Followers

Saturday, March 30, 2019

அம்மன் கோவில் கட்டும்பணி


வணக்கம்!
          நமது அம்மன் கோவில் கட்டும்பணிக்கு என்று தேவையானவை என்ற பதிவை போட்டுருந்தேன். பலர் தங்களின் விருப்பத்தை தெரிவித்து இருந்தனர். ஒரு சிலர் என்னுடைய மற்றும் நான் வேலை செய்யும் அலுவலகத்தில் இருந்தும் வசூலித்தும் பணம் அனுப்பதாக சொல்லிருந்தனர். இந்தளவுக்கு தங்களின் ஈடுபாடு இருப்பது வரவேற்கதக்க ஒன்று. 

உங்களின் விருப்பத்திற்க்கு ஏற்றவாறு நான் செயல்புரிவேன். உங்களின் நட்பு வட்டாரம் மற்றும் அலுவலக வட்டாரத்தில் இருந்து வசூல் செய்து அனுப்புவதாக இருந்தால் உங்களுக்கு தேவைப்பட்டால் வசூல் புக்கையும் அனுப்பி வைக்கிறேன். அதிலேயே நீங்கள் வசூல் செய்துக்கொள்ளமுடியும். தேவைப்படுகின்றவர்கள் தொடர்புக்கொள்ளவும். 

அம்மன் சிலை செய்வதற்க்கு என்ற சென்னை நண்பர் வழியாக அங்கு விசாரிக்க சொல்லிருந்தேன். அம்மன் சிலை மற்றும் பரிவார தெய்வங்கள் சிலையே ஒரு பெரிய தொகையாக தான் வருகின்றன. அவர் விசாரித்து சொன்னதில் தெரிகின்றது. அம்மன் சிலை குறைந்தது ஒரு லட்சத்தில் தொடங்கி ஐந்து லட்சம் வரை இருப்பதாக சொன்னார். சிலை செய்யும்பொழுது அதனைப்பற்றி பதிவில் சொல்லுகிறேன்.

ஒரு சிலர் ஒரு பொருளை மட்டும் வாங்கிக்கொடுக்க விருப்பப்படுவார்கள். உதாரணத்திற்க்கு ஒரு லோடு செங்கல் மட்டும் நான் வாங்கிக்கொடுக்கிறேன் என்றால் அவரின் பணத்தில் அந்த பொருளை நான் வாங்கிக்கொடுத்துவிடுகிறேன். நீங்களே ஆர்டர் செய்தும் இதனை வாங்கிக்கொடுக்கலாம். உங்களின் விருப்பம் போல செய்யப்படும்.

ஜாதக கதம்பத்தை படித்த மற்றும் தொடர்ச்சியாக தொடர்பில் இருப்பவர்களும் கண்டிப்பாக இந்த நல்ல பணிக்கு உதவிடுங்கள் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். விரைவில் ஆரம்பிக்கவேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறேன் மற்றும் உங்களின் உதவியையும் எதிர்பார்த்து இருக்கிறேன். கோவில் கட்டும் பணியை நேரில் வந்து பார்க்கவேண்டும் என்றாலும் வரலாம். உங்களின் ஈடுபாட்டை அதிலும் காண்பிக்க வேண்டுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

ஏழரைச்சனி பொன்னான காலம்


வணக்கம்!
          ஒருவரின் வாழ்நாளில் இரண்டாவதாக வரும் ஏழரைச்சனி அவரை மிகப்பெரிய அளவில் உயர்த்தி வைத்துவிடுகின்றது. ஏழரைச்சனி என்றாலே பயப்பட்டுக்கொண்டு தான் இருப்பார்கள் ஆனால் உண்மையில் நடப்பது என்பது வேறு விதமாக இருக்கின்றது.

ஏழரைச்சனி இரண்டாவது சுற்று வரும்பொழுது ஒருவர் மிகவும் பக்குவப்பட்ட ஒரு நிலையில் இருக்கின்றனர். இந்த நேரத்தில் இவர்கள் அதிகமாக வேலை செய்ய ஆரம்பித்து தன்னுடைய முழுதிறனையும் வெளிகாட்ட தொடங்கிவிடுகின்றனர்.

உங்களின் அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் சற்று நன்றாக கவனித்து பார்த்தால் அவர்கள் நல்ல நிலைக்கு வந்தது அனைத்தும் இந்த ஏழரைச்சனியின் காலக்கட்டத்தில் தான் இருக்கும். ஏழரைச்சனி காலக்கட்டத்தில் தன்னை பெரியளவில் உயர்த்தி காட்டிக்கொண்டு இருப்பார்கள்.

ஏழரைச்சனியின் காலத்தில் ஒருவேளை ஒரு சிலருக்கு பிரச்சினை என்றால் அவர்கள் கொஞ்சம் பொறுமை காத்து இருந்தாலே போதும் அடுத்த இரண்டரை வருடங்களுக்கு பிறகு ஒரு நல்ல நிலையை கொடுக்கலாம். நல்ல வாய்ப்புக்கள் எங்கு கிடைக்கின்றன என்பதை தேடிக்கொண்டே இருந்தால் போதுமானது.

எப்படி பார்த்தாலும் ஏழரை வருடத்தில் ஒரு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுக்காமல் மட்டும் சனி விட்டுவிடாது. மோசமான நிலையில் சனி ஜாதகத்தில் அமர்ந்தால் கூட நல்லதை செய்துவிட்டு தான் செல்லும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, March 29, 2019

வெள்ளிக்கிழமை வழிபாடு


வணக்கம்!
          பலர் வெள்ளிக்கிழமை தினத்தை ஒழுங்காக பராமரித்து வருகின்றனர். அதாவது வெள்ளிக்கிழமை அன்று வீட்டை சுத்தம் செய்து வீட்டில் உள்ள பூஜையறை சுத்தம் செய்து ஒரு தீபமாவது ஏற்றி தங்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்திக்கொண்டு வருகின்றனர். வெள்ளிக்கிழமை என்பது ஒருவருக்கு செல்வவளத்தை தருவதில் முக்கியபங்கு வகிக்கின்றது.

வெள்ளிக்கிழமையை பிற மதத்தில் முக்கிய நாளாக எடுத்து வைத்திருந்தாலும் நம்ம ஆட்களும் இந்த நாளை கொண்டாடி வருகின்றனர். ஜாதககதம்பத்தில் பல இடத்தில் வெள்ளிக்கிழமையை நன்றாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று சொல்லிருக்கிறேன்.

வெள்ளிக்கிழமை மதியம் என்பது மிக மிக முக்கியமான ஒரு நேரமாகவே கருதப்படுகின்றது. வெள்ளிக்கிழமை மதிய தொழுவது கூட முஸ்லீம் மக்களுக்கு முக்கியமாக ஒன்றாகவே கருதப்படுகின்றது. இந்த மதியத்திற்க்கு மேல் நேரத்தில் உங்களின் குலதெய்வத்தை நீங்கள் கும்பிட்டாலும் உங்களுக்கும் ஒரு நல்ல வாழ்க்கை என்பது அமையும்.

வெள்ளிக்கிழமை மதிய நேரத்தில் தைலக்குளியலைப்பற்றியும் நான் சொல்லிருக்கிறேன். உங்களால் முடிந்தளவுக்கு பூக்களை வாங்கிக்கொண்டு உங்களின் குலதெய்வத்திற்க்கு மற்றும் உங்களின் பூஜையறையில் வைத்து வணங்கினாலும் போதும் உங்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

நாம் கோவிலுக்கு தான் செல்லவேண்டும் என்பதில்லை உங்களின் வீட்டை நீங்கள் சுத்தமாக வைத்திருந்து அதோடு உங்களின் பூஜையறையும் சுத்தமாக வைத்திருந்து நீங்கள் நல்ல எண்ணத்தோடு நீங்கள் பூஜை செய்தால் உங்களுக்கு அனைத்தும் கிடைக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, March 28, 2019

தனுசு இராசி


வணக்கம்!
          தனுசு இராசியைப்பற்றி கொஞ்சமாக பார்க்கலாம். தனுசு இராசி குரு பகவானின் இராசி. குரு பகவானின் இராசி என்பதால் பணம் நிறைய புழுங்கும் என்ற நம்பிக்கையை சோதிடர்கள் விதைத்ததால் இவர்களின் எண்ணம் பணத்திலேயே இருப்பார்கள்.

பல தனுசு இராசிக்காரர்கள் பணத்திற்க்கு நிறைய கஷ்டப்பட்டுக்கொண்டே இருப்பதை நான் அறிவேன். இவர்களின் குணங்கள் எப்படியும் இரண்டை தன்மையிலேயே இருக்கும். இவர்கள் ஒரு பெண்ணை திருமணம் செய்தாலும் தனியாக யாருக்கும் தெரியாமல் ஒரு பெண்ணை வைத்திருப்பார்கள்.

பணம் என்று ஓடினாலும் பணவரவு அந்தளவுக்கு இருக்காது. நிறைய திட்டம் மனதில் வைத்திருப்பார்கள். நான் பார்த்த வரையில் லட்சம் காேடி பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற திட்டத்தை போட்டுக்கொண்டு இருப்பவர்கள் இந்த இராசிக்காரர்களாகவே இருப்பார்கள்.

நிறைய பணத்தை வீணாகவே இந்த திட்டத்திற்க்கு பயன்படுத்துவார்கள். திட்டம் என்பது அந்தளவுக்கு ஒர்க்கவுட் ஆகாது இருந்தாலும் கடன் வாங்கியாவது இதற்க்கு பணத்தை செலவு செய்து கஷ்டப்படுபவர்களாக இருப்பார்கள்.

நல்ல தைரியத்தோடு செயல்படுபவர்களாக இருப்பார்கள் அதே நேரத்தில் ஆதீத தைரியம் ஆபத்தையும் இவர்களுக்கு கொடுத்துவிடுகின்றது. நிறைய ஏமாற்றங்களை சந்திப்பவர்களாகவே இந்த இராசிக்காரர்கள் இருக்கின்றனர்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, March 27, 2019

அம்மன் கோவில் கட்டுவதற்க்கு தேவையானவை


வணக்கம்!
          நமது அம்மன் காேவில் கட்டுவதற்க்கு ஸ்தபதி கொடுத்த மெட்டிரியலை அப்படியே கொடுத்து இருக்கிறேன். இதனை நீங்கள் வாங்கி கொடுத்தாலும் அப்படியே ஏற்றுக்கொள்ளப்படும் அல்லது நீங்கள் பணம் அனுப்பியும் இதனை வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொன்னாலும் அதனை வாங்கிக்கொள்ளப்படும். இதனை வெளியில் சொல்லுவதற்க்கும் உங்களுக்கு ஏதுவாக இருக்கும் என்பதால் இதனை பதிவில் சொல்லுகிறேன். 

மணல் 15 லோடு
செங்கல் 5 லோடு
சிமெண்ட் 1000 மூட்டை
ஜல்லி 1 1/2 3 லோடு
ஜல்லி 3/4 3 லோடு
முண்டுகல்(கருங்கல்) 5 லோடு
கம்பி தேவைக்கு
மரம்  
தளவாட சாமான்கள்


மேலே சொன்ன பொருட்களின் மொத்தவிலை 12 முதல் 15 லட்சம் வரை செலவு ஆகும். ஸ்தபதிக்கு  கட்டும் பணிக்கு 12 லட்சம் கொடுக்கவேண்டும். கோவில் கட்டும்பணிக்கு கூலி என்பதும் பெரிய செலவாக வருகின்றது.

கோவில் கட்டிகிறேன் என்று சொன்னவுடன் பலர் நான் சிலை வாங்கி தருகிறேன் என்று சொன்னார்கள். கடைசியில் தான் சிலை தேவைப்படும் முதலில் கட்டுமானபணி நன்றாக நடைபெறுவதற்க்கு உதவுகள். சிலை தேவைப்படும்பொழுது சொல்லுகிறேன். அனைவரும் விரைந்து செயல்பட அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, March 26, 2019

கிரகங்களை மீறி செயல்படுவது எப்படி?


வணக்கம்!
           ரிஷபஇராசியைப்பற்றி எழுதியவுடன் பல நண்பர்கள் தொடர்புக்கொண்டு என்ன இப்படி சொல்லிவிட்டீர்கள் அதே நேரத்தில் அப்படி தான் என்னுடைய வாழ்க்கையும் இருக்கின்றது. இதற்கு பரிகாரத்தையும் சொல்லுங்கள் என்று சொன்னார்கள்.

பரிகாரம் என்பது உங்களின் இராசிநாதனை குளிர்ப்பது மட்டுமே பரிகாரமாக செய்யவேண்டும். சுக்கிரனுக்கு வெள்ளிக்கிழமை தோறும் ஒரு விளக்கு ஏற்றி வழிபடவேண்டும். கொஞ்சம் அதிகமாக செலவு செய்து பரிகாரம் செய்யவேண்டும் என்றால் ஒரு விளக்கோடு ஒரு அர்ச்சனையும் உங்களின் பெயர்க்கு செய்துக்கொள்ளுங்கள்.

ஜாதககதம்பத்தில் இத்தனை வருடங்கள் எழுதிக்கொண்டு இருப்பதில் ஒரு முக்கிய கருத்தை சொல்லிக்கொண்டே வருவேன் அந்த கருத்தை நாம் நல்ல உள்வாங்கி செயல்பட்டாலே போதுமானது. அதாவது ஒரு குணம் உங்களுக்கு வருகின்றது என்றால் அந்த குணத்தை உருவாக்குவதில் முக்கியபங்கு வகிப்பது உங்களின் ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் தான் அப்படி உருவாக்கிக்கொண்டு இருக்கின்றது.

உங்களின் ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் உங்களை ஒரு பகடை காயாக பயன்படுத்தி வெளிப்படுத்திக்கொண்டு இருக்கின்றது. ஒரு ஆன்மீகவாதியாக இருந்துக்கொண்டு நீங்கள் கிரகத்திற்க்குள்ளான குணத்தில் மாட்டிக்கொள்ளகூடாது அதனை மீறி நீங்கள் செயல்படவேண்டும்.

ஒவ்வொரு இராசியும் அந்தந்த குணத்தை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கும் இதனை மீறி அந்த குணத்தை நீங்கள் வெளிப்படுத்திக்கொண்டு இருக்ககூடாது என்பதை மட்டும் மனதில் வையுங்கள். நீங்கள் அனைவரும் ஆன்மீகவாதி என்பதை நான் அறிவேன் அதனால் இந்த குணம் நம்ம இராசியில் இருந்து வருகின்றது என்பதை அறந்து அதனை தவிர்த்துவிட்டு ஆன்மீகவாதியாக இருங்கள் என்பதை மட்டும் உங்களிடம் சொல்லுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, March 25, 2019

குலதெய்வம்


வணக்கம்!
          நாம் குலதெய்வத்தைப்பற்றி நிறைய பதிவை தந்திருக்கிறோம். குலதெய்வத்திற்க்கு உண்டான பச்சைப்பரப்புதல் நம்மால் பரிந்துரைக்கப்பட்டு நிறைய பேர்கள் இதனை தொடர்ச்சியாக செய்து வருகின்றனர். பல சோதிடர்கள் கூட இந்த பரிகாரத்தை பரிந்துரை செய்வதாகவும் தெரிகின்றது.

குலதெய்வத்திற்க்கு தொடர்ச்சியாக ஒரு பூஜையை நீங்கள் செய்து வந்தால் அது எப்படியும் உங்களை உயர்த்திக்கொண்டே இருக்கும். நல்ல வாய்ப்பையும் உங்களுக்கு குலதெய்வம் கொடுக்கும். எப்பேர்பட்ட நிலையிலும் மாதந்தோறும் இந்த பூஜையை செய்துக்கொண்டு வரவும்.

குலதெய்வத்திற்க்கு உண்டான பூஜையில் பச்சைப்பரப்புதலை மட்டும் ஒருவர் செய்து வந்தாலே போதும். உங்களின் குடும்பத்தில் உள்ளவர்களை விட நீங்கள் சிறப்பாக இருப்பீர்கள். நீங்கள் மட்டும் தெளிவாக இருப்பது போன்ற ஒன்றை வெளியில் காட்டும்.

ஒரு குலதெய்வத்திற்க்கு பத்து குடும்பம் இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். இந்த பத்து குடும்பத்தில் உங்களின் குடும்பம் மட்டும் தனியாக தெரியவரும். பச்சைப்பரப்புதல் செய்யும் குடும்பம் மட்டும் தனியாக தெரியும். ஒரு பிரபலமான குடும்பம் என்று பெயர் உங்களுக்கு வரும்.

ஒரு தடவை மட்டும் பச்சைப்பரப்புதலை செய்துவிட்டு அல்லது குலதெய்வ பூஜையை செய்துவிட்டு பலன் தெரியவில்லை என்று கேட்ககூடாது. உங்களின் தொடர்ச்சியான வழிபாட்டு வழியாக தான் இது நடைபெறும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, March 23, 2019

கேது தரும் ஆன்மீக அடையாளம்


வணக்கம்!
          நம்முடைய வாழ்வில் ஒரு பெரிய மைல்கல் என்பது தற்பொழுது ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் வேலையான அம்மன் கோவில் கட்டும் பணியாக தான் இருக்கும். நாம் எதிர்பார்த்த உதவிகளையும் மிஞ்சி நிறைய வேலையை இதில் செய்யவேண்டிய நிலையில் இருப்பதால் கொஞ்சம் கடினமாக இருக்கின்றது இதனையும் மீறி அம்மனின் அருளால் அனைத்தும் நன்றாக போய்க்கொண்டு இருக்கின்றது.


நம்மிடம் வரும் ஜாதகத்தில் நிறைய பேர்களிடம் இருக்கும் ஒரு வியப்பு அவர்களிடம் இருக்கும் ஆன்மீக தேடுதலை வெளிக்காட்டு கிரகமாக குருகிரகம் ஒரளவு நன்றாக இருப்பதும் தெரிகின்றது. சோதிடத்தின் விதியை மீறியும் பலருக்கு நல்ல ஆன்மீக அறிவை குரு கிரகம் கொடுக்கின்றது.

குரு கிரகம் ஆன்மீக அறிவைக்கொடுத்தாலும் அதனை செயல்படுத்தும் கிரகமாக கேது கிரகம் இருக்கின்றது. நாம் கேது கிரகத்தை என்ன சொல்லுவோம் என்றால் இது ஞானத்தை தான் தரும் என்று சொல்லுவோம்.

உண்மையான ஒரு விசயத்தை உங்களிடம் சொல்லபோனால் ஒரு ஆன்மீகபணி நடைபெறுதற்க்கு மிக மிக முக்கியமாக காரணமாக இருப்பது கேது கிரகம். கேதுகிரகம் தான் உங்களின் ஆன்மீக பணியை உலகிற்க்கு வெளிகாட்டும் ஒரு வாய்ப்பை தருகின்றது.

குரு கிரகம் ஆன்மீக அறிவை கொடுக்கும் உங்களை வெளிகாட்டுவது கேது கிரகத்தின் வேலையாக இருக்கின்றது என்பதை சொல்லுகிறேன். நீங்கள் ஆன்மீகவாதி என்பதை உலகிற்க்கு காட்டுவது கேது கிரகத்தின் வேலையாக இருக்கின்றது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, March 22, 2019

ரிஷப இராசி


ணக்கம்!
          இன்று வெள்ளிக்கிழமை அதனால் சுக்கிரனின் ரிஷப இராசியைப்பற்றி சும்மா கொஞ்சம் பார்க்கலாம். மாட்டின் சிம்பளை கொடுத்து இந்த இராசியை வைத்திருப்பதால் குடும்பத்திற்க்காக மாடு மாதிரி உழைப்பார்கள். மாடு மாதிரி உழைத்தாலும் குடும்பம் ஒன்றும் பெரியதாக சிறக்காது. 

ரிஷபஇராசியை திருமணம் செய்யும் நபர்கள் சோபிக்கமாட்டார்கள். இவர்களுக்கு அடியில் வாழும் வாழ்க்கை அல்லது இவர்களின் நேரம் அவர்களை ஒன்றும் இல்லாதவர்களாக மாற்றிவிடும். அது எப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும் சரி திருமணம் செய்யும் நபர் ஒன்றும் இல்லாமல் போய்விடுவார்கள்.

பணம் என்று தான் இவர்களின் எண்ணம் முழுவதும் இருக்கும் அந்த பணத்தை வைத்து ஒன்றும் செய்யமாட்டார்கள். வீணாக செலவு செய்து காசை வீணடித்துவிடுவார்கள். பணத்தை சம்பாதிக்கிறேன் என்று பணத்தை விட்டுவிடுவார்கள்.

நிறைய துணிகளை வாங்குவார்கள். புது துணிகளை வாங்கி அதனை ஒரு முறை போட்டுவிட்டு அதனை அப்படியே போட்டுவிடுவார்கள். அழகுப்படுத்துக்கொள்கிறேன் என்று அடுத்தவர்களை கொல்லுவார்கள். நிறைய பணத்தை துணிகளுக்கும் செலவு செய்வார்கள்.

சுக்கிரனின் இராசி என்பதால் ஆன்மீகத்திலும் நாட்டம் அதிகமாக இருக்கும். ஆன்மீக நாட்டம் பெரும்பாலும் சோதிடம் தாந்தீரிக வழியில் சென்று அதில் பங்குக்கொள்வார்கள். அதிக பய உணர்ச்சியும் இவர்களுக்கு இருக்கும். பெரிய வீரன் போல பேசுவார்கள் ஒரு அதட்டலில் பயந்து ஒதுங்கிவிடுவார்கள். நிறைய பேசிக்கொண்டே இருப்பார்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, March 21, 2019

சூழ்நிலையை உருவாக்கும் கிரகங்கள்


வணக்கம்!
           நமக்கு ஒரு கிரகம் சரியில்லை என்றால் அந்த காரத்துவத்துவம் உடைய நபர் அல்லது பொருட்கள் நம்மை சுற்றி இருப்பது போல அந்த கிரகங்கள் வைத்துவிடும். ஒன்று அதனை பார்த்து நொந்து போகவேண்டும் அல்லது அதனால் நமக்கு பிரச்சினை வருவது போலவே செய்துவிடும்.

சுக்கிரன் கெடுகின்றது வைத்துக்கொள்வோம். ஒன்று நம்மை சுற்றி பணக்காரர்களாக வைத்துவிட்டு நம்மை ஏழ்மையாக்கிவிடும். அவர்களை பார்த்தே நாம் நொந்து சாகவேண்டும் என்று வைத்துவிடும் மற்றோன்று பெண்கள் இருப்பார்கள் அவர்களால் உங்களுக்கு பிரச்சினை வருவது போலவே இருக்கும்.

இயற்கையே அப்படி உருவாக்கி அதனுள் நாம் வாழ்வது போன்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கிவிடுகின்றது. இயற்கையே நமக்கு எதிராக இந்த சூழ்நிலையை உருவாக்கிவிடும். நாம் அதனுள் சிக்கி தொலையவேண்டியதாகிவிடும்.

பெரும்பாலும் ஆன்மீகவாதிகள் இப்படிப்பட்ட சூழ்நிலையில் வாழ்ந்தாலும் அந்த சூழ்நிலையை மனதிற்க்குள் அனுமதிக்க மாட்டார்கள். சூழ்நிலையில் வாழ்வார்கள் அந்த சூழ்நிலை மனதிற்க்குள் வரவே வராது.

ஒரு சாதாரண நபருக்கு இப்படிப்பட்ட சூழ்நிலையை உருவாக்கிவிட்டால் அப்புறம் அதனால் செத்து சீரழிந்துக்கொண்டு இருப்பார்கள். பொறுமையாக உங்களுக்குள் மனதிற்க்குள் வாங்கி இது  எதனால் நடக்கின்றது என்று பார்த்தால் உங்களுக்குள் தான் இவ்வளவு பிரச்சினை என்பது தெரியவரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, March 20, 2019

சக்தி தரும் வீடு


வணக்கம்!
          ஒரு வீட்டில் நீங்கள் வசித்துக்கொண்டு இருக்கின்றீர்கள். உங்களின் குழந்தையின் கல்விக்கு நீங்கள் இருக்கும் ஊர் சரிவரவில்லை என்றால் நீங்கள் நல்ல கல்வி எங்கு கிடைக்கின்றதோ அந்த ஊருக்கு சென்றுவிடுவீர்கள். ஏற்கனவே இருந்து வீடு வாஸ்து சரியில்லாமல் நீங்கள் செல்லவில்லை உங்களின் தேவைக்காக வெளி இடத்திற்க்கு சென்றீர்கள்.

ஒரு வீட்டில் இருந்து அடுத்த வீட்டிற்க்கு செல்வது வாஸ்து சரியில்லை என்பதற்க்காக செல்லவில்லை. உங்களின் தேவைக்காக அடுத்த வீட்டிற்க்கு சென்று இருக்கின்றீர்கள் என்று அர்த்தம் கொள்ளவேண்டும். இதனை வாஸ்து குறை என்று எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளாதீர்கள்.

நீங்கள் எப்பேர்பட்ட வாஸ்து நிபுணரை வைத்து கட்டினாலும் ஏதோ ஒரு குறை இருக்க தான் செய்யும். அதனை நீங்கள் தினசரி உங்களின் வீட்டில் செய்யும் பூஜை மற்றும் உங்களின் வீட்டில் மேல் உங்களுக்கு உள்ள அக்கறை ஆகியவற்றை பொறுத்து தான் அது முழுமையான ஒரு அமைப்பை பெறும்.

வாஸ்துபடி ஒரு வீட்டை அமைத்துவிட்டு அந்த வீட்டை நீங்கள் சுத்தமாக பராமரிக்கவில்லை என்றால் அந்த வீட்டிற்ககு பீடை பிடித்துவிடும். வீட்டின் சுத்தம் எந்தளவுக்கு இருக்கின்றதோ அந்தளவுக்கு அந்த வீட்டில் உள்ள வாஸ்து குறை நீங்கும்.

வாஸ்துவை குறை சொல்லுவதற்க்கு சொல்லவில்லை. ஒரு வீட்டின் மீது நாம் காட்டும் ஆர்வமும் நிறைய இருக்கவேண்டும் என்பதற்க்காக இதனை சொல்லுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, March 19, 2019

பங்குனி உத்திரம்


வணக்கம் !
         நாம் செய்த பெரிய வேலை என்பது என்னை நாடி வரும் நண்பர்களை ஒரு நல்ல ஆன்மீகவாதியாக மாற்றுவதற்க்கு முயற்சி செய்தேன். ஆன்மீகவாதியாக பலர் மாறி நல்ல நிலையில் வந்துக்கொண்டும் இருக்கின்றனர்.

ஆன்மீகவாதியாக மாறும் மற்றும் சாதாரணமான இருக்கும் நண்பர்களுக்கு அவ்வப்பொழுது வரும் விஷேச நாட்களில் என்ன என்ன செய்யலாம் என்பதைபபற்றி சொல்லிவருகிறேன். வருகின்ற வியாழக்கிழமை அன்று பங்குனி உத்திரம் வருகின்றது.

பங்குனி உத்திரநாளில் முருகபெருமானுக்கு அனைத்து முருகன் கோவிலும் திருவிழா நடைபெறும். பங்குனி உத்திரத்திற்க்கு விரதம் இருந்தும் கோவிலுக்கு சென்று வரலாம். வேலைப்பளு அதிகமாக இருக்கும் நண்பர்கள் அன்றைய மாலை பொழுதில் முருகன் கோவில் சென்று தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.

பங்குனி உத்திரநாளில் தரிசனம் செய்துவிட்டு வந்தாலே போதும் வாழ்நாளில் மிகப்பெரிய ஒரு நிலைக்கு உங்களை உயர்த்திவிடுவான் அந்த முருகப்பெருமான். உங்களால் முடிந்தால் ஆறுபடை வீடுகளில் தரிசனம் செய்யலாம் அல்லது அருகில் இருக்கும் முருகனை தரிசனம் செய்யலாம்.

பங்குனி உத்திரத்திற்க்கு பலர் காவடி எடுத்து செல்வார்கள். முருகன் கோவிலில் அன்னதானம் செய்வார்கள். அன்னதானம் செய்வதற்க்கு உங்களால் முடிந்த உதவியை அருகில் உள்ள முருகன் காேவிலுக்கு செய்யுங்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

காரும் இராசியும்


வணக்கம்!
          ஒரு கார் வாங்கவேண்டும் என்றாலும் அதற்கு இராசி என்பது வேண்டும். நமக்கு கார் வாங்க யோகம் இருந்தால் நமக்கு கார் அமைந்துவிடும். கார் வாங்கிய பிறகு தான் கார் யோகம் வேலை செய்கின்றதா இல்லையா என்பது தெரியவரும்.

கார் வாங்கிய பிறகு அதனை வைத்து நாம் பராமரிக்க முடிகின்றதா என்பது தெரியவரும். கார் யார் வேண்டுமானாலும் வாங்கலாம் அதனை வைத்து ஓட்டி பராமரித்து வைத்திருப்பதில் தான் யோகம் வேலை செய்கின்றது.

கார் வாங்கிய பலர் அதனால் வெறுப்படைந்தும் இருக்கின்றனர். காரை வைத்து பராமரிக்கமுடியவில்லை என்று வெறுப்பும் அடைந்து இருக்கின்றனர். எவ்வளவு புதிய காராக இருந்தாலும் சரி பழைய காராக இருந்தாலும் சரி அதனை வைத்திருக்க நமக்கு யோகம் இருக்கவேண்டும்.

ஒரு சிலருக்கு கார் வாங்கிய பிறகு ஒரு சில இடத்தில் ரிப்பேர் ஆகிவிடும். அன்றைய தினம் பார்த்தால் நமக்கு சந்திரன் சரியில்லாத ஒரு நிலையில் இருக்கும். சந்திரன் இராசிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டுக்கொண்டு இருக்கும்.

ஒரு சில இடத்தில் கார் ரிப்பேர் ஆகிவிட்டால் நாம் அதனை உடனே சரிசெய்ய நினைத்து செயல்படுவோம். முடிந்தவரை காரை வீட்டிற்க்கு எடுத்து வர முயற்சி செய்துவிடுங்கள். அந்த காரை சர்வீஸ் செய்வதற்க்கு உடனே போககூடாது. உங்களின் காரை இரண்டரை நாள் சென்ற பிறகு அல்லது ஒரு ஐந்து நாட்களுக்கு பிறகு காரை சரிசெய்ய எடுத்துச்செல்லுங்கள்.

நமது கார் ரிப்பேர் ஆனவுடன் சர்வீஸ்க்கு சென்றால் நமக்கு நடக்கும் சந்திரன் நமது காசை வீணாக செலவு செய்ய வைக்கும். இதனை தவிர்பதற்க்கு நாம் சந்திரனின் நிலையை அறிந்துக்கொண்டு சென்றால் ஒரளவு குறைந்த பணத்திலேயே சரிசெய்துக்கொண்டு வந்துவிடலாம்.

உதாரணமாக நமது இராசிக்கு பனிரெண்டாவது வீட்டில் சந்திரன் இருந்தால் நமக்கு கார் ரிப்பேர் ஆகின்றது என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் உடனே செல்லாமல் சந்திரன் இரண்டாவது வீட்டிற்க்கு செல்லும்பொழுது செல்லலாம். அதாவது ஐந்து நாட்களுக்கு பிறகு நீங்கள் காரை சரி செய்ய செல்லலாம்.

கார் ரிப்பேர் ஆனவுடன் நீங்கள் சென்றால் உங்களை வைத்து செய்து அனுப்பிவிடுவார்கள் என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொண்டு செயல்படவேண்டும். கார் என்பது மட்டும் அல்ல உங்களின் எந்த வாகனமாக இருந்தாலும் சரி இப்படி தான் ஜாதகப்படி வேலை செய்யும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, March 18, 2019

சனியின் இரண்டாவது சுற்று


வணக்கம்!
          ஒவ்வொருவருக்கும் வரும் வியாதி அவர்கள் செய்யும் தவறால் வந்தாலும் ஒரு சில இடத்தில் கர்மாவாலும் வருகின்றது. ஒரு வியாதி வந்தாலே அது கடவுள் நமக்கு கொடுத்த தண்டனை என்று சொல்லும் மனநிலையிலேயே மக்கள் இருப்பார்கள். 

வியாதி வருவது பெரும்பாலும் அவர் அவர்கள் செய்யும் தவறால் தான் வரும் ஒரு கால் சதவீதம் மட்டுமே கர்மாவால் வருகின்றது என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். கால் சதவீதம் மட்டுமே ஒன்ற பிறவியிலேயே வருவது உண்டு. ஒரு சில இடத்தில் கர்மாவால் இடைப்பட்ட வயதில் உள்ளவர்களுக்கு வரும்.

ஒருவர் எப்படிப்பட்ட நல்ல நிலையில் உடலை பராமரித்த வந்தாலும் ஒருவருக்கு இரண்டாவது சுற்று சனி வரும்பொழுது கொஞ்சம் நோயை கொடுத்துவிடுகின்றது. நாம் உடலை ஒழுங்காக பராமரிக்கவிட்டால் இந்த நோயை அதிகமாக தாக்கிவிடுகின்றது.

நாற்பது வயதில் நோய் வருகின்றது என்பது சனி இரண்டாவது சுற்றும்பொழுது நோய் வந்துவிடுகின்றது. பெரும்பாலான ஜாதகர்களுக்கு இது போன்று தான் வருகின்றது. ஒரு சிலர் மட்டும் தப்பித்துவிடுகின்றனர். அவர்கள் சிறந்த முறையில் உடலை பராமரித்து வருவார்கள்.

சனியின் இரண்டாவது சுற்று வரும்பொழுது அனைவரும் உணவு விசயத்தில் மிக சரியாக பின்பற்றவேண்டும். இதுவரை கண்ட உணவை சாப்பிட்டு வந்தாலும் சனியின் இரண்டாவது சுற்று சுற்றும்பொழுது உணவில் கட்டுபாட்டை கொண்டுவந்தால் போதுமானது. சனி தசா நடப்பவர்களும் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, March 16, 2019

முருகன் வழிபாடு


வணக்கம்!
          ஒரு மனிதனுக்கு செவ்வாய் கிரகம் நீசம் பெற்றுவிட்டால் அவர்களுக்கு வீடு என்பது அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது. நிறைய பாேராட்டத்திற்க்கு பிறகு வீடு கிடைக்கும். செவ்வாய் கிரகம் நன்றாக இருந்தால் எளிதாக வீடு அமைந்துவிடும்.

செவ்வாய் கிரகம் உச்சம் பெற்றவர்களுக்கு அவர்கள் நிலம் மற்றும் வீடுகள் வியாபாரம் பற்றி எளிதில் புரிந்துக்கொள்ளுவார்கள். நிலமும் அவர்களுக்கு எளிதில் கிடைத்துவிடுகின்றது. இன்றைய காலக்கட்டத்தில் ஒரு மனிதனுடைய பெரிய போராட்டமாகவே இருப்பது ஒரு கனவு வீடு தானே. 

செவ்வாய் கிரகம் ஒருவருக்கு நன்றாக இல்லை என்றால் அவர்களை நான் நிறைய முருகன் வழிபாட்டை மேற்க்கொள்ளுங்கள் என்று சொல்லிருக்கிறேன். முருகன் வழிபாடு என்பது அவ்வப்பொழுது வந்துக்கொண்டே இருக்கும் அதாவது மாதத்திற்க்கு ஒரு சிறப்பான வழிபாடாக இருக்கும்.

தை பூசம்  அதன் பிறகு பங்குனி உத்திரம் என்று வந்துக்கொண்டே இருக்கும். இதனை நீங்கள் மிக சரியாக பயன்படுத்திக்கொண்டு இந்த விழாகளுக்கு என்று உங்களை தயார் செய்துக்கொண்டு ஏதோ ஒரு விஷேசமான முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள்.

ஒரு பெரியளவில் நம்மை தயார் செய்வதற்க்கு முருகன் வழிபாடு நம்மை பெரியளவில் உயர்த்தும். முருகன் கோவிலுக்கு அடிக்கடி சென்றுவருவது மற்றும் புகழ்பெற்ற முருகன் கோவிலோடு உங்களை தொடர்ப்படுத்திக்கொண்டே வாருங்கள். இதனைப்பற்றி நான் ஏற்கனவே சொல்லிருக்கிறேன் மீண்டும் இதனை சொல்லுவது உங்களின் நலனுக்காக இதனை சொல்லுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, March 15, 2019

சக்தி தரும் வீடு


வணக்கம்!
         வாஸ்துவில் மீன் வளர்ப்பதைப்பற்றி சொல்லுவார்கள். மீன் வளர்த்தால் அந்த வீட்டில் உள்ள வாஸ்து தோஷத்தையும் போக்கி செல்வவளத்தை கொடுக்கும் அதோடு வீட்டிற்க்கு நேர்மறையான சக்தியை கொடுக்கும் என்று சொல்லுவார்கள்.

வாஸ்துவில் வண்ண மீன்கள் பற்றியும் சொல்லுவார்கள். ஒரு மீன்தொட்டி அமைத்து அதில் பல வண்ண மீன்களை வளர்க்கவேண்டும் என்றும் சொல்லுவார்கள். இதனை எல்லாம் நீங்கள் கிட்ட பிடித்து பார்த்தால் கிரகத்தின் ஆற்றலை கொடுப்பதை தான் மறைமுகமாக சொல்லி இருப்பார்கள்.

ஒவ்வொரு கிரகத்திற்க்கும் ஒவ்வொரு கலரை சொல்லிருப்பார்கள். அதேபோல மீனும் வளர்த்தால் நல்லது என்பார்கள். சுற்றி வளைத்து அது கிரகத்தின் ஆற்றலை தருவது போலவே இருக்கும். கிரகத்தின் ஆற்றல் எந்தந்த இடத்திற்க்கு தரவேண்டும் என்பதை அறிந்து நீங்கள் அதனை வேறுவிதமாகவும் பயன்படுத்திக்கொள்ளமுடியும்.

ஆன்மீக ரீதியாக நாம் பார்த்தால் நம்முடைய மனிதனின் மனதை தயார் செய்வதற்க்கு உள்ள வழிகளாகவே அனைத்தும் இருக்கும். எங்களின் வீட்டிலும் மீன் வளர்க்கவேண்டுமா என்ற கேள்வியை கேட்கலாம். உங்களுக்கு இது எல்லாம் பிடித்து இருந்தால் வளர்த்துக்கொள்ளுங்கள்.

உங்களின் வீட்டில் ஒய்வு நேரத்தில் அதனோடு செலவிட ஒரு வழியாகவும் இது இருக்கும். நீங்கள் நகர்புறத்தில் இருந்தால் இதனை வளர்க்கலாம் இதனை ஏன் சொல்லுகிறேன் என்றால் வேறு உயிர் நீங்கள் வளர்க்க மாட்டீர்கள். கால்நடைகளை வளர்க்கமுடியாது இதனை வளர்த்தால் உங்களுக்கு வரும் ஆபத்தை அந்த மீன்கள் வாங்கிக்கொள்ளும் என்ற ரீதியில் வளர்த்துக்கொள்ளலாம்.

நமது வாடிக்கையாளர்கள் இதனை வளர்ப்பது குறைவாகவே இருக்கின்றது. ஒரு ஐந்து பேர் வளர்ப்பதே பெரிய எண்ணிக்கையாகவே இது இருக்கின்றது என்பதால் இதில் அனுபவமும் எனக்கு குறைவாகவே இருக்கின்றது. உங்களின் மனதிற்க்கு சக்தியூட்டுவதாக ஒரு சில நேரத்தில் இருப்பதாக எண்ணுவதால் இதனை வளர்த்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

நமக்கு கிடைத்த பாக்கியம்


ணக்கம்!
           கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் பகுதியில் இருக்கும் நண்பர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும்.

ஒவ்வொரு மனிதனும் இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில் அவர் அவர்களின் வேலையை பார்ப்பதே மிக மிக கடினமான ஒன்றாக இருக்கின்றது. இந்த நேரத்தில் ஆன்மீக பணியிலும் உங்களை இணைத்துக்கொள்வது கொஞ்சம் அல்ல பெரிய பணியாகவே அது இருக்கும்.

நமது அம்மன் கோவில் அடிக்கல் நட்டபிறகு கோவிலின் வேலை ஆரம்பிப்பதற்க்கு பல கட்ட பணிகள் நடந்துக்கொண்டு வருகின்றன. நமது நண்பர்களுக்கும் அவர்களின் அதிக வேலைக்கு இடையில் இந்த பணியை எடுத்து செய்து வருகின்றனர். அனைவரும் இந்த பணியில் ஈடுபடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நமது பூர்வபுண்ணியமும் நமது பாக்கியமும் தான் இந்த மாதிரியான பணிகளை செய்ய நமக்கு வழி வகுக்கின்றது. முற்பிறவியில் நாம் செய்த புண்ணியம் இப்படிப்பட்ட வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றது.

நீங்கள் செய்த பாவங்களை போக்கவும் உங்களின் தோஷங்களை போக்கவும் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள முடியும். எப்படி என்றால் இதுவரை நாம் அம்மனின் துணையோடு உங்களுக்கு வழிகாட்டிக்கொண்டு இருந்தோம். வழிகாட்டிய அம்மனுக்கு கோவில் கட்ட நம்மால் முடிந்தவற்றை செய்தால் அதுவே மிகப்பெரிய நன்றி கடனாக அது இருக்கும்.

ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் தொடர்புக்கொண்டு பேசி வருகிறேன். அனைவரும் பங்குக்கொண்டு செயல்புரிவோம் என்று சொல்லியுள்ளனர். இனிமேலும் தொடர்புக்கொண்டு பேசுகிறேன் அனைவரும் இணைந்து இதனை செயல்புரிவோம்.

மதியம் பதிவு வரும் வந்து படித்துவிட்டு செல்லுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, March 14, 2019

வெள்ளம் வருவதற்க்கு முன்பே அணை





வணக்கம்!
          ஒரு மனிதன் அவனுடைய வாழ்க்கையை நன்றாக வைத்துக்கொள்ளவேண்டும் அதற்கு ஒரு வழிகாட்டி தேவை என்ற கணக்கில் கொண்டு தான் சோதிடம் வந்தது. சாேதிடத்தில் சொல்லப்பட்ட விசயங்களை தன்னுடைய குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எப்படி அறிவுரை வழங்கி அவர்களை தீய பாதையில் இருந்து விலக்கிக்கொண்டு அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை கொடுக்கலாம் என்பதை குடும்பத்தில் உள்ள ஒருவராது இதில் தேர்ச்சியில் இருக்கவேண்டும்.

ஒரு சில தினங்களாக நெட்டை திறந்தாலும் முகநூலை திறந்தாலும் தொலைக்காட்சி திறந்தால் பொள்ளாட்சி பொள்ளாட்சி என்று தான் வருகின்றது. ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு செய்தி வந்தாலும் இந்த விசயம் அதிகமாக  பாதிப்பு அடைந்திருக்கின்றது என்று நினைக்கிறேன்.

ஜாதககதம்பத்தில் உள்ளவர்களுக்கும் சொல்லுவது ஒன்றை தான் உங்களின் பெண் குழந்தைகளாக இருந்தாலும் சரி ஆண் குழந்தைகளாக இருந்தாலும் சரி அவர்களுக்கு ஜாதகத்தில் நடக்கும் தசா எப்படி இருக்கின்றது கோச்சாரபடி என்ன நடக்கின்றது என்பதை தெரிந்துக்கொண்டு அவர்களின் மேல் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

இராகுவின் சாரம் அதிகமாக உங்களின் வீட்டில் உள்ளவர்களுக்கு இருந்தால் அவர்களை தேடி வம்பு வந்துவிடும். ஒரு பிரச்சினை வந்தபிறகு பிரச்சினையில் இருந்து வெளி வருவதற்க்கும் வருவதற்க்கு முன்பே அதில் இருந்து தப்பிபதற்க்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது.

உங்களால் முடிந்தவரை உங்களின் குடும்பத்தில் உள்ளவரை மீட்க முடியும். அதாவது ஜாதகத்தின் பலனை நன்றாக தெரிந்துக்கொண்டு அதற்க்கு தகுந்த வழிபாட்டையும் அவர்களுக்கு தேவையான அறிவுரையும் நீங்கள் வழங்கினால் கண்டிப்பாக உங்களின் குடும்பம் பாதிப்படையாது. 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சக்தி தரும் வீடு


வணக்கம்!
          சக்தி என்றாலே அது குதிரையை தானே நமது மக்கள் அடையாளப்படுத்துவார்கள். வீட்டில் குதிரை படத்தை வைத்தால் வீட்டிற்க்கு சக்தி கிடைக்கும் என்பது நமது மக்களின் எண்ணங்களாக இருக்கின்றது.

ஒன்று குதிரையின் லாடத்தை வைப்பார்கள் அல்லது குதிரையின் படத்தை வைப்பார்கள். ஒரு சிலர் கருப்பு குதிரையின் லாடத்தை தான் பயன்படுத்தவேண்டும் என்று வாங்கி வந்து வீட்டில் கட்டி வைப்பார்கள். கருப்பு குதிரையின் லாடம் என்று ஏமாற்று வேலையும் நடக்கின்றது.

குதிரையின் படத்தை வாங்கி வந்து வீட்டிற்க்குள் மாட்டுவார்கள். குதிரையின் படம் ஒன்று அல்லாமல் ஏழு குதிரை ஒடுவது போன்ற படத்தை வாங்கி மாட்டினால் நல்லது என்று கூட சொல்லுவார்கள். ஏழு குதிரையும் ஓடுவது போல இருந்தால் அது வீட்டில் நிறைந்த சக்தி தருவது போன்ற ஒரு நிலை என்பார்கள்.

ஏழு குதிரை என்பது ஏழு கிரகத்தை குறிக்கும் என்பதை தான் ஏழு குதிரை படத்தை காட்டுகின்றார்கள் என்பது என்னுடைய எண்ணம். இராகு கேதுவை விட்டுவிட்டு இதனை சொல்லுகிறேன். குதிரையின் படம் என்பதை தாண்டி உண்மையான குதிரையை வாங்கி கட்டி பார்த்தால் நல்ல விசயம் நடக்கும்.

குதிரையை வாங்கிக் கட்டி அதனை பராமரிப்பது கடினமாக இருந்தால் குதிரையின் படத்தை வாங்கி மாட்டிக்கொள்ளலாம். குதிரையின் படம் வீட்டிற்க்குள் சக்தி வருவது போன்று மாட்டிக்கொள்ளுங்கள். வீட்டிற்க்குள் ஓடி வருவது போன்ற நிலையில் மாட்டவேண்டும். 

இதனை எல்லாம் நாம் செய்து தான் சக்தி வரவழைக்கவேண்டும் என்பதை இல்லை. நல்ல பூஜையறையில் பூஜையை நீங்கள் செய்தாலே உங்களின் குடும்பத்திற்க்கு தேவையான சக்தியை உங்களின் குலதெய்வம் கொடுத்துவிடும்.

நாளை திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் பகுதியில் இருக்கும் நண்பர்கள் என்னை சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும்.

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, March 13, 2019

யானை பலம் தேவை


வணக்கம்!
         இன்று காலையில் மன்னார்குடி இராஜாகோபாலனை தரிசனம் செய்ய சென்று இருந்தேன். மன்னார்குடி இராஜா கோபால சுவாமி எனக்கு மிகவும் பிடித்த ஒரு கோவில் என்பதால் அவ்வப்பொழுது அங்கு சென்று தரிசனம் செய்துவிட்டு வருவது உண்டு.

மன்னார்குடி செல்லும்பொழுது அங்குள்ள யானை என்னிடம் மிகவும் அன்பாக பழக ஆரம்பித்துவிட்டது. கொஞ்சநாளாக அது எனக்கு பழக்கம். மனிதனுக்கு தெரியுதோ இல்லையோ மிருகங்களுக்கு நம்மை நன்றாக தெரிந்துக்கொள்கின்றது.

மன்னார்குடி கோவிலில் இருக்கும் யானைக்கு என்னால் முடிந்ததை வாங்கி கொடுப்பது உண்டு. யானைக்கு இன்று இரண்டு தர்பூசணி பழங்களை வாங்கி கொடுத்தேன். ஒவ்வொரு தடவையும் ஏதாவது ஒன்றை வாங்கிக்கொடுப்பது உண்டு. வீட்டிலிருந்தும் காய்கறிகளையும் வாங்கிக்கொண்டு கொடுப்பேன்.

பாப் கட்டிங் செங்கமலம்

யானை பலத்தை நாம் பெறவேண்டும் என்றால் நாம் யானைக்கு பூஜை செய்யவேண்டும். யானைக்கு தேவையான உணவுகளையும் வாங்கிக்கொடுத்தாலும் அந்த பலத்தை நாம் பெறலாம். யானையை வீட்டில் வைத்து பராமரிப்பது இன்றைய காலத்தில் முடியாதவை. உங்களின் அருகில் இருக்கும் கோவில் யானைக்கு உங்களால் முடிந்ததை வாங்கிக்கொண்டு கொடுத்துக்கொண்டு வாருங்கள்.

யானையின் பலத்தை பெறவேண்டும் என்பதற்க்காக தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா யானை முகாம் நடத்தினார். யானையின் பலத்தை பெறவேண்டும் என்பதற்க்காக இதனை செய்தார். நம்மால் முடிந்ததை நாம் செய்யலாம் என்று எண்ணி தான் இப்படிப்பட்ட விசயத்தை எளிமையாக செய்கிறோம்.

ஆன்மீகம் என்பது மிகவும் கடினமான ஒன்று தான். இதனை எல்லாம் செய்வதற்க்கு பொறுமை மற்றும் பணமும் தேவை. இதற்க்கு என்று நேரத்தை ஒதுக்கி செய்துக்கொண்டு தான் இருக்கிறேன். நான் செய்வதை அப்படியே உங்களிடம் சொல்லுகிறேன் முடிந்தால் பின்பற்றலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சக்தி தரும் வீடு


வணக்கம்!
          இன்றைய காலக்கட்டத்தில் வாஸ்து என்பது பெரியதும் வீட்டிற்க்கு பயன்படுகின்றது. அனைவரும் வாஸ்து பார்த்து வீட்டை கட்டுகின்றார்கள். அனைத்து மதத்தினரும் வாஸ்து பார்த்து கட்ட தொடங்கிவிட்டனர்.

பெரும்பாலும் சக்தி நன்றாக கிடைக்கவேண்டும். எதிர்மறையான சக்தி இருக்ககூடாது. வீட்டில் உள்ளவர்கள் ஆரோக்கியமாக நல்ல நிலையில் இருக்கவேண்டும் என்பது தான் அடிப்படையான எண்ணம் தான் இதனை எல்லாம் பார்த்து செய்ய தோன்றுகின்றது.

உங்களுக்கு நல்ல சக்தி கிடைத்தால் போதும் உங்களுக்கு அனைத்தும் கிடைத்துவிடும். நல்ல சக்தி கிடைக்கு என்ன என்ன வழிகள் இருக்கின்றனவோ அதனை எல்லாம் உங்களின் வீட்டில் செய்துக்கொள்ளுங்கள்.

சக்தி கிடைப்பதற்க்கு முன்பு ஒன்றை கவனித்துக்கொள்ளுங்கள். முதலில் உங்களின் வீடு சுத்தமாக இருக்கவேண்டும். வீடு சுத்தமாக இருந்தால் தான் உங்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும். வீடு சுத்தமாக இருந்தாலே போதும் உங்களின் வீட்டில் சக்தி நிலைத்திருக்கும்.

பெரும்பாலும் வீட்டில் ஈசானிய மூலை நன்றாக இருக்கின்றதா அங்கு எதுவும் தடைகள் இருக்கின்றன என்று பார்த்துக்கொள்ளுங்கள். ஈசானிய மூலை நன்றாக இருந்தால் எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் உங்களின் வீட்டிற்க்கு சக்தி கிடைத்துக்கொண்டே இருக்கும். 

ஈசானிய மூலையில் தடங்கல் இருக்கும்பொழுது உங்களின் வீட்டிற்க்கு சக்தி கிடைக்காது என்பது விதி. ஈசானிய மூலை சரியில்லாத வீட்டில் குடியிருக்க வேண்டாம் என்பார்கள். எந்த ஒரு வகையிலும் சக்தியை கொண்டுவரமுடியாது என்பார்கள். ஈசானிய மூலையை மட்டும் சரி செய்துவிடவேண்டும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, March 12, 2019

அஷ்டமாபதி


வணக்கம்!
          ஒருவரின் ஜாதகத்தில் அஷ்டமாபதி அஷ்டமாபதி வீட்டில் அமர்ந்து அவருக்கு சந்திராஷ்டமம் மட்டும் வந்தால் அது பெரிய பிரச்சினையை உருவாக்கிவிடும். சந்திராஷ்டமம் சாதாரணமாக வருவதற்க்கும் அஷ்டமாபதி அஷ்டமாபதி வீட்டில் இருக்கும் வரும் சந்திராஷ்டமத்திற்க்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது.

எட்டுக்குடையவன் எட்டில் இருக்கும்பொழுது சந்திராஷ்டம் வந்தால் பெரிய ஆபத்தை அவர் சந்திப்பார். இரண்டரை நாட்கள் எந்த ஒரு வேலையும் செய்யாமல் இருப்பது அவருக்கு நல்லது. மற்றபடி வரும் சந்திராஷ்டமம் நாள்களில் எந்த ஒரு கவலையும் கொள்ள தேவையில்லை.

அஷ்டமாபதி எட்டில் அமர்ந்து நடக்கும் தசாவும் ஒரு சிலருக்கு அதிகமான பிரச்சினையை கொடுத்துவிடும். அவர் முடங்கி கிடப்பது போன்ற ஒரு வாழ்க்கையை வாழவேண்டும். பக்க வாதத்தில் ஒருவர் இருப்பது போன்ற நிலையை உருவாக்கிவிடுகின்றது.

அஷ்டமாபதி சாரம் பெற்று நடக்கும் எந்த ஒரு தசாவும் ஜாதகருக்கு அந்தளவுக்கு நன்மையை அளிப்பது கிடையாது. இந்த காலத்தில் நிறைய சங்கடங்கத்திற்க்கு ஆளாகுவார். அஷ்டமாபதி தசா மட்டும் கொஞ்சம் எச்சரிக்கை தேவை.

ஒரு சிலருக்கு அஷ்டாமபதி காலத்தில் பலவிதத்திலும் நன்றாக சம்பாதித்து விடுவார்கள். சம்பந்தமே இல்லாமல் பணம் வந்துக்கொண்டே இருக்கும். பலரை நான் பார்த்து இருக்கிறேன். ஒரு சிலருக்கு மட்டும் இப்படியும் நடக்கின்றது.

அஷ்டமாதிபதி தசா நடக்கும் காலக்கட்டங்களில் அதிகமான சிவ வழிபாட்டை ஒருவர் மேற்க்கொள்ளவேண்டும். சிவ வழிபாடு நல்ல பலனை கொடுக்கின்றது. சிவ வழிபாடு இல்லை என்றால் பிரத்தியங்கர தேவி வழிபாடும் நன்மை பயக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

புகழ் கிடைக்க என்ன வழி?


வணக்கம்!
         ஒரு மனிதன் நிறைய சம்பாதித்தாலும் அவன் புகழ் பெறுவது அவனின் சொந்த ஊரில் தான் புகழ் பெறுவான். நகரத்தில் பெரியளவில் சம்பாதித்தாலும் அது அவனின் சொந்த ஊருக்கு செல்லும்பொழுது தான் அது புகழ் பெறும்.

சொந்த ஊரில் ஒருவன் புகழ் பெறவேண்டும் என்றால் குரு கிரகம் மிகச்சிறப்பாக வேலை செய்யவேண்டும். குரு கிரகம் தன்னுடைய தசாவை சிறப்பாக செய்தால் அவன் புகழ் பெறுவான். எட்டு திசைக்கும் அவனின் புகழ் பரவும்.

குரு கிரகம் அல்லது ஒருவன் புகழ்பெறவேண்டும் என்றால் பூர்வபுண்ணியாதிபதி சிறப்பாக செயல்பட்டால் போதும் அவன் பெயரை வாங்கிவிடுவார். குப்பையில் இருந்தாலும் கோபுரத்தில் கொண்டு வந்து உட்காரவைத்துவிடும்.

குரு கிரகமும் சரியில்லை பூர்வபுண்ணியாதிபதியும் சரியில்லை என்றால் அவர் ஒரு குருவை நாடிச்சென்று அவர் வழியாக புகழ்பெறவேண்டும். ஜாதகத்தை மீறி அவரால் மட்டுமே உங்களுக்கு புகழை வாங்கி தரமுடியும்.

வெளியூர்களுக்கு சென்று சம்பாதியுங்கள். உங்களின் பலத்தை உங்களின் ஊரில் காண்பியுங்கள். உங்களின் சொந்த ஊரில் நீங்கள் காண்பிக்கும்பொழுது மட்டுமே நீங்கள் மிக சிறந்த ஒரு நிலையை எட்டியுள்ளீர்கள் என்ற அர்த்தம். பலரின் வாழ்வில் நான் பார்த்து தெரிந்துக்கொண்ட விசயத்தை உங்களுக்கு சொல்லுகிறேன். இதனை கடைபிடித்தால் சிறந்த விளங்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, March 11, 2019

தீயகிரகங்கள் தரும் திருட்டு குணம்


வணக்கம்!
          ஒருவருக்கு தீயபழக்க எண்ணங்கள் உருவாகுவது அவர் அவர்களுக்கு நடக்கும் தீயதசாவில் அதிகமாக இருக்கும். ஒருவருக்கு சனி தசா அல்லது இராகு தசா நடந்தால் அதிகமாக பொய்யை சொல்லுவார்கள்.

சம்பந்தமே இல்லாமல் அனைத்தையும் மறைத்து மறைத்து செயலாற்றுவார்கள். அவர்களிடம் எதையும் முழுமையாக எதிர்பார்க்க முடியாது. சனி தசா நடந்தால் அதிகமான திருட்டு புத்தி இருக்கும். இது சனி எந்த இடத்தில் இருந்தாலும் அவர்களுக்கு திருட்டு புத்தியை தரும்.

இராகு தசா என்பது பெண்களின் விசயத்தில் நிறைய மறைத்து சொல்லுவார்கள். நிறைய பெண்கள் தொடர்பை வைத்துக்கொண்டு இருந்தாலும் வீட்டில் ஒன்றுமே தெரியாது பாேலவே நடந்துக்கொண்டு இருப்பார்கள்.

உங்களுக்கு எந்த ஒரு மறைமுக தசா நடந்தாலும் உங்களின் செயல்பாட்டில் ஒரு மறைமுகமான காரியங்கள் நடந்துக்கொண்டே இருக்கும். யாருக்கும் தெரியாத ஒரு விசயத்தை உங்களோடு நீங்கள் வைத்துக்கொண்டே இருப்பீர்கள்.

இன்றைய காலத்தில் அனைவரும் விவரமாக இருந்தாலும் அவர் அவர்களுக்கு நடக்கும் தசா தீய தசாவாக அல்லது மறைமுக தசாவாக இருந்தால் நீங்கள் கொஞ்சம் கூடுதலான திருட்டுதனத்தோடு செயல்படுவீர்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, March 9, 2019

சனிக்கு பரிகாரம்


வணக்கம்!
          சனிக்கு ஒரு எளிமையான ஒரு பரிகாரத்தை நாம் பார்க்கலாம். ஒருவரின் ஜாதகத்தில் சனியால் பாதிப்படைந்து இருக்கின்றார் என்றால் அவர் ஒரு அடிமை வாழ்க்கை வாழ்வார். அனைத்திலும் அவர் தான் பயன்படுத்தப்படுவார் அவர்க்கு ஒன்றும் கிடைக்காது அவரால் பிறர் பயன்படுவார்கள்.

உண்மையில் நான் கூட இந்த மாதிரியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறேன். இதற்கு என்னுடைய ஜாதகத்திலும் சனியின் நிலை சரியில்லை என்பது நான் அறிவேன். பெரும்பாலும் கிரகங்கள் எனக்கு அடிப்பட்ட காரணத்தால் தான் இதனை தீர்க்க என்ன வழி என்று யோசித்து ஆன்மீக பக்கம் வந்தேன்.

வாரம் தோறும் நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வந்தாலும் சனியின் சக்தி உங்களுக்கு கிடைக்கும். சனியின் பவர் இல்லாத காரணத்தால் தான் உங்களுக்கு பிரச்சினை வருகின்றது. சனியின் சக்தியை கிடைக்க ஒரு வழியை நாம் மேலும் பார்க்கலாம். 

எள் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு கிண்ணத்தில் வைத்துக்கொண்டு  அதனை பாதிப்படைந்த நபரை நிற்க வைத்து அவரை ஒன்பது முறை உங்களின் கையால் சுற்ற வேண்டும். அதனை எடுத்துக்கொண்டு உங்களின் வீட்டின் முன்புறம் உள்ள ரோட்டில் போட்டுவிடவேண்டும். இதனை ஒரு முறை செய்தால் பாேதும். சனியின் தோஷம் உங்களை விட்டு போகும்.

சனியால் பாதிப்படைந்த நபரின் தந்தை அல்லது தாய் வீட்டில் உள்ள நபர்கள் யாராக இருந்தால் இதனை பாதிப்படைந்த நபருக்கு செய்யலாம். இதனை செய்வதால் அவர்களுக்கு பாதிப்பு வராது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, March 8, 2019

ஆறாவது வீடு தரும் செல்வம்


வணக்கம்!
          ஒரு மனிதனுக்கு ஏற்படும் மாற்றம் என்பது அவனுக்கு நடக்கும் சோதிடத்தில் உள்ள தசாவால் தான் பெரிய மாற்றம் என்பது ஏற்படும். சோதிடத்தில் உள்ள தசா நல்ல தசாவாக வந்தால் அவனுக்கு மாற்றம் அருமையாக இருக்கும். 

என்னை பொறுத்தவரை பெரியளவில் மாற்றத்தை ஒரு மனிதனுக்கு தருவது மறைமுகவீடான ஆறாவது வீட்டு தசா நடந்தால் நல்ல மாற்றத்தை மனிதன் காண்கிறான். ஒரு சிலருக்கு பெரிய மாற்றத்தை தருகின்றது. ஒரு சிலருக்கு மட்டும் கொஞ்சமான மாற்றத்தை தருகின்றது.

பெரியவில் மனிதனுக்கு மாற்றத்தை தரும் வீடாகவே ஆறாவது வீடு தான் இருக்கின்றது. ஏன் ஒரு சிலருக்கு கோச்சார ரீதியாக ஆறாவது வீட்டிற்க்கு வரும் கிரகங்கள் நல்ல மாற்றத்தை தருகின்றது. மாற்றம் என்பது என்ன என்றால் பெரிளயவில் செல்வவளத்தை தரும்.

ஆறாவது வீடு செல்வவளத்தை தரும் வீடாக இருக்கின்றது. உங்களின் இராசிக்கு ஆறாவது வீட்டில் ஒரு கிரகம் வந்தால் அது என்ன மாதிரியான மாற்றத்தை தருகின்றது என்று உற்று கவனியுங்கள். கண்டிப்பாக அது தான் உங்களுக்கு மாற்றத்தை தந்ததாக இருக்கும்.

ஆறாவது வீட்டில் உள்ள கிரகம் வாழ்நாளில் தசா நடப்பதற்க்கு வாய்ப்பே இல்லை என்றால் உங்களின் இராசிக்கு கோச்சாரபடி ஆறாவது வீட்டிற்க்கு ஒரு தீயகிரகம் வந்தால் அந்த காலக்கட்டத்தை அதிகமாக பயன்படுத்துங்கள். உங்களுக்கு நல்ல காலமாக அதனை மாற்றிக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, March 7, 2019

அடிக்கல்நாட்டு விழா படங்கள் பகுதி 2

வணக்கம்!
          நேற்று நடைபெற்ற அம்மன் கோவில் அடிக்கல்நாட்டுவிழா புகைப்படங்கள்.





அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அடிக்கல்நாட்டு விழா படங்கள் பகுதி 1

வணக்கம்!
          நேற்று நடைபெற்ற அம்மன் கோவில் அடிக்கல் நாட்டுவிழா புகைப்படங்கள்.







அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, March 4, 2019

அடிக்கல்நாட்டு விழா


வணக்கம்!
         அம்மன் கோவில் அடிக்கல்நாட்டு விழாவில் வேலை அதிகமாக இருப்பதால் பதிவுகள் குறைந்து வருகின்றன. அம்மன் கோவில் அடிக்கல்நாட்டுவிழா சிறப்பாக நடைபெறுவதற்க்கு அனைத்து வேலைகளை செய்துக்கொண்டு வருகிறேன்.

ஜாதக கதம்பத்தில் உள்ள நண்பர்களின் பங்கு மகத்தான ஒன்றாக இருக்கின்றது. உங்களால் தான் இது சாத்தியப்பட்டது. நீங்கள் இல்லை என்றால் கண்டிப்பாக இது நடந்து இருக்காது. அனைவரும் இதில் கலந்துக்கொள்ளவேண்டும் என்று அன்போடு வரவேற்கிறேன்.

அம்மன் கோவில் அடிக்கல் நாட்டுவிழா மற்றும் அம்மன் பூஜையும் ஒன்றாகவே நடைபெறவேண்டும் என்று தான் தீர்மானித்து செயலாற்றுகிறேன். அடிக்கல்நாட்டு விழாவிற்க்கு சிறப்பான ஒரு ஏற்பாட்டை செய்துக்கொண்டு இருக்கிறேன்.

அடிக்கல்நாட்டுவிழாவில் அன்னதானமும் சிறப்பான முறையில் நடைபெறவதற்க்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. அடிக்கல்நாட்டுவிழாவில் அன்னதானம் ஆயிரம் பேருக்கு என்ற முறையில் செயல்படுத்த வேண்டும் என்று வேலை செய்துக்கொண்டு இருக்கிறோம்.

அடிக்கல்நாட்டுவிழாவிற்க்கு முடிந்தவரை அனைவருக்கும் பத்திரிக்கை அனுப்பியுள்ளேன். அனைவரும் இதனை நேரிடை அழைப்பாக ஏற்றுக்கொண்டு இணைந்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, March 2, 2019

விரைய வீட்டில் லக்கனாதிபதி


வணக்கம்!
          ஒருவர் எப்படி செயல்படுவார் என்பதை காட்டுவது அவரின் ஜாதகத்தில் உள்ள லக்கானாதிபதி பெரும்பாலும் தீர்மானிப்பார். லக்கானாதிபதி ஜாதகத்தில் நல்ல இடத்தில் அமர்ந்தால் அவர் சிறப்பாக செயல்படுவார் அதே லக்கானதிபதி மறைவுஸ்தானத்தில் அல்லது தீயகிரகங்களோடு சேர்ந்து அமர்ந்தால் செயல்பாடு சிறப்பாக இருக்காது.

லக்கனாதிபதி விரைய வீடான பனிரெண்டாவது வீட்டில் அமர்ந்தால் என்ன நடக்கும் என்பதை மட்டும் கொஞ்சம் பார்க்கலாம். விரைய வீட்டில் இருப்பதால் இவர்கள் செயல் பெரும்பாலும் தோல்வியில் முடிவுறும்.

எனக்கு தெரிந்த பலரின் வாழ்வில் அவர்களின் திருமண வாழ்க்கை தோல்வியில் முடிவுறும். தோல்வியை சந்திக்கும் நிலையிலேயே இருக்கின்றது. இரண்டாவது திருமணம் செய்யவேண்டிய நிலையை உருவாக்கிவிடுகின்றது.

விரைய வீட்டில் லக்கனாதிபதி இருக்கும்பொழுது அவர்களை அடுத்தவர்கள் கட்டுபாட்டில் இருப்பது போலவே இருக்கும். அடுத்தவர்களுக்கு ஒரு அடிமைப்போலவே வாழ்க்கையை வாழவேண்டும் என்ற நிலை ஏற்படும்.

விரைய வீட்டில் லக்கனாதிபதி இருந்தால் அவர்களுக்கு பிறரால் மருத்துசெலவு அதிகமாகவே செய்யவேண்டிய நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ள நபர்களுக்காக அடிக்கடி மருத்துவமனை செல்லவேண்டிய நிலை உருவாகும்.

உங்களின் ஜாதகத்தில் லக்கானதிபதி விரைய வீட்டில் இருந்தால் உங்களுக்கு நடைபெறும் தசா அதன் புத்திக்கு தகுந்தமாதிரி உங்களுக்கு பிரச்சினையை தரும். உங்களுக்கு நடக்கும் தசாநாதன் ஒரு பலனை தருவதற்க்கு பதில் அந்தந்த புத்திநாதன் அதிகமாகவே செயல்படுகின்றது. ஒரு தசாநாதனின் முழுமையான பலனை எதிர்பார்க்க முடியாமல் போகின்றது.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, March 1, 2019

இனிய தொடக்கம்


வணக்கம்!
          இந்த மாதம் அம்மன் பூஜையை அம்மன் கோவில் அடிக்கல் நாட்டும்பொழுதே செய்யவிருப்பதால் அம்மன் பூஜைக்குள்ள காணிக்கையை செலுத்தி வைக்கலாம். அம்மன் கோவில் அடிக்கல் நாட்டுவிழா இருப்பதால் அனைவரும் இந்த விழாவில் பங்குக்கொள்ளவேண்டும். தாங்கள் செலுத்தும் காணிக்கை அம்மனின் அடிக்கல்விழாவிற்க்கு பயன்படும் அனைவரும் உடனே செலுத்த வைக்க அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு