரும் 8-1-2012 அன்று வருகிறது கிரிவலம் நேரம் 8-1-2012 பகல் 1:19 ஆரம்பித்து 9-1-2012 பகல் 1:41 க்கு முடிகிறது. கிரிவலம் ஞாயிறு அன்று நடைபெறுகிறது. இந்த 2012 ஆங்கில வருடம் முதல் கிரிவலமும் இதுதான் அதனால் அனைத்து பேரும் கலந்துகொள்வோம். அண்ணாமலை அருளை பெறுவோம்.

இன்னும் சிறப்பு என்னவென்றால் ஞாயிறு அன்று ஆருத்ரா தரிசனம் இருக்கிறது. ருத்திரனின் உண்மையான இயல்பு தீ அல்லது நெருப்பு. அக்னி ஸ்தலம் ஆன அண்ணாமலையில் இருக்க எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும். அதனால் திருவண்ணாமலை வாருங்கள் புண்ணியத்தை கர்ம கணக்கில் கூட்டுங்கள்.

ஓம் நமசிவாய ஓம்


அன்புடன்

ராஜேஷ்சுப்பு.

Wednesday, January 4, 2012

சோதிட அனுபவ தொடர் 1



திரு. மணி அவர்கள் எனக்கு பின்னோட்டம் இட்டார் உங்கள் சோதிட அனுபவத்தை எழுதுங்கள் என்று அவர்களின் சோதிட ஆர்வத்தை நிறைவேற்றவும் அத்துடன் நீங்களும் தெரிந்துகொள்ளலாம் என்று ஒரு ஜாதகத்தை தருகிறேன்.

என்னிடம் சில தினங்களுக்கு முன்பு வந்த ஜாதகத்தை தருகிறேன்.


பிறந்த தேதி: 03-03-1973
பிறந்த நேரம் 5 :30 மாலை
பிறந்த ஊர்: விழுப்புரம்.


வாழ்க்கையை வெறுத்து இருப்பவரின் ஜாதகம் கிரகங்கள் இவரின் வாழ்க்கையில் விளையாடிய தாண்டவத்தை பாருங்கள்.

இவரின் ஜாதகம் கீழே



லக்னம் சிம்மம். சிங்கம் போன்ற சிம்ம லக்கினத்தை பெற்றவர் எதற்கும் அஞ்சா நெஞ்சம் வீரமும் இவரிடம் இருக்கிறது. எந்த மாதிரியான பிரச்சினை என்றாலும் யாரையும் பொருட்படுத்தாமல் செயலில் இறங்கி வெற்றியை காண்பவர். லக்கினாதிபதி களத்திரஸ்தானம் ஆன ஏழாம் வீட்டில் அமர்ந்துள்ளார்.

லக்கினாதிபதி சூரியன் இவர் சனியின் வீடாகியா கும்பத்தில் அமர்ந்திருக்கிறார். லக்கினாதிபதி ஏழாம் வீட்டில் அமர்ந்தால் மனைவியின் சம்பாத்தியத்தில் வாழ்பவராக இருப்பார்கள் ஆனால் லக்கினாதிபதி சூரியன் 7 ஆம் வீட்டில் இருப்பதால் இவருக்கு திருமணமே நடைபெறுவில்லை.

லக்கினாதிபதி சூரியன் இவர் சனியின் வீடாகியா கும்பத்தில் அமர்ந்திருக்கிறார். லக்கினாதிபதி ஏழாம் வீட்டில் அமர்ந்தால் மனைவியின் சம்பாத்தியத்தில் வாழ்பவராக இருப்பார்கள் ஆனால் லக்கினாதிபதி சூரியன் 7 ஆம் வீட்டில் இருப்பதால் இவருக்கு திருமணமே நடைபெறுவில்லை.

பொதுவாக 7 ஆம் வீட்டில் லக்கினாதிபதி இருந்தால் வாழ்க்கையில் பிற்பகுதியில் ஆசாபாசங்களில் விடுபட்டு சன்யாசி வாழ்க்கை நேரிடும் இது விதி. எத்தனை நாள் தான் மனைவியின சம்பாத்தில் வாழ்வது. மனைவி பணம் கொடுத்து விட்டு கணவனை உண்டு இல்லை என்று வார்த்தையாலே அபிஷேகம் செய்து விடுவார்கள். இந்த வாழ்க்கையை வேண்டாம் என்று சன்யாசியாகவே போய்விட வேண்டும் என்று சொல்வார்கள்.

என்னிடமே இந்த மாதிரி நபர்கள் சொல்லியுள்ளார்கள். சில பேர் என்னுடைய பிள்ளைகளுக்காகவே வாழ்கிறேன் என்று சொல்லியுள்ளார்கள். ஆனால் இந்த ஜாதகருக்கு திருமணமே ஆகவில்லை.

சூரியன் ஏழில் இருந்து லக்கினத்தை பார்ப்பதால் ஒன்று தலை வழுக்கை ஆக வேண்டும் அல்லது தலையில் அடிபடும். இவருக்கு தலையில் அடிப்பட்டு தலை மயிர் வெளியில் வராதிருக்க மொட்டை அடித்துக்கொண்டுள்ளார்.

பொதுவாக லக்கினாதிபதி ஏழில் அமர்ந்தாள் ஏழாம் பார்வையாக லக்கினத்தை பார்த்து நன்றாக வைத்துக்கொள்வார் என்று பொருள். ஆனால் இவரின் ஜாதகத்தில் சூரியன் ஏழில் சனியின் வீட்டில் அமர்ந்ததால் தலையில் அடிப்பட்டது. இவருக்கு எப்பொழுது அடிப்பட்டது என்று பின்பு பார்க்கலாம்.

அடுத்தது குடும்ப ஸ்தானம் என்று சொல்லக்கூடிய இரண்டாம் வீடு. அதன் அதிபதி புதன் இவர் மறைவிடம் என்று சொல்லக்கூடிய 8 ஆம் வீட்டில் மாந்தியுடன் இருக்கிறார். புதன் கெட்ட கிரகத்துடன் சேர்ந்தால் புதன் கெட்டுவிடும். அதுவும் மறைவு ஸ்தானத்தில்.

பொதுவாகவே இரண்டாம் வீடு கெட்டால் குடும்பம் அமையாது. இவருக்கும் திருமணமும் ஆகவில்லை வீட்டிலும் இல்லை. தனியாக வாழ்ந்து வந்தார் இப்பொழுது இளைய சகோதரிடம் இருக்கிறார்.

இரண்டாம் வீட்டிற்க்கு குருவின் 9 ஆம் பார்வை விழுகிறது. அதனால் ஒரளவு பொருளாதாரத்தில் நன்றாக இருக்கிறது. இரண்டாம் வீட்டு அதிபதி 8 ஆம் வீட்டில் மறைந்ததால் அதிகம் பேசுவதும் கிடையாது அப்படியே பேசினாலும் வார்த்தை தடிமனதாகத்தான் வருகிறது. பொதுவாக 2 ஆம் வீட்டு அதிபதி 8 ஆம் வீட்டில் இருந்தால் அவர்கள் பேசுவது இறப்பு சம்பந்தமாகதான் இருக்கும்.

ஞானிகளின் ஜாதகங்களில் இரண்டாம் வீடு 8 ஆம் வீட்டுடன் சம்பந்தம் பெற்று இருக்கும் ஒருவன் இறப்பை பற்றி சிந்தித்தால் மட்டுமே ஞானியாக முடியும். இறப்பை பற்றி பேசாத ஞானிகள் உண்டா.

சில பேருக்கு இரண்டாம் வீடு கெட்டும் குடும்ப வாழ்க்கை அமையும் அது எப்படி ?

சில பேர் ஜாதங்கள் அப்படி இருக்கும். ஆனால் அவர்கள் குடும்பத்திற்க்கு வெளியில் எங்கே ஆவது வேலை செய்வார்கள் அல்லது வெளிநாடுகளில் இருப்பார்கள் வேடந்தாங்களுக்கு பறவைகளில் வருவது போல் குடும்பத்திற்க்கு வந்து செல்வார்கள்.

சில பேர் திருமணம் முடிந்து 10 அல்லது 15 நாட்கள் மட்டும் தான் மனைவியுடன் இருப்பார்கள். வேலைக்காக வெளிநாடு சென்றுவிடுவார்கள். என்னடா இந்த மாதிரி எல்லாம் இருக்க என்று நினைக்க தோன்றும் இந்தமாதிரி நபர்கள் நிறைய பேர் உண்டு.

ஒருவருக்கு திருமணம் நடைபெற வைப்பது ஏழாம் வீடு. குழந்தை பாக்கியத்தை தருவது ஐந்தாம் வீடு ஆனால் இவை இரண்டு வீடுகளும் நல்ல பலன் தர வேண்டும் என்றால் இரண்டாம் வீடு நன்றாக இருக்க வேண்டும் பொதுவாக இரண்டாம் வீடு கெட்டால் திருமண வாழ்க்கை குழந்தை பாக்கியம் தடைபடுகிறது.

இவருக்கு இரண்டாம் வீட்டு காரத்துவும் நடக்க வேண்டும் என்றால் குரு பார்வையால் தான் முடியும். இரண்டாம் வீட்டிற்க்கு குருவின் பார்வை இருக்கிறது நல்லவன் ஒருவன் இருந்தாலே போதும் அனைத்திலும் வெற்றி கண்டுவிடலாம். ஆனால் இவருடைய துரதிஷ்டம் குரு மகரத்தில் நீசமாக அமர்ந்து உள்ளது. நீசம் ஆகி அமர்ந்ததால் சரியான காலத்தில் நடைபெறவேண்டியது காலம் தாழ்ந்துவிட்டது இதுவரை நடைபெறவில்லை.

குரு இவருக்கு 6 ஆம் வீட்டில் அமர்ந்துள்ளார். 6 ஆம் வீடு என்பது மிக மோசமான வீடு அந்த வீட்டில் சுபகிரகம் அமர்ந்தாள் மிக மோசம் குரு இவருக்கு 6 ஆம் வீட்டில் அமர்ந்துள்ளார்.

பொதுவாக கெட்ட கிரகங்கள் ஒருவனுக்கு தீங்கு செய்கிறது என்றால் போனால் போகட்டும் சாப்பிட சாப்பாடுனாலும் கிடைக்கும் ஆனால் குரு கெடுதல் செய்ய ஆரம்பித்தால் சாப்பிட சாப்பாடு கூட கிடைக்காது. அதுதான் குருவின் தன்மை.

அடுத்தது மூன்றாம் வீடு மூன்றாம் வீடு துலாம் ராசியாக இருக்கிறது அதன் அதிபதி சுக்கிரன் மூன்றாம் வீட்டு அதிபதி 7 ஆம் வீட்டில் இருக்கிறார்.

ஒரு இளைய சகோதரர் ஒருவர் நல்ல நிலைமையில் இருக்கிறார். இவர் சுயதொழில் செய்வதை விட ஏதாவது ஒரு வேலையில் சேருவது நல்லது. இவர் ஒரு பிரவேட் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். மூன்றாம் வீடு தைரிய ஸ்தானம் ஆகியால் எதிலும் தைரியமாக செயல்பட்டு வந்தார் மூன்றாம் வீட்டு அதிபதி சுக்கிரன் சில நேரங்களில் பெரிய ஆபத்துகளில் சிக்க நேரிடும். அப்படி தான் இவரும் ஒரு சிக்கலில் மாட்டினார்.இளைய சகோதரிடம் சுமுகமான உறவு உண்டு.

அடுத்தது நான்காம் வீடு விருட்சக ராசியாக அமைகிறது அதன் அதிபதி செவ்வாய். செவ்வாய் ஐந்தாம் வீட்டில் இருக்கிறார். நான்காம் வீடு தாய் பற்றிய வீடாக இருப்பதால் இவரின் தாயார் நலமாக உள்ளார். செவ்வாய் ஐந்தாம் வீட்டில் இருப்பதால் தாயாரின் தம்பி ஒருவர் நல்ல செல்வாக்காக இருக்கிறார். நான்காம் வீடு வாகனங்களை குறிப்பதால் வாகன யோகம் இருக்கிறது.

செவ்வாய் ஐந்தாம் வீட்டில் ராகுகூட இருக்கிறது. செவ்வாய் பாதிக்கபட்டு இருக்கிறது சொத்துகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சொந்த வீடு இடிக்கப்பட்டு வாடகை வீட்டில் இருக்கிறார். பொதுவாக நான்காம் வீடு செவ்வாய் வந்தால் நல்ல வீடு அமையும். ஆனால் செவ்வாய் பாதிக்கப்பட்டதால் இவருக்கு நிலையான வீடு அமையவில்லை.

ஜாதகம் என்பதே சென்ற பிறவியில் என்ன தவறு செய்து இந்த பிறவியை எடுத்து இருக்கிறது என்று பார்க்கதானே. சென்ற பிறவியில் நல்லது செய்தால் இந்த பிறவியில் நல்ல யோகத்துடன் பிறக்கலாம். சென்ற பிறவியில் தீமை அதிகம் இருந்தால் அவயோகத்துடன் பிறக்கும்.

சென்ற பிறவியை பற்றி எப்படி தெரிந்துகொள்வது?

அடுத்த பதிவில் பார்க்கலாம்.


அன்புடன்

ராஜேஷ்சுப்பு.

புதன் கடைசி பகுதி



புதனைப்பற்றி பார்த்துவருகிறோம். அந்த வரிசையில் புதன் குறிக்கும் சாதி வைசியர். என்னடா கிரகங்களிலும் சாதியா என்று கேட்கலாம். ஆமாம் கிரகங்களிலும் அந்த அந்த கிரகம் ஒவ்வொரு சாதியை குறிக்கிறது. இது எதனால் என்றால் பிரசன்ன சாதகம் பார்க்கும் போது இது பயன்படும். ஒரு பொருள் திருடு போகும் போது களவு போன பொருளை திருடியவன் இந்த சாதியை சேர்ந்தவன் என்று சொல்லுவதற்க்கு பயன்படும்.

8 ஆம் வீட்டில் புதன் இருந்தால் கல்வியில் தடை ஏற்படும். மாமன் இருக்கமாட்டார் அப்படியே மாமன் இருந்தாலும் அவர் மூலம் எந்த பயனும் இருக்காது. புதன் நல்ல முறையில் இருந்தால் உயில் மூலம் சொத்து வரும்.

9 ஆம் வீட்டில் உள்ள புதன் இருந்தால் செல்வம் நன்றாக இருக்கும். குழந்தை பாக்கியம் இருக்கும். நன்றாக கவர்ந்து இழுக்கும் பேச்சு திறன் இருக்கும். நன்றாக உயர்கல்வி படித்திருப்பார்கள். உயர்கல்வியில் சிறந்த விளங்க உதவி செய்வார்.

10 ஆம் வீட்டில் புதன் இருந்தால் அரசாங்க வேலையில் இருப்பார்கள். சொத்துகள் சேரும் ஏஜென்சி தொழில் லாபம் தரும். ஆடம்பர பொருட்கள் வீடு தேடி வரும். தொழில்கள் நிறைய செய்யவைப்பார். மாமன் மூலம் தொழில் அமையும். அறிவுக்கு முக்கியம் கொடுத்து செய்யும் தொழிலில் செய்வார்.

11 ஆம் வீட்டில் புதன் இருந்தால் பெரும் பணக்காரராக இருப்பார்கள் பெண்கள் மூலம் வசதி வாய்ப்பு வரும். மூத்த சகோரர் மூலம் வருமானம் வரும். நல்ல புத்திசாலி உள்ள நண்பர்கள் கிடைப்பார்கள்.

12 ஆம் வீட்டில் புதன் இருந்தால் படிப்பறிவு இல்லாமல் போகும். வாழ்க்கையில் கஷ்டபடுவார்கள் தோல்வியாதி உள்ள பெண்ணிடம் தொடர்பு இருக்கும். பெண்கள் மூலம் விரையம் ஏற்படும். நல்ல துப்பறியும் திறன் இருக்கும்.

மேலை சொன்ன பலன்கள் பொதுவானவைதான். புதன் நல்ல முறையில் இருக்கும் போது இந்த பலன்கள் நடைபெறலாம். புதன் கெட்டால் இதற்க்கு நேரமாறான பலன்கள் நடைபெறும்.

அன்புடன்

ராஜேஷ்சுப்பு.



Tuesday, January 3, 2012

புதன் தொடர்ச்சி 1





கடந்த பதிவில் புதனைப் பற்றி பார்த்தோம். இப்பதிவிலும் புதனைப் பற்றி பார்க்கலாம். புதன் மிதுனம் ராசிக்கும் கன்னி ராசிக்கும் அதிபதி. புதன் ஒரு இரட்டை கிரகம் இந்த ராசியில் பிறந்தவர்களைப் பற்றி பார்த்தீர்கள் ஆனால் இவர்கள் உள் ஒன்று வைத்து வெளியில் ஒரு மாதிரி பேசுவார்கள். இரட்டை வேஷம் மிகுதியாக இருக்கும்.

நீங்கள் இவர்களிடம் போய் எதனை கேட்டாலும் உங்களிடம் ஒன்று பேசிவிட்டு உங்கள் நண்பர்களிடம் உங்களைப் பற்றி கேட்டு தெரிந்துக்கொள்வார்கள். புதனின் இயல்பு இது. மிதுனம் கன்னி ராசிகாரர்கள் காமத்தில் மிகுதியான ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள். அதனால் இவர்களுக்கு குழந்தைகள் பிறப்பது தாமதமாகிறது.

முறையற்ற தொடர்பு கர்மத்தை விலை கொடுத்து வாங்குவது போல் தான் இதனை இவர்கள் தவிர்க்க வேண்டும். நான் பார்த்த இந்த ராசிகாரர்களின் ஜாதகங்களில் மிகுதியான நபர்களின் மகன் மற்றும் மகளுக்கு திருமணம் நடைபெறுவது தாமதமாகிறது.

4 ஆம் வீட்டில் புதன் இருந்தால் நல்ல கல்வியாற்றலைத் தருவார். தாய்வழி மாமன் வகையில் உதவி கிடைக்கும். வாகனம் வகையில் நல்ல வருமானம் வரும். ஒரு வாகனம் வாங்கினால் உடனே அடுத்த வாகனம் வாங்குவார். நான்காம் வீடு வீட்டை குறிப்பதால் வீடு வாங்கும் யோகம் புதனால் கிடைக்கும். ஒரு வீட்டை வாங்க ஏற்பாடு செய்தால் இரண்டு வீடு வாங்குவார்கள். நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.

5 ஆம் வீட்டில் புதன் இருந்தால் நல்ல கவிதை எழுதுவார். நல்ல வேடிக்கையாக பேசுவார். அரசாங்கம் மூலம் நல்ல பதவிகள் வரும். பெரியவர்கள் மூலம் நல்ல பதவி, மரியாதை கிடைக்கும். நல்ல தந்திர வேலைகள் தெரியும்.

6 ஆம் வீட்டில் புதன் இருந்தால் மாமன் வழியில் ஒருவர் மிகபிரபலமாக இருப்பர். மாமனின் உதவி கிடைக்கும். ஆறாம் வீடு சத்ரு ஸ்தானம் என்று அழைக்கப்படுவதால் விரோதிகள் வராமல் இருக்க வைப்பார். ஆனால் சச்சரவு இருக்கும். பேச்சு சில நேரங்களில் கலவரத்தை உண்டாக்குவது போல் இருக்கும்.

7 ஆம் வீட்டில் புதன் இருந்தால் நல்ல அழகான மனைவி அமையும். அவர் மூலம் வருமானம் வரும். வியாபாரத்தில் நல்ல நட்பு கிடைக்கும். கலைகளில் ஆர்வம் இருக்கும். நல்ல ஆயுள் கிடைக்கும். மாமன் மகள் கூட மனைவியாக வர வாய்ப்பு இருக்கிறது. அல்லது திருமண விஷயங்களில் மாமன் உதவி கொண்டு திருமணம் வரும். மாமனே பெண் பார்க்கலாம்.

மேலை சொன்ன அனைத்தும் பொதுபலன்கள் தான் எனக்கு மிதுன ராசி கன்னி ராசி நீங்கள் சொன்னது போல் நடக்கவில்லை என்று சொல்லாதீர்கள் ஜாதகங்களில் உள்ள கிரக நிலைகளை பொருத்து அமையும்.

புதனைப்பற்றிய பல தகவல்களுடன் அடுத்த பதிவில் பார்க்கலாம்.

அன்புடன்

ராஜேஷ்சுப்பு.

Monday, January 2, 2012

புதன்



புதனை பற்றிய பாடம் இவர் தான் சோதிட சாஸ்திரத்திற்க்கு காரகம் வகிப்பவர். இவர்தான் புத்திகாரகன் என்று அழைக்கப்படுகிறார்.சோதிட சாஸ்திரத்திற்க்கு நினைவாற்றல் மிக முக்கியம் இல்லை என்றால் சோதிடம் படிக்க இயலாது.

அனைத்தும் நினைவில் இருந்தால் தான் ஜாதகம் பார்க்கும் போது அனைத்து பலன்களும் வந்து அருவியாக கொட்டும். இல்லை என்றால் வாடிக்கையாளாரிடம் பல்பு வாங்கவேண்டியது தான்.

புதன் வேறு எதற்கு எல்லாம் காரகன் ஆகிறார் என்று பார்க்கலாம். நல்ல புத்தி கூர்மைக்கு அதிபதி இவர் தான். அதனால் தான் இவரை கல்விகாரகன் என்று அழைக்கிறோம்.

ஜாதகத்தில் நல்ல முறையில் இருந்தால் தான் படிக்க முடியும். சில பேருக்கு புதன் நல்ல அமையும் சிறந்த அறிவாளியாக இருப்பார்கள். ஜாதகத்தில் நல்ல முறையில் இருந்தால் தான் படிக்க முடியும். சில பேருக்கு புதன் நல்ல அமையும் சிறந்த அறிவாளியாக இருப்பார்கள்.

வியாபாரத்திற்க்கும் இவர் தான் காரகம் வகிக்கிறார். சிறந்த முறையில் ஒருவர் வியாபாரம் செய்வதற்க்கு புதன் தான் காரணம். அனைத்து தொடர்புகள் இருந்தால் தான் ஒருவர் வியாபாரத்தில் கொடிகட்டி முடியும். புதன் நல்ல முறையில் இருக்கும் ஒருவர் அனைத்து தொடர்புகளும் கிடைக்கும்.

நல்ல பேச்சுக்கும் இவர் தான் காரகம் வகிப்பவர். புதன் நல்ல நிலையில் இருக்கும் போது பார்த்தால் திட்டமிடுதல் அனைத்து பேருக்கும் சிறந்த முறையில் நன்மை பயக்கும் விதத்தில் இருக்கும். நல்ல வழியில் திட்டமிடுதல் புதன் நல்ல நிலையில் இருக்கும் போது இந்த மாதிரி நடக்கும். உடலில் நல்ல தோல் நிலைக்கும் இவர் தான் காரகம் வகிக்கிறார்.

புதன் கெட்டால் என்ன நடக்கும்.

புத்தி கெட்டுவிடும் படிப்பது எதுவும் நினைவில் இருக்காது இரண்டாம் வீட்டில் கெட்டால் பேச்சு ஒழுங்காக வராது திக்கி திக்கி பேசுவார்கள் அல்லது பேச்சு சுத்தமாக வராது. அது புதன் உடன் சேரும் கிரகத்தைப் பொறுத்தது.

புதன் கெட்டால் திட்டமிடுதல் அனைத்தும் வில்லங்கமாகதான் இருக்கும். புதனுடன் சேரும் கெட்ட கிரகங்களை பொருத்து வில்லங்கம் அமையும். ஞாபகம் மறதி ஏற்படும். தொழுநோய் தாக்கும்

இப்பொழுது புதன் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன நடக்கும் என்று பார்க்கலாம்.

1 ஆம் வீட்டில் புதன் இருந்தால் அதாவது லக்கினத்தில் இருந்தால் நல்ல புத்தி உடன் இருப்பார்கள் நல்ல பேச்சு இருக்கும் பேச்சில் இனிமை இருக்கும். நல்ல உலக விஷயங்களில் சிறந்த அறிவு இருக்கும். நல்ல சுறுசுறுப்பாகவும் நல்ல தோற்றப்பொழிவுடன் இருப்பார்கள். லக்கினத்தில் இருந்து ஏழாம் வீட்டைப் பார்ப்பதால் மனைவியுடன் பிடிப்புடன் இருப்பார்கள்.

2 ஆம் வீட்டில் புதன் இருந்தால் பேச்சு நன்றாக இருக்கும் இவரின் பேச்சுக்கு மதிப்பு இருக்கும். தந்தையிடம் இவருக்கு மதிப்பு இருக்கும் குடும்பம் சிறந்து விளங்கும். செல்வ வளம் நன்றாக இருக்கும்.

3 ஆம் வீட்டில் புதன் இருந்தால் இளைய சகோதர சகோதரிகள் நிறைய பேர் இருப்பார்கள். அவர்களில் இரட்டை பிறப்பு உள்ளவர்களாக இருக்க வாய்ப்பு உண்டு. நல்ல ஆயுள் இருக்கும். வியாபார நுட்பம் ஏற்படும்.

புதனைப்பற்றிய பல தகவல்களுடன் அடுத்த பதிவில் பார்க்கலாம்.

அன்புடன்

ராஜேஷ்சுப்பு

Saturday, December 31, 2011

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


அனைத்து நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். உங்களின் குடும்பத்தினருக்கும் நல்வாழ்த்துக்கள். இந்த நல்வேளையில் இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு நற்பயனை வழங்குமாறு ஆண்டவனை பிராத்திக்கிறேன்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, December 29, 2011

செவ்வாய் நிறைவு பகுதி




செவ்வாய் 7 ஆம் வீட்டில் இருந்தால் 7 ஆம் பார்வையாக லக்கினத்தை பார்ப்பதால் தலையில் அடிபடும். திருமண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படும். செவ்வாய்க்கு நட்பு வீடாக இருந்தாலும் சொந்த வீடாக அல்லது உச்ச வீட்டில் இருந்தால் பிரச்சினைகள் இருக்காது. பெண்களால் பிரச்சினை உண்டாகும். இவரிடம் தொடர்பு வைத்திருப்பவர்கள் முன்கோபக்காரர்களாக இருக்ககூடும்.

8 ஆம் இடத்து செவ்வாயினால் கண் பார்வை கெடும். ஜெயிலுக்கு செல்ல நேரிடும். இரத்த சம்பந்தமாக பிரச்சினை ஏற்படும்.கடன் பளு ஏற்படும். ஆயுள் குறையும். கோபம் அதிகம் வரும். சகோதர்களின் நலம் கெடும். பொருளாதாரம் அதிகம் பாதிக்கப்படும்.

9 ஆம் இடத்தில் உள்ள செவ்வாய்யால் தந்தையாரின் நலம் கெடும். தந்தைக்கும் இவருக்கும் சண்டை சச்சரவு இருந்து கொண்டே இருக்கும். 9 ஆம் இடத்தில் உள்ள செவ்வாய்யால் தந்தையாரின் நலம் கெடும். தந்தைக்கும் இவருக்கும் சண்டை சச்சரவு இருந்து கொண்டே இருக்கும். நற்பணிகள் செய்யமாட்டார். கொடிய செயல்கள் செய்ய வைப்பார். 9 ஆம் வீட்டு செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்றால் நல்ல நிலைக்கு உயர்த்துவார்.

10 ஆம் இடத்தில் உள்ள செவ்வாய்யால் கனரக வாகனங்கள் தொழிற்சாலையில் உயர்ந்த பதவியில் அமர வைப்பார். பதவியில் தலைமை இடம் தேடி வரும். நெருப்பு மூலமாகவும் வருமானம் பெருகும். பெரிய மனிதர்களிடம் இருந்து பெரிய பொறுப்புகள் தேடி வரும்.

11 ஆம் இடத்து செவ்வாய் பெரும் பணக்காராக மாற்றுவார். மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். பெரும் செலவு செய்து தொழிலில் முன்னேற்றம் காண வைப்பார். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். மூத்த சகோதர சகோதரிகளிடம் சண்டை சச்சரவு ஏற்படும்.

12 ஆம் வீட்டு செவ்வாயினால் கெடுதல் அதிகம் இருக்கும். சிறை செல்ல நேரிடும். பெண்கள் மூலம் பொருளாதார இழப்பு ஏற்படும். மர்ம விலங்கினால் ஆபத்து ஏற்படும்.

அன்புடன்

ராஜேஷ்சுப்பு