Followers

Tuesday, April 30, 2019

செங்கிஸ்கான்


வணக்கம்!
          மங்கோலிய பேரரசை தோற்றுவித்த மன்னன் செங்கிஸ்கானைப்பற்றி தான் மூன்றாவது வீட்டோடு தொடர்புப்படுத்தி சொல்லுகிறேன். தொலைத்தாெடர்பு மற்றும் தைரியத்தை காட்டக்கூடிய ஜாதகத்தில் மூன்றாவது வீட்டோடு தொடர்புப்படுத்தி இவரை சொன்னால் கண்டிப்பாக இந்த வீட்டிற்க்கு பொருந்தும் என்று இதனை சொல்லுகிறேன்.

செங்கிஸ்கானை பற்றி நாம் வரலாற்று புத்தங்களில் படித்து இருக்கலாம். எழுத்தறிவிற்ற ஒருவர் உலகவரலாற்றின் மிகப்பெரிய நிலப்பேராரசை அமைத்தவன் என்று வரலாற்று ஆசிரியர்களையே குழப்பும் மன்னனாக திகழ்ந்தவர். வறுமையில் இருந்து ஒரு பெரிய பேராரசை உருவாக்கியவர் என்றால் இன்றளவும் நான் படித்த மன்னர் வரலாற்றில் இவர் ஒரு மைல்கல் என்று சொல்லலாம்.

ஒருவருக்கு நல்ல தைரியத்தை கொடுக்கும் மூன்றாவது வீடு பெரியளவில் படிப்பை கொடுப்பதில்லை என்பதையும் சோதிடவிதியாக உங்களிடம் சொல்லுகிறேன். அனைத்தையும் அனுபவத்திலேயே படித்துவிடுவார்கள்.

செங்கிஸ்கான் படை வருகின்றது என்றால் அனைத்து நாடுகளும் அதுவாகவே சரணடையும் என்று படித்து இருக்கிறேன். திறம்பட படையை நடத்துவதில் மிகுந்த சாமர்த்தியசாலியாக இருந்திருக்கிறார். ஒருவரை பார்த்தாலே அவரை எடைபோடும் அளவுக்கு அவரின் மனநிலை இருந்து இருக்கின்றது.

செங்கிஸ்கான் இளம் வயதில் இருந்தே நல்ல ஆன்மீகவாதியாக திகழ்ந்து இருக்கின்றார். ஒவ்வொரு படை எடுப்பு நடக்கும்பொழுதும் ஆன்மீக குறி கேட்டு அதற்கு தகுந்தார்போல் படை எடுப்பை நடத்துவார் என்று படித்து இருக்கிறேன்.

அலெச்சாண்டர் நெப்போலியனை விட சிறந்த ஒரு போர்வீரன் என்று சொல்லலாம். அலெக்சாண்டரிடம் அவர் தந்தை உருவாக்கி கொடுத்த இராணுவம் இருந்தது. நெப்போலியனிடம் நாடு இருந்தது அதனை வைத்து அவர்கள் போர் புரிந்தார்கள். செங்கிஸ்கான் அடிமட்டத்தில் இருந்து உருவாக்கியவர்.

உலகத்தில் முதல் சர்வதேசத் தபால் அமைப்பை ஏற்படுத்தியவர். சோதிடத்தில் மூன்றாவது வீடு தபால் அமைப்பை காட்டக்கூடியது என்று சொல்லலாம். மங்காேலியர்களை காட்டுமிராண்டி கூட்டம் என்று தான் சொல்லுவார்கள். அவர்கள் எப்படி இருந்தாலும் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்வதற்க்கு என்ன இருக்கின்றது என்பதை மட்டும் உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன்.

இன்றைக்கு நாம் அணிந்து இருக்கும் பேண்ட் கண்டுபிடித்தவர்கள் இவர்கள் தான். இன்றைக்கு அனைவரும் நாம் அணிந்து இருக்கும் பேண்ட் செங்கிஸ்கானின் படை வீரர்கள் தான் முதன் முதலில் அணிந்தார்கள். 

செங்கிஸ்கான் கடைசி வரை எளிமையாகவே வாழ்ந்தார். நாடோடி போலவே வாழ்ந்தார். மிகப்பெரிய அரண்மனை இருந்தும் கூடாரத்திலேயே வாழ்ந்தார். ஒரு ஆன்மீகவாதிக்கு உள்ள மிகப்பெரிய இலக்கணமாகவே இவரை கருதுகிறேன். இவரின் தைரியம் மற்றும் ஆன்மீகத்தை படிப்பதற்க்காக தான் இந்த பதிவை தந்தேன். செங்கிஸ்கானைப்பற்றி நிறைய புத்தகங்கள் இருக்கின்றன அதனை நீங்கள் வாங்கி படித்தால் உங்களுக்கு முழுமையான தகவல்கள் கிடைக்கும். சோதிடத்தில் மூன்றாவது வீட்டிற்க்கு பொருத்தமானாவர் இவர் இருப்பார் என்று எனக்கு தோன்றியது அதனால் இதனை எழுதினேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

மூன்றாவது வீடு


வணக்கம்!
          ஒரு தலைமுறை உழைத்து பல விசயங்களை கற்றுக்கொண்டுவிட்டால் அடுத்த தலைமுறைக்கு அந்த விசயங்களை எளிமையாக கொண்டு சென்றுவிடலாம். தற்பொழுது உள்ள தலைமுறைகள் தான் எளிதில் அனைத்தையும் கற்றுக்கொண்டு இருக்கின்றது. தொலைதொடர்பு சாதனங்கள் வழியாக எளிமையாக அனைத்தையும் தெரிந்துக்கொண்டு அதனை இளைய தலைமுறையினர்க்கு கொடுத்துவிடலாம்.

ஒரு பதினைந்து வருடத்திற்க்கு முன்பு இந்த வசதிகள் இருந்திருந்தால் பலரின் கர்மாவை அப்பொழுதே குறைத்து ஒரு நல்ல வாழ்க்கை வாழ ஆரம்பித்து இருக்கலாம். ஏன் பிரச்சினை வருகின்றது என்பதை அப்பொழுது நமக்கு தெரியவில்லை. தற்பொழுது தான் பலருக்கு சோதிடத்தில் வழியாக இதனை சரி செய்யமுடியும் என்பது தெரிய வருகின்றது.

நாம் பார்த்துக்கொண்டு இருக்கும் மூன்றாவது வீடு நமக்கு ஏற்படும் தொலைதொடர்பை காட்டக்கூடிய ஒரு இடமாக இருக்கின்றது. உங்களின் தொலைதொடர்பை காட்டக்கூடிய இடம் சரியாக இருந்தால் தான் நமக்கு அனைத்து தகவலும் வந்து சேரும்.

நீங்கள் நல்ல நிலையில் தகவல்களை நிறைய சேகரிக்க முடிகின்றது என்றால் உங்களின் மூன்றாவதுவீடு மிகச்சரியாக நல்ல முறையில் வேலை செய்துக்கொண்டு இருக்கின்றது என்று அர்த்தம்.  தகவல்களை சேகரிக்க உங்களின் மனம் விரும்பவில்லை என்றால் உங்களின் மூன்றாவது வீடு சரியில்லை என்று அர்த்தம்.

மனம் எதனை விரும்புகின்றது என்பதை பார்த்தே நாம் தெரிந்துக்கொள்ளலாம். நமக்கு எந்த வீடு மற்றும் எந்த கிரகம் வேலை செய்துக்கொண்டு இருக்கின்றது தெரியவரும். நாள் முழுவதும் செல்போனிலேயே காலத்தை போக்கிக்கொண்டு இருந்தாலும் உருப்படியாக தகவல்களை சேகரிக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு செயல்படும் நபர்களுக்கு மட்டுமே மூன்றாவது வீடு மிகச்சரியாக வேலை செய்கின்றது அர்த்தம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, April 29, 2019

தைரியத்தை கொடுக்கும் ரோல்மாடல் மற்றும் வழிபாடு


வணக்கம் !
          தற்பொழுது நாம் மூன்றாவது வீட்டைபற்றி பார்த்து வருகிறோம். மூன்றாவது வீடு என்பது நம்மிடம் இருக்கும் தைரியத்தை காட்டக்கூடிய ஒன்றாக இருக்கின்றது. தைரியம் இருந்தால் தான் எந்த வேலையும் ஒருவர் செய்ய முடியும். 
துணிச்சலாக செய்யும் செயல் பல தடவை உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். தைரியம் இல்லாதவர்கள் கூட தைரியத்தை வரவழைக்க அவர்கள் தைரியமான தெய்வத்தை வணங்கி தைரியத்தை பெறுவார்கள் என்று நாம் பார்த்து இருக்கிறோம்.

என்னுடைய அனுபவத்தை உங்களிடம் சொல்லுகிறேன். நான் பெரும்பாலும் புத்தகங்களை படித்து தைரியத்தை வளர்த்துக்கொண்டிருக்கிறேன். ஏற்கனவே உங்களிடம் சொல்லிருக்கிறேன் ஒரு மனிதன் நல்லவனா அல்லது கெட்டவனா என்பதைப்பற்றி எல்லாம் நமக்கு தேவையில்லை அவர்களிடம் இருக்கும் கருத்து நல்ல விசயங்களை நாம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று சொல்லிருக்கிறேன். 

ஹிட்லர் புத்தகத்தை எல்லாம் படித்து நம்முடைய சுயதன்மையை வளர்த்துக்கொள்ளவேண்டும் தனிமனிதனின் முன்னேற்றத்திற்க்கு அவரின் வாழ்க்கையை நாம் பாடமாக கூட எடுத்துக்கொள்ளலாம். ஒரு தனிமனிதனாக அவர் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள எந்தளவுக்கு தைரியம் இருக்கவேண்டும். இந்த தைரியத்தை நாம் எடுத்துக்கொள்ளலாம்.

ஹிட்லரின் தைரியத்தை எடுத்துக்கொண்டு நாம் இந்த காலக்கட்டத்தில் சண்டைக்கு செல்லவேண்டியதில்லை. பல வேலைகளில் இந்த தைரியத்தை நமக்குள் ஏற்படுத்திக்கொண்டு செயல்படும்பொழுது மூன்றாவது வீடு தைரியமாக செயல்பட்டு நமக்கு நல்லவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்துவிடும்.

பலருக்கு மனத்திற்க்குள் தயக்கமாக செயல்பட்ட காரணத்தால் தான் பல இடங்களில் வெற்றி பெறாமல் அதாவது வாய்ப்பை கைநழுவிவிடுவார்கள். உங்களின் வாழ்க்கையிலும் இது நடந்திருக்கும் மனதிற்க்குள் உள்ள தயக்கத்தால் பல நல்ல வாய்ப்புகளை நீங்கள் இழந்தது பல ஆயிரம் வாய்ப்புகளாக இருக்கும்.

தைரியமாக செயல்படுவதற்க்கு ஒரு போர்வீரனை ஒரு ரோல் மாடலாக நீங்கள் எடுத்துக்கொள்ளலாம் என்பதற்க்காக ஹிட்லரை பற்றி சொன்னேன். நீங்கள் வழிபாடு போல ஒன்றை செய்து நீங்கள் வரவேண்டும் என்றால் காளி தேவியை வணங்கி வரலாம். செவ்வாய்க்குரிய முருகனையும் வணங்கி வரலாம்.


பொதுவாக நான் ஆன்மீக வழியில் ஒரு போர்வீரன் இருந்து அவன் எந்தளவுக்கு தைரியத்தோடு செயல்பட்டு அவன் வெற்றி பெற்று இருக்கிறான் என்று தேடி படித்தது உண்டு. ஆன்மீகத்தை துணைக்கொண்டு மற்றும் தைரியத்தோடு அவர்கள் எப்படி செயல்பட்டார்கள். ஆன்மீகத்தை பயன்படுத்தியதால் அவர்கள் இந்த உலகம் இருக்கும் வரை எப்படி பெயர் வாங்கி இருக்கின்றனர் என்று தேடி அலைந்தது கூட உண்டு. நிறைய புத்தங்களையும் படித்து எப்படி ஆன்மீகத்தை பயன்படுத்தினார்கள் என்றும் படித்து இருக்கிறேன். 

நாளை உங்களுக்கு மூன்றாவது வீட்டோடு சம்பந்தப்பட்ட நல்ல தைரியமான ஒரு போர்வீரன் இன்றளவும் பேசப்படுகின்ற ஆள். சிறந்த ஆன்மீகவாதியாகவும் அவர் இருந்திருக்கிறார் அவரைப்பற்றி படித்த விசயத்தை உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

மூன்றாவது வீடு


வணக்கம்!
                    பெரும் முயற்சியில் நாம் தற்பொழுது இயங்கிக்கொண்டு இருக்கிறோம். நிறைய வேலைகளை எடுத்துபோட்டு செய்கிறோம். அம்மன் கோவில் கட்டுமானபணியை ஆரம்பிக்கவேண்டும்.  அம்மன் கோவில் கட்டும்பணிக்கு என்று மூலப்பொருட்களை இறக்கிக்கொண்டு இருக்கிறோம். பல வேலைகள் செய்துக்கொண்டே இருக்கிறேன். ஒவ்வொன்றாக அதனை செய்யும்பொழுது தங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். அம்மன் கோவில் கட்டும்பணிக்கு தங்களால் முடிந்தவரையிலும் உதவி செய்யுங்கள் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

மூன்றாவது வீட்டின் பலனை தெரிந்துக்கொள்ளவேண்டும் என்பவர்கள் தங்களின் ஜாதகத்தை அனுப்பி ஆலோசனை கேட்க சொல்லிருந்தேன். பலருக்கு பலனை சொல்லிவிட்டேன். இன்னமும் நிறைய பேர்கள் இதுவரை ஜாதகத்தை அனுப்பி கேட்கவில்லை என்று தோன்றுகிறது. அனைவரும் தங்களின் ஜாதகத்தை அனுப்பி இலவச ஆலோசனை கேட்டுக்கொள்ளலாம்.

மூன்றாவது வீட்டிற்க்கு எளிமையாக இருந்தால் அதாவது ஜாதகத்தில் பெரிய பாதிப்பு வரவில்லை என்றால் அவர்களுக்கு எளிமையான பரிகாரத்தை பரிந்துரை செய்து இருக்கிறேன். ஒரு சிலருக்கு மட்டும் குறிப்பாக மூன்றாவது வீட்டில் பெரிய பாதிப்பு வரும் நபர்களுக்கு பரிகாரம் செய்யவேண்டும் என்று சொல்லிருக்கிறேன். அதற்கு தங்களின் ஜாதகத்தை அனுப்பி செய்துக்கொள்ளலாம் அல்லது நேரில் வந்து செய்துக்கொள்ளலாம் என்று சொல்லிருக்கிறேன்.

நம்மால் முடிந்தவரை அனைத்தும் எளிமையான நீங்களே செய்யகூடிய வகையில் பரிகாரத்தை சொல்லுவது உண்டு. ஒரு சிலருக்கு அதனால் பாதிப்பு அதிகம் என்று தெரிந்தால் அதற்கு பரிகாரம் செய்யவேண்டும். கிரகங்களை சாந்தப்படுத்திக்கொள்ளும் பரிகாரத்தை செய்யவேண்டும். இதனை அலட்சியம் செய்யாமல் பரிகாரத்தை  செய்துக்கொள்ளுங்கள்.

மந்தமாக செயல்படும் நிலை ஒரு சிலருக்கு மூன்றாவது வீட்டால் வருகின்றது. நல்ல மூளையாக இருந்தாலும் அவர்கள் செயல்பாடு பெரியளவில் இருக்காது. இவர்கள் ஏதோ ஒன்றை பறிகொடுத்தது போன்று இருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் தங்களின் ஜாதகத்தில் மூன்றாவது வீட்டில் சனிக்கிரகம் மற்றும் இராகு கேது அமர்ந்து இருக்கும். 

இவர்கள் தங்களின் வாழ்க்கையில் பெரியளவில் வருவதற்க்கு வாய்ப்புகள் குறைவாக இருக்கும். பெரிய அளவில செய்யவேண்டும் என்று முயற்சி செய்வார்கள் ஆனால் அந்த முயற்சி தோல்வியை தழுவும் நிலை ஏற்படலாம். ஒரு தோல்வி ஏற்பட்டால் பரவாயில்லை எடுக்கும் முயற்சி அனைத்தும் தோல்வியை தழுவினால் அது பெரிய பாதிப்பை தரும் என்பதால் இந்த ஜாதகர்கள் ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது.

மூன்றாவது வீடு பாதிப்படைந்த ஆட்களுக்கு இயற்கை அவர்களுக்கு ஒத்துழைப்பது இல்லை. உப்பு விற்றால் மழை வருகின்றது  மாவு விற்றால் புயல் வருகின்றது என்பது போலவே செயல் இருக்கும். இயற்கையே இவர்களுக்கு எதிராக இருக்கின்றது என்பதை பல ஜாதகர்களுக்கு நான் அனுபவத்தில் பார்த்து இருக்கிறேன். ஜாதகத்தில் உள்ள கிரகங்களும் இயற்கை தானே அதனால் இயற்கையும் ஒத்துழைப்பது கிடையாது.

ஜாதக கதம்பத்தில் தினமும் இருபதிவுகளையாவது தாருங்கள் என்று நண்பர்கள் கேட்டுள்ளனர். அனைவரின் வேண்டுகோளை ஏற்று தினமும் இருபதிவுகளை தருகிறேன். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, April 28, 2019

மூன்றாவது வீடு எளிய பரிகாரம்


வணக்கம்!
                   தற்சமயம் நாம் மூன்றாவது வீட்டைப்பற்றி பார்த்து வருவதால் அதற்கு ஒரு சிறிய பரிகாரம் அதே நேரத்தில் எளிமையாக இருக்கவேண்டும் என்று எண்ணி அதனை செய்தேன். இது உங்களுக்கும் ஒரு நல்லதாக அமையும் என்று எண்ணியது அதனால் உங்களிடம் சொல்லுகிறேன். மூன்றாவது வீடு தபால் வழியையும் காட்டக்கூடிய ஒரு அமைப்பு என்பதால் இதனை செய்தேன். 

கொரியர் வழியாக ஏதாவது ஒன்றை செய்யவேண்டும் என்று எண்ணி செய்த விசயம் அது. நமது அம்மன் கோவிலுக்கு நன்கொடை திரட்டும் பணிக்கு நண்பர்களுக்கு நன்கொடை புக்கை அனுப்பி வைத்தேன். இது கொரியர் வழியாக தான் செய்தேன். அடுத்ததாக மூன்றாவது வீடு ஒரு விதத்தில் அன்னிய தேசத்தையும் குறிக்கும். நேராக ஒன்பதாவது வீடு இருப்பதால் இதற்கு அமேசான் ஆன் லைன் கடையில் ஒரு பொருளை வாங்கலாம் என்று எண்ணி அதனை தேர்வு செய்தேன்.

பொதுவாக நம்மிடம் ஒரு குணம் இருக்கின்றது. மக்கள் அதிகம் பேர் எதில் விழுந்து கிடக்கின்றார்களோ அதில் நான் ஈடுபாடு காட்டுவதில்லை. தற்சமயம் அனைத்து மக்களும் பொருட்களை வாங்குவதற்க்கு இந்த மாதிரியான ஆன்லைன் கடைகளில் வாங்குவதற்க்கு ஆர்வம் காட்டுகின்றனர். நமக்கு தேவையானவற்றை மட்டும் வாங்க வேண்டும் தேவையில்லாத விசயங்களில் ஆர்வத்தை தூண்டுவது போலவே இந்த கம்பெனிகள் இயங்கும்.

எதனை வாங்கலாம் என்று எண்ணி கடைசியில் ஒரு புக்கை வாங்கினேன். இது 700 ரூபாய் விலையில் வாங்கினேன். தபால் வழியாக நமக்கு ஒரு நல்லதை செய்துக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் அந்த வீட்டிற்க்குரிய பலன் எப்படி நடக்கின்றது என்று ஒரு செயல்படுத்தலாம் என்று எண்ணி இதனை செய்தேன். பெரும்பாலும் இது நன்றாகவே உங்களுக்கு உதவும்.

நம்மால் முடிந்த சிறிய விசயத்தை எளிமையாக கூட பரிகாரம் போல் செய்துக்கொள்ளலாம். பெரிய அளவில் இதனை பயன்படுத்த வேண்டிய நிர்பந்தம் வந்தால் வேறு மாதிரி செய்துக்கொள்ளலாம். எனக்கு மூன்றாவது வீடு ஒரு சில காலக்கட்டங்களில் பெரிய பிரச்சினையாக வந்து இருக்கின்றது. தற்பொழுது இது பிரச்சினை இல்லை நன்றாகவே வேலை செய்கின்றது. அதனை ஒரு பரிசோதனை செய்வதற்க்கு இதனை செய்தேன். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

வீடும் ஜாதகமும்


வணக்கம்!
                    வீட்டைப்பற்றி நாம் எழுதியிருந்தோம். பலர் தங்களின் வீட்டில் உள்ள வாஸ்து குறைகளைப்பற்றி சொல்லியுள்ளனர். வாஸ்து குறையை போக்குவதற்க்கு நான் பெரும்பாலும் சொல்லுவதில்லை. வாஸ்து நிபுணர்களை அழைத்து அதற்கு தீர்வு காணவேண்டும். நமக்கு தெரிந்த விசயத்தை சொல்லவேண்டும் என்பதற்காக தான் இதனை எழுதியிருக்கிறேன்.

சுக்கிரன் கிரகம் ஒருவரின் ஜாதகத்தில் எந்தளவுக்கு நன்றாக இருக்கின்றதோ அந்தளவுக்கு உங்களின் வீடு நன்றாக அமையும் அதாவது எந்தவித தோஷம் உங்களுக்கு வராது. சுக்கிரனின் ஆற்றல் வீட்டின் அழகை நன்றாக கூட்டி உங்களுக்கு நல்லதை செய்யும். பெரும்பாலும் சுத்தமான வீட்டில்  எப்படிப்பட்ட குறைகள் வந்தாலும் அதனை சரி செய்யும் ஆற்றல் அந்த வீட்டிற்க்கு உண்டு.

நம்முடைய ஜாதகத்தில் உள்ள கிரகத்தையும் நன்றாக ஆய்வு செய்து வைத்திருக்கவேண்டும். ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் தோஷம் உங்களுக்கு கெடுதல் தரும் நிலையில் இருந்தால் அந்த காலக்கட்டத்தில் உங்களின் வீட்டில் உள்ள பொருட்கள் உடையும். தீங்கு வருவதற்க்கு முன்பே உங்களுக்கு அறிகுறிகளை காட்டிக்கொடுக்கும்.

உங்களின் வீட்டை சுத்தம் செய்து வைத்திருந்தாலும் வீட்டில் உள்ள பொருட்கள் உடைந்தால் உடனே ஜாதகத்தை எடுத்து உங்களின் ஜாதகத்தில் எப்படி கிரகம் வேலை செய்துக்கொண்டு இருக்கின்றது பார்த்தால் உங்களுக்கு என்ன பிரச்சினை வரபோகின்றது என்பது புரியும். 

வீடும் நன்றாக இருக்கவேண்டும் அதோடு அவ்வப்பொழுது உங்களின் ஜாதகத்தையும் அலசி ஆராய்ந்து பார்த்து வந்தால் உங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை நீங்களே ஏற்படுத்திக்கொள்ளமுடியும். வீடும் சரியில்லாமல் ஜாதகத்தையும் ஆராய்ந்து பார்க்காமல் இருந்தால் பெரிய பிரச்சினையில் மாட்டிக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, April 27, 2019

சமையல் கூடம்


வணக்கம்!
          நமது வீட்டில் உள்ள சமையறையைப்பற்றி பதிவை தந்தவுடன் பல நண்பர்கள் தங்களின் சந்தேகங்களை கேட்டரிந்தனர். இதனை நான் வாஸ்துபடி சொல்லவில்லை அனுபவத்தை வைத்து சொன்னேன். 

பெரும்பாலான வீடுகளில் சமையறையில் சமையற் செய்ய பணிப்பெண்களை அனுமதிக்க மாட்டார்கள். வீட்டில் உள்ள பெண் தான் சமைத்து போடுவார்கள். சமையற்காரியின் மனநிலை பாதிப்பு வரும் என்பதால் இதனை தவிர்ப்பார்கள்.

தற்பொழுது சமையற்காரிகள் தான் பெரும்பாலான வீடுகளில் சமைக்கின்றனர். அவர்களின் வழிப்படி அதாவது அவர்களின் எண்ணப்படி தான் வீட்டின் தலைவன் இருப்பான். உங்களால் முடிந்தவரை நீங்களே சமைக்க பாருங்கள்.

சமையற் அடுப்பை சமைப்பதற்க்கு முன்பும் பின்பும் நன்றாக துடைத்துவிடவேண்டும். வெள்ளி செவ்வாய் கிழமைகளில் அதற்கு பொட்டு வைக்கவேண்டும். மஞ்சள் குங்குமம் வைக்கவேண்டும். மங்களகரமாக அமைத்துவிடவேண்டும்.

சமையற் கூடம் என்றால் அதனை மாடுலர் கிச்சன் வைத்து தான் இருக்கவேண்டும் என்பதில்லை சாதாரணமாக வைத்து இருந்தாலும் அதனை நன்றாக சுத்தமாக வைத்திருந்தாலே போதுமானது. உங்களுக்கு கடன் சுமை என்பது ஏற்படாது. செல்வசெழிப்பை அள்ளிக்கொடுத்துக்கொண்டே இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, April 26, 2019

உங்களின் வீட்டில் எந்த அறை முக்கியம்?


வணக்கம்!
          ஒரு வீட்டில் உள்ள அறைகளிலேயே மிகவும் முக்கியமான ஒன்றாக  எதனை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதைப்பற்றி சொல்லுகிறேன். ஒரு வீட்டில் பூஜையறைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமா இல்லையோ ஒரு வீட்டில் சமையறைக்கு மிக மிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

வீட்டில் முதலாக இடம் பிடிக்கும் அறை என்பது சமையல் அறை மட்டுமே. சமையல் அறை எந்தளவுக்கு பராமரித்து அதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றமோ அந்தளவுக்கு வீட்டில் உள்ளவர்கள் நன்றாக இருப்பார்கள். 

மனிதனுக்கு சக்தி கொடுக்கும் உணவு மட்டும் அல்லாமல் பல வழிகளிலும் மனிதனின் முன்னேற்றத்திற்க்கு வழி செய்வது சமையல் அறை. சமையல் அறைக்கு செல்லும் பெண்கள் மலர்ந்த முகத்தோடு செல்லவேண்டும். மலர்ந்த முகத்தோடு செல்லும்பொழுது தான் சிறப்பான ஒரு வாழ்க்கை அந்த வீட்டிற்க்கு கிடைக்கும்.

சமையறை சரியில்லை என்றால் பெரும்பாலும் அந்த வீட்டிற்க்கு கடன் வந்து சேர்ந்துவிடும். தற்பொழுது அனைவரும் கடனாக இருக்கவேண்டிய சூழ்நிலை இருப்பதால் அதில் கூடுதலாக வட்டிக்கு பணம் வாங்கி அதனை கட்டமுடியாத ஒரு சூழ்நிலையை உருவாக்குவது சமையறலை சரியில்லாத காரணத்தால் வருவது உண்டு.

பெரும்பாலும் சமையறையை அக்னி மூலையில் அமைத்து இருப்பார்கள். அக்னி மூலைக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. சமையறை என்றாலே அது சுக்கிரனின் கட்டுபாட்டிற்க்கு வரும். சுக்கிரன் நன்றாக இருந்தால் அது மிகப்பெரிய அளவில் உங்களுக்கு பணவசதியை கொடுக்கும். உங்களின் வீட்டில் சமையறை நன்றாக இருந்தால் உங்களுக்கு நல்ல செல்வவளம் வரும்.

ஒரு வீட்டின் ஆண் சம்பாதிக்கும் பணத்தில் முதல் இடமாக கொடுப்பது அவர்களின் உணவிற்க்காக இருக்கும். ஒரு பெண் அதில் எந்தளவுக்கு திறமையாக இருந்து சமைக்கின்றார் என்பதை பொறுத்து அந்த ஆண் சம்பாதிக்கும் திறமை வெளிப்படும்.

ஒரு வீட்டில் ஒரு சமையலுக்கு சமையற்காரியை வைத்திருந்தாலும் அந்த சமையல்காரி என்பவரும் முக்கியத்துவம் பெறுகிறார். வீட்டின் முதலாளியின் சம்பாதிக்கும் திறமைக்கு முழுபொறுப்பும் அந்த சமையல்காரியின் கையில் இருக்கின்றது என்பதை நினைவில் வைத்து அந்த சமையல்காரி சமைக்கவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, April 25, 2019

தினமும் செய்யவேண்டியவை


வணக்கம்!
          ஒருவர் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது தன்னுடைய பூஜையறையில் அமர்ந்து பூஜை செய்யவேண்டும். தினமும் இருவேளை செய்தால் மிகவும் நல்லதாகவே இருக்கும். நம்முடைய மதத்தில் கட்டுபாடு என்பது கிடையாது. பிற மதங்களில் ஒரு நாளைக்கு ஐந்து முறை கூட சாமி கும்பிடவேண்டும் என்று வைத்திருக்கின்றனர்.

கடவுள் நம்பிக்கை கூட வேண்டியில்லை நீங்கள் இப்படிப்பட்ட பழக்கத்தை செய்தாலே உங்களை நீங்களே சரி செய்துக்கொள்ளமுடியும். உங்களை நீங்களே ஒழுங்குப்படுத்திக்கொள்வதற்க்கு இது வழி செய்யும். ஒரு பயிற்சி போலவே இதனை செய்யவேண்டும்.

பூஜையறையில் நீங்கள் இருமுறை செய்தாலே ஒரு குறிப்பிட்ட காலத்திற்க்கு பிறகு உங்களின் உடல் புது பொழிவோடு காணப்படும். உங்களுக்கும் அடுத்தவர்களுக்கும் நிறைய வித்தியாசம் தெரியவரும். 

ஒரு சில காலக்கட்டத்திற்க்கு முன்பு காயத்ரி மந்திரப்பயிற்சியைப்பற்றி சொல்லிவந்தேன். பலர் இதனை செய்தார்கள். இது ஒரு நல்ல மாற்றத்தை உங்களுக்கு செய்திருக்கும். பல காரணங்களாக இதனை பதிவுகளில் தொடர்ந்து பின்பற்றி சொல்லி தரமுடியவில்லை. பல நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு இதனை தற்பொழுதும் செய்து வருகின்றனர்.

தினமும் ஒரு முறை அல்லது இருமுறை நீங்கள் பூஜையறையில் நல்ல முறையில் அமர்ந்து பூஜையை செய்யுங்கள். குறைந்தபட்சம் ஐந்து நிமிடமாவது அமர்ந்து விட்டு அடுத்த வேலையை செய்யுங்கள். உங்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

கல்வி உதவி தொகை
                      இது சுயநலத்தோடு கேட்கும் ஒரு உதவி. எனக்கு கல்வி உதவி தொகை தேவைப்படுகின்றது. கல்வி உதவியை செய்ய விரும்பும் நபர்கள் என்னுடைய வங்கி கணக்கிற்க்கு அனுப்பி வைக்கலாம். கல்வி உதவி என்று குறிப்பிட்டு அனுப்பி வையுங்கள். கோவில் கட்டுமானபணிக்கு என்று பணம் வருவதால் கல்வி உதவி என்று குறிப்பிட்டு அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, April 24, 2019

நவ அம்மன் யாகம் விளக்கம்


வணக்கம்!
          நேற்றைய பதிவை படித்துவிட்டு பல நண்பர்கள் நிறைய சந்தேகங்களை கேட்டனர். அவர்களுக்கு முடிந்தவரை போனில் தெரிவித்தலாம். இவ்வளவு சந்தேகங்கள் வந்ததால் அதனைப்பற்றி விளக்கி ஒரு பதிவை தந்துவிடலாம் என்று தான் இந்த பதிவை தருகிறேன்.

நவ சண்டி ஹோமத்தை தான் நான் நவ அம்மன் என்ற பெயரில் வைத்திருக்கிறேன். ஒன்பது கிரகங்கள் எப்படி ஜாதகத்தில் இருக்கின்றனவோ அதனைப்போல் ஒன்பது அம்மனாக வைத்து சண்டியை வணங்கி வருகிறோம்.

ஒவ்வொருவருக்கும் இதனை செய்யும்பொழுது அந்த புகைப்படங்களை எல்லாம் வாட்ஸ்அப்பில் பகிர்ந்து இருக்கிறேன். அளப்பரிய சக்தியை வெளிப்படுத்தும் புகைப்படங்களை பார்த்தவர்களுக்கு புரியும். கண்டிப்பாக இதில் நன்மை நடக்கும் என்பதும் புரியும். 

நவ அம்மன் யாகத்திற்க்கு ஒன்பது நாட்கள் செய்வதால் உங்களின் ஒன்பது கிரகத்தினை சாந்தப்படுத்தி நல்லதை செய்ய வைக்க முடியும். பலர் இதனை அதிகம் விரும்பி செய்வதற்க்கும் காரணமாக இருக்கின்றது.

நீங்கள் வெளியில் இந்த யாகத்திற்க்கு செலவை கேட்டால் நம்மிடம் நீங்கள் பத்து வருடத்திற்க்கு செய்துவிடலாம். அவர்கள் செய்வது எந்தளவுக்கு சக்தி வெளிப்படும் என்பது தெரியாது நாம் செய்வதை நன்றாக பார்த்தவர்கள் பலர் இங்கு இருக்கின்றனர்.

ஒவ்வொருவரும் தனியாக வருடம் ஒரு முறை இதனை செய்ய ஆரம்பியுங்கள் கண்டிப்பாக நல்ல மாற்றத்தை நோக்கி உங்களின் வாழ்க்கை பயணிக்கும். நீங்கள் இங்கு வந்து இதனை பங்கு பெறவேண்டும் என்றாலும் வந்த பங்கு பெறலாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒரு சில நண்பர்கள் ஒன்பது நாட்களில் ஒரு நாட்கள் வந்து பங்குக்கொள்கின்றனர். ஒன்பது நாட்களும் பங்குக்கொள்ள வேண்டும் என்றாலும் வந்து பங்குக்கொள்ளலாம். அனைவரும் இதனை செய்ய தயார் செய்யுங்கள். தனிநபராக இதனை செய்ய ஆரம்பியுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, April 23, 2019

வருடம் ஒருமுறை


வணக்கம்!
          வருடம் ஒரு முறை செய்ய வேண்டிய சிறப்பான பூஜை என்றால் அது நவ அம்மன் (சண்டி) யாகத்தை செய்யவேண்டும்.  எனக்கு தெரிந்த வரை பெரிய தொழில் அதிபர்கள் அனைவரும் ஏதோ ஒரு இடத்தில் வெளியில் தெரியாமல் இந்த யாகத்தை செய்துவிடுவார்கள்.

நான் பலருக்கு இந்த பூஜை செய்துக்கொடுத்துக்கொண்டே இருக்கிறேன். இதனை நமது நண்பர்களும் தொடர்ந்து செய்து வருகின்றனர். ஒன்பது நாட்கள் தொடர்ச்சியாக செய்யும்பொழுது அதன் ஆற்றல் மிகப்பெரிய அளவில் வேலை செய்கின்றது.

உங்களின் ஜாதகத்தில் அதிக தோஷம் இருந்தாலும் இந்த யாகத்தை நீங்கள் செய்துக்கொள்ளலாம். வருடம் ஒரு முறை நீங்கள் கட்டாயம் இந்த யாகத்தை செய்துக்கொள்ளுங்கள். நாம் இதற்கு வைத்துள்ள கட்டணம் மிக குறைவான ஒன்று தான் அதனை அனைவரும் செலுத்தி செய்யும் வகையில் தான் வைத்திருக்கிறேன்.

உங்களுக்கு தெரிந்தவர்கள் இதனை செய்கின்றனர் நான் அங்கு இதனை செய்துக்கொள்கிறேன் என்று நினைத்தாலும் அங்கு நீங்கள் செய்துக்கொள்ளுங்கள். எப்படியும் இதனை நீங்கள் உங்களின் குடும்பத்திற்க்காக செய்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, April 22, 2019

செலவு செய்தால் வெற்றி


வணக்கம்!
          ஒரு வேலை ஒழுங்காக நடப்பதற்க்கு நாம் திறமை வாய்ந்த நபர்களிடம் கொடுப்பது நன்றாக இருந்தாலும் ஒரு சில இடத்தில் அந்த நபர் நம்மிடம் வாங்கிய பணத்தை அழிப்பவர்களாக இருந்தால் அந்த வேலையால் நமக்கு பெரிய வாய்ப்பு மற்றும் சரியாக நடக்கும்.

உங்களிடம் வாங்கிய பணத்தை அவர் குடித்து அழிப்பவர் அல்லது ஏதோ ஒரு வகையில் ஊதாரிதனமாக செலவு செய்பவராக பார்த்து தேர்ந்தெடுக்கவேண்டும். ஒரு பொருளை ஒருவர் விற்கிறார் என்று வைத்துக்கொள்வோம் அவரிடம் நாம் அந்த பொருளை வாங்கினால் அந்த பொருள் நீண்டநாள்கள் உழைக்கும்.

நிறைய இடங்களில் நான் இதனை நன்கு கவனித்து சொல்லுகிறேன். நீங்கள் கொடுக்கும் பணத்தை வைத்து அவர் பெரியதாக ஒன்றும் வாங்கி வைத்துக்கொள்ள மாட்டார் நம்முடைய பணத்தை வைத்து அவர் திறமையாக பிழைக்கமாட்டார். நாம் கொடுத்த பணம் வீணாக போய்விடும்.

நாம் ஒரு கட்டடம் கட்டுவதற்க்கு மூலப்பொருள்களை வாங்கும் நபர்கள் சரியில்லாதவர்களாக இருந்தால் நமது கட்டடம் நன்கு வளரும். எந்த வித தடைகளும் இன்றி நமது கட்டடம் நன்கு வளர்ந்துவிடுகின்றது.  

நீங்கள் எனக்கு அனுப்பும் பணத்தை கூட நான் பெரியளவில் சேமிப்பதில்லை. சேமிப்பு என்பது இல்லை என்று தான் சொல்லவேண்டும் ஏன் என்றால் வரும் பணத்தை செலவு செய்தால் தான் உங்களுக்கு காரியம் நடக்கும். இது என்னுடைய குருவே சொல்லிக்கொடுத்த விசயம் இது. 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, April 20, 2019

மூன்றாவது வீடு இலவச ஆலோசனை


வணக்கம்!
          மூன்றாவது வீட்டைப்பற்றி பார்த்து வருகிறோம். நேற்று எழுதிய பதிவை படித்துவிட்டு நிறைய நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு பேசினார்கள். நாங்கள் போனை எடுக்க தான் நினைக்கிறோம் ஆனால் போனை எடுக்கமுடியாத அளவுக்கு எங்களுக்கு பிரச்சினை இருக்கின்றது என்று சொன்னார்கள்.

முதலில் உங்களுக்கு பிரச்சினை வருவதே உங்களின் ஜாதகத்தில் அப்படிப்பட்ட காலக்கட்டம் சென்றுக்கொண்டு இருக்கும். பொதுவாகவே  தீயகிரகங்களின் தசா காலக்கட்டம் அப்படி இருந்தாலும் மூன்றாவது வீட்டின் தசா உங்களுக்கு நடந்தால் கண்டிப்பாக உங்களுக்கு பிரச்சினை வரும்.

மூன்றாவது தசா நடக்கும்பொழுது உங்களுக்கு அதிகபடியான பிரச்சினை கடன் வாங்கி மாட்டிக்கொள்வது அதனால் போனை எடுக்கமுடியாமல் தவிப்பது. மூன்றாவது வீட்டில் உள்ள கிரகத்தின் பலன் தீயபலனாக கொடுத்தால் உங்களின் உறவினர்கள் வரை உங்களை வெறுக்க தொடங்கிவிடுவார்கள்.

மூன்றாவது வீட்டு தசா நடக்கும்பொழுது உங்களின் வளர்ச்சி என்பது சுத்தமாகவே இருக்காது. நீங்கள் பத்து ரூபாய் செலவு செய்து ஒரு வேலை செய்தால் அது ஆயிர ரூபாய் செலவு வைத்து உங்களை வீழ்த்த நினைக்கும்.

இப்படிப்பட்ட தசா உங்களுக்கு நடந்தால் உங்களின் ஜாதகத்தில் உள்ள கிரகத்திற்க்கு கண்டிப்பாக பரிகாரம் செய்யவேண்டும். பரிகாரம் செய்யமுடியவில்லை என்றாலும் குறைந்தபட்சம் அதற்கு வழிபாட்டையாவது நீங்கள் மேற்க்கொண்டால் மட்டுமே நீங்கள் தப்பிக்கலாம்.

மூன்றாவது வீட்டால் உங்களுக்கு பிரச்சினை வருகின்றது என்றால் நீங்கள் எனக்கு உங்களின் ஜாதகத்தை அனுப்பி இலவசமாக ஆலோசனை கேட்டுக்கொள்ளலாம்.

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, April 19, 2019

மூன்றாவது வீடும் தொலைதொடர்பும்


வணக்கம்!
          மூன்றாவது வீட்டைப்பற்றி பார்த்து வருகிறோம். மூன்றாவது வீடு என்பது ஒருவரின் தொலைதொடர்பு துறையைபற்றி காட்டும் துறையாகவும் இருக்கின்றது. உங்களின் செல்போனைப்பற்றி காட்டும் துறையாகவும் இது இருக்கின்றது என்று சொல்லலாம்.

மூன்றாவது வீடு இந்தியாவில் முக்கால்வாசி பேருக்கு சரியில்லை என்று சொல்லலாம். இந்தியாவில் செல்போன் பயன்படுத்துபவர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர் ஆனால் அந்த செல்போனில் வரும் அழைப்பை முக்கால்வாசி பேர் எடுப்பதில்லை என்றே தோன்றுகின்றது.

உங்களுக்கு வரும் செல்போன் அழைப்பை நீங்கள் எடுத்தால் உங்களுக்கு தைரியம் அதிகம் உங்களின் மூன்றாவது வீடு நன்றாக இருக்கின்றது என்று அர்த்தம். இந்த காலத்தில் வாய்ப்பு அதிகம் வருவது எல்லாம் செல்போன் வழியாக தான் வருகின்றது. செல்போனை எடுத்து நீங்கள் பேச ஆரம்பித்தாலே போதும் வாய்ப்புகள் உங்களை தேடி வந்துவிடும்.

கடன் வாங்குவது இயல்பான ஒன்று தான் அதனை நீங்கள் திருப்பி கொடுக்கிறேன் என்று சொல்லிவிடுங்கள். அதற்காக போனை எல்லாம் எடுக்காமல் இருக்கவேண்டாம். மீட்டிங்கில் இருந்தேன் போனை எடுக்கமுடியவில்லை என்று சொல்லுவார்கள். 

பல துறையிலும் நான் பார்த்து இருக்கிறேன் அவ்வளவு பெரிய பிஸியான துறை ஒன்றும் கிடையாது. மனிதன் சொல்லும் பொய் தான் மீட்டிங்கில் இருந்தேன் என்பது எல்லாம் இதனை எல்லாம் நீங்கள் தவிர்த்தால் உங்களின் மூன்றாவது வீடு ஒன்பதாவது வீட்டின் பலனை எடுத்து உங்களுக்கு கொடுக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, April 17, 2019

மூன்றில் சந்திரன்


வணக்கம்!
          ஒருவருக்கு மூன்றாவது வீட்டில் சந்திரன் சென்று அமர்ந்துக்கொண்டு இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். பொதுவாக தீயகிரகங்கள் அமர்ந்தால் மறைவுஸ்தானத்திற்க்கு நல்லது என்று சொல்லுவார்கள். சந்திரன் மூன்றில் அமரும்பொழுது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு தண்ணீரில் கண்டம் வரும் என்று சொல்லலாம்.

பெரும்பாலும் சந்திரனோடு தீயகிரகங்கள் மூன்றாவது வீட்டில் கூட்டணி போட்டு அமர்ந்துவிட்டால் ஜாதகரின் தாய் வாழ்க்கை கேள்வி குறியாக போய்விடும். ஏதோ ஒரு வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றார் என்று சொல்லும் அளவுக்கு வாழ்க்கை இருக்கும்.

பெரும்பாலான ஜாதகர்களுக்கு இந்த தசா வந்தால் இளமையில் ஜாதகரின் தாய் மரணம் எய்துவிடுவார். ஒரு சிலருக்கு தாய் இருந்தாலும் அவர்களால் ஒன்றும் பலன் இருக்காது. தாயை வைத்து பராமரிப்பதற்க்கே வாழ்க்கை போய்விடும்.

சந்திரன் என்ற கிரகம் மறைவுஸ்தானத்தில் அமருவது தவறான ஒன்று அதோடு அந்த கிரகம் தீயகிரகங்களோடு அமரும்பொழுது கண்டிப்பாக பெரிய பிரச்சினையாக இருக்கும். பெரும்பாலான ஜாதகர்கள் மனரீதியாக பாதிப்பில் மாட்டிக்கொள்வார்கள்.

சந்திரனும் சனியும் ஒன்றாக மூன்றில் அமர்ந்தால் பெரும்பாலும் ஜாதகரின் தாய் இளம்வயதில் மரணம் அடைந்துவிடுவார் அல்லது பைத்தியம் போல் இருப்பார்கள். பெரும்பாலான தாய் நோய்வாய்ப்பட்டுக்கொண்டு இருப்பார்கள். மூன்றாவது வீட்டில் சந்திரன் அமருவது தவறான ஒன்றாகவே எடுத்துக்கொள்ளவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, April 16, 2019

மூன்றாவது வீடு தரும் தைரியம்


வணக்கம்!
          மூன்றாவது வீட்டைபற்றி எழுதியவுடன் பல பேர் தங்களின் ஜாதகத்தை அனுப்பி பலனை கேட்டுக்கொள்கின்றனர். பலர் இப்படிப்பட்ட பிரச்சினை வைத்துக்கொண்டு தான் வாழ்க்கையை எதிர்க்கொள்கின்றனர் என்று தெரியவருகின்றது.

நாம் முடிந்தவரை நம்முடைய ஜாதகத்தில் உள்ள தோஷங்களை நீக்க நிறைய வழிபாடு சின்ன சின்ன பரிகாரத்தை எல்லாம் நீங்கள் செய்துக்கொண்டு அதனை சரி செய்யவேண்டும். நாம் கோவிலுக்கு செல்லும்பொழுது கூட இந்த எண்ணம் இருக்கவேண்டும் என்னுடைய தோஷம் நீங்கி நல்ல வாழ்க்கையை தரவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் கண்டிப்பாக உங்களின் தோஷம் நீங்கும்.

மூன்றாவது வீடு தைரியம் என்ற ஒரு காரத்துவத்தையும் வெளிப்படுத்துகின்றது. மூன்றாவது வீடு தைரியத்தை வெளிப்படுத்தினால் அந்த நபர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். பலருக்கு பயத்தால் தான் பல வெற்றிகள் வருவதில்லை. தைரியமாக இருக்கும் ஒருவர் சிறப்பாக செயல்பட்டு அவர்களுக்கு தேவையானதை பெற்றுவிடுவார்கள்.

தைரியம் என்பது செயல்பாட்டில் காட்டவேண்டும். ஒரு சிலரை நான் பார்த்து இருக்கிறேன். நான் எதற்கும் பயப்படமாட்டேன் என்று அனைவரையும் எதிர்த்துக்கொண்டு இருப்பார்கள். அனைவரையும் எதிர்ப்பதால் அவர்களுக்கு வரவேண்டிய நல்ல வாய்ப்பு என்பது கிடைக்காமல் போய்விடுகின்றது.

மூன்றாவது வீட்டில் தீயகிரகங்கள் அமர்ந்தால் அவர்கள் தைரியமாக இருப்பார்கள் அதே நேரத்தில் அவர்களின் தைரியம் அவர்களின் செயல்களில் மட்டுமே இருக்கவேண்டுமே தவிர மனிதர்களிடம் காட்டவே கூடாது. நான் தைரியமாக இருப்பேன் என்று மனிதர்களிடம் காட்டினால் நல்ல வாய்ப்பு கை நழுவி போய்விடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, April 15, 2019

மூன்றாவது வீடு


வணக்கம்!
          ஒருவரின் உடலை காட்டக்கூடிய அமைப்பு லக்கனம். நாம் மூன்றாவது வீட்டில் உள்ள கிரகத்தை பார்க்கும்பொழுது மூன்றாவது வீட்டில் கேது இருந்தால் அவர்க்கு உடல்நிலையில் பாதிப்பு வரும் என்று சொல்லிருக்கிறோம். இது முரண்பாடாக தோன்றலாம்.

லக்கனம் என்பது நம்முடைய உடலை காட்டக்கூடிய ஒரு இடமாக இருந்தாலும் நமது மனதை கா்ட்டக்கூடிய இடம் என்று எடுத்துக்கொண்டால் அது மூன்றாவது வீட்டையும் குறிக்கும். மூன்றாவது வீட்டில் உள்ள கேது மனதை கெடுக்கும். 

ஒருவருரின் மனம் கெட்டால் அவரின் உடலும் பாதிப்படைந்துவிடும். மனதால் உடல் கெடுவது தான் அதிகமாக இருக்கும். மனமும் உடலும் பின்னிபிணைந்த ஒன்று. மனதை போட்டு கேது கெடுக்கும்பொழுது அதுவாகவே உடலும் கெடுவதற்க்கு ஆரம்பித்துவிடும்.

ஜாதகத்தில் உள்ள அனைத்து வீடுகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புக்கொண்டவை தான் ஒவ்வொரு வீடும் மிகசரியாக வேலை செய்யும்பொழுது தான் உங்களின் நலமும் நன்றாக இருக்கும். உடல் என்றாலே லக்கனத்தை மட்டும் பார்க்காமல் அனைத்தையும் எடுத்துக்கொண்டு பலனை ஆராய்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

மூன்றாவது வீட்டில் உள்ள கேது மனதில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்திக்கொண்டு அவர்களின் உடலையும் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கரமித்துக்கொண்டு அவர்களின் உடல்நலம் மோசமாக போய்விடுவதற்க்கும் வாய்ப்பு இருக்கின்றது. உங்களுக்கு இப்படி இருந்தால் உங்களின் மனம் தான் இதனை செய்கின்றது என்று எண்ணி சரி செய்ய நினையுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள்

வணக்கம்!
          அம்மன் பூஜை நடைபெற்றபொழுது எடுத்த புகைப்படங்கள்.





அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, April 14, 2019

நல்வாழ்த்துக்கள்



வணக்கம்

          அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஜாதக கதம்பம் இன்று பத்தாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றது. அனைவருக்கும் முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அனைவருரின் உதவியோடு தான் இத்தனை வருடங்களும் தொடர்ந்து எழுதமுடிகின்றது. அனைவரும் தொடர்ந்து ஜாதக கதம்பத்தோடு பயணிப்பதால் இது சாத்தியப்படுகின்றது. அனைவருக்கும் நன்றியை தெரிவித்து இந்த வருடமும் நிறைய பதிவுகளை தரவேண்டும் என்று குருவின் பாதம் தொட்டு அம்மனின் அருளை வேண்டி பயணிப்போம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, April 13, 2019

அம்மன் பூஜை


ணக்கம்!
          இன்று அம்மன் பூஜை நடைபெறுகின்றது. அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்கள்.

சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்.  
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்.
சிங்கபூரை சேர்ந்த நண்பர் அவர்கள்.

காஞ்சிபுரத்தை சேர்ந்த திரு சிவன் அவர்கள்.
சென்னையை சேர்ந்த திரு ஹரிஹாரன் அவர்கள்.  
சென்னையை சேர்ந்த திரு சுகுமார் அவர்கள்.    

கோயம்புத்தூரை சேர்ந்த திரு வரதராஜன் அவர்கள்.
ஒடதுறையை சேர்ந்த மெய்யழகன் அவர்கள்.    
கரூரை சேர்ந்த திரு முத்துகுமார் அவர்கள்.      

பெரம்பலூரை சேர்ந்த திரு சத்தியசீத்தாராமன் அவர்கள்.  
பெங்களூரை சேர்ந்த திரு சுதன் அவர்கள்.  
மயிலாடுதுறையை சேர்ந்த யுவராஜ் அவர்கள்.
விழுப்புரத்தை சேர்ந்த திரு அசோக்குமார் அவர்கள்.

 வழக்கம்போல்            
                               திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள்.

அம்மன் பூஜை நடைபெறுவதால் உங்களின் வேண்டுதல்களை வைக்கலாம்.

எப்பொழுது போல் அம்மன் பூஜை தொடர்ந்து நடைபெறும். அம்மன் கோவில் அடிக்கல் நட்டு இருப்பதால் குறைந்த செலவில் இந்த அம்மன் பூஜையை நடத்துகிறேன். மீதி பணம் அம்மன் கோவில் கட்டுமானப்பணிக்கு பயன்படுத்தப்படும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, April 12, 2019

மூன்றில் கேது


வணக்கம்!
          மூன்றாவது வீட்டைப்பற்றி பார்த்து வருகிறோம். மூன்றாவது வீட்டில் கேது உங்களுக்கு இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு  உடல்நிலையில் மோசமான பாதிப்பை பிறந்த முதலில் இருந்து சந்தித்து வரலாம். 

மோசமான பாதிப்பு இல்லை என்றாலும் அவ்வப்பொழுது வந்து போகும் ஒரு வியாதியால் உங்களுக்கு பாதிப்பு வரும். உதாரணத்திற்க்கு தலைவலியே கூட எடுத்துக்கொள்ளலாம். உடலில் போதிய சத்து இல்லை என்றால் உங்களுக்கு தேவையான சக்தி கிடைக்காமல் அவ்வப்பொழுது வந்து போகும் நோயால் பாதிப்பு வரும்.

மூன்றில் கேது இருக்கும் ஆட்கள் காமத்தைப்பற்றி எண்ணியே உடலில் சக்தியை வீணடித்துவிடுவார்கள். ஒரு சிலர் தன்முயற்சியால் காமத்தின் சக்தியை வீணடித்துவிட்டு உடல் மோசமான ஒரு நிலைக்கு செல்ல வைத்துவிடுவார்கள்.

உங்களின் உடலுக்கு தேவையான சக்தியை பெற்றுக்கொண்டு அதன் பிறகு உங்களுக்கு பரிகாரத்தை பரிந்துரை செய்யலாம். இப்படிப்பட்டவர்கள் உடல்நிலையில் நல்ல நிலையில் இருந்தால் பரிகாரத்திற்க்கு நீங்கள் என்னை தொடர்புக்கொண்டு செய்துக்கொள்ளலாம். உங்களுக்கு தெரிந்தவர்கள் இதற்கு செய்கின்றனர் என்றாலும் சென்று செய்துக்கொள்ளுங்கள்.

பரிகாரம் செய்யாமல் மாற்று வழியில் நீங்கள் முயற்சி செய்யவேண்டும் என்றால் நீங்கள் ஒரு விநாயகர் கோவில் கட்டுங்கள். கட்டிய பிறகு உடனே பிரச்சினை தீர்ந்துவிடாது தொடர் முயற்சி செய்யவேண்டும்.

நீங்கள் கட்டிய விநாயகர் கோவில் கொஞ்ச நாள்கள் அல்லது சில வருடங்கள் சென்ற பிறகு உங்களுக்கு நல்ல வழிகாட்டும் அதன் பிறகு நீங்கள் முயற்சி செய்து நல்ல வாழ்க்கை வாழலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, April 11, 2019

இராகு & கேது


வணக்கம்!
          நம்முடைய அம்மன் கோவில் கட்டும் பணி என்பது பலரின் முயற்சியால் அது கைகூட வருகின்றது. உண்மையில் சொல்லபோனால் நான் எதிர்பார்த்த நபர்களை விட புதிய நபர்கள் நல்ல முயற்சி செய்து வருகின்றனர். அவர்களுக்கு என்றும் நான் கடமைப்பட்டு இருக்கிறேன். அம்மனின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். அனைவரும் தங்களின் உழைப்பை இதில் போடுங்கள் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.


ஒரு சிலர் கோவிலுக்கு சென்றால் உடனே நடந்துவிடுகின்றது. ஒரு சிலர் கோவிலுக்கு சென்றால் ஒன்றுமே நடப்பதில்லை. இது அனைத்தும் மூன்றாவது வீட்டில் அமர்ந்து இருக்கும் கிரகத்தின் பார்வை ஒன்பதாவது வீட்டை பார்ப்பதாலும் இருக்கின்றது.

கேது மற்றும் இராகு கிரகம் மூன்று மற்றும் ஒன்பதில் அமரும்பொழுது அவர்கள் அலைந்துக்கொண்டே இருப்பார்கள் ஆனால் அவ்வளவு எளிதில் அவர்களுக்கு அருள் கிடைக்காமல் இருக்கும். பல வருட முயற்சிக்கு பிறகு அவர்களுக்கு அருள் கிடைப்பது போன்ற ஒரு நிலை உருவாகும்.

மூன்றில் அமர்ந்த கேதுவால் நமக்கு நிம்மதியே கிடைக்காதா என்று கேட்கலாம். கண்டிப்பாக உங்களுக்கு நிம்மதி கிடைக்கும் ஒரு சில காலக்கட்டங்களுக்கு பிறகு உங்களுக்கு நிம்மதி கிடைக்கும். உங்களின் தேடுதலை பொறுத்து இந்த நிம்மதி கிடைக்கும்.

இன்றைக்கு இருக்கும் ஆன்மீகவாதிகளுக்கு பெரும்பாலும் இந்த தோஷம் இருக்கின்றது. இதனை அவர்கள் ஆன்மீக தேடுதல் வழியாக அதற்கு தீர்வை கண்டு இருக்கின்றனர் என்பது தான் உண்மையான ஒரு விசயம் ஆனால் யாரும் இதனை ஒத்துக்கொள்ளமாட்டார்கள்.

கேது மூன்றில் அமர்ந்தால் ஆன்மீக தேடுதல் ஒரு பக்கம் இருந்தாலும் ஒரு பக்கம் அவர்களின் உடலை நல்ல முறையில் பராமரிப்பதையும் ஒருவர் செய்து வரவேண்டும். ஒரு சில காலக்கட்டங்களுக்கு பிறகு அவர்களுக்கு உடல் ஒத்துழைப்பதில்லை. இதனையும் நன்கு சிந்தித்து உடலை சரியாக பராமரித்து வரவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, April 10, 2019

மூன்றாவது வீடு கேது


வணக்கம்!
          மூன்றாவது வீட்டைப்பற்றி பார்த்து வருகிறோம். முதலாக கேது கிரகம் அங்கு இருந்தால் என்ன என்பதைப்பற்றி நாம் பார்த்துவிடலாம். முதலாக கேது கிரகம் அங்கு அமரும்பொழுது அது தான் பெரியவில் அந்த வீட்டை கணக்கில் எடுத்துக்கொள்கின்றனர். 

பொதுவாக மூன்றில் அமரும் கிரகம் எதிராக இருக்கும் ஒன்பதாவது வீட்டை பார்த்துவிடுகின்றது. ஒன்பதாவது வீடு மிகச்சிறந்த வீடாக இருக்கின்றது. ஒன்பதாவது வீடு பாக்கியஸ்தானம் என்று அழைக்கப்படுகின்றது.

பாக்கியஸ்தானத்தை கொடூரமாக ஒரு கிரகம் பார்க்கும்பொழுது அந்த மனிதனுக்கு வருகின்ற அனைத்து நன்மையும் கெட்டுவிடுகின்றது.அதனால் தான் ஒரு மனிதன் வாழ்க்கை வீணாக போய்விடுகின்றது.

கேது கிரகம் மூன்றில் வந்தால் பெரும்பாலும் அவர்களின் வாழ்க்கை தொந்தரவாகவே சென்றுக்கொண்டு இருக்கும். கேதுகிரகம் மூன்றில் வரும்பொழுது ஒன்பதில் இராகு வந்துவிடுகின்றது. பெரும்பாலும் இராகு வேலை செய்கின்றதா அல்லது கேது வேலை செய்கின்றதா என்பது கண்டுபிடிப்பது பெரிய கடினம்.

இராகு கேதுவிற்க்கு பெரும்பாலும் இரண்டும் ஒன்று போலவே செய்கின்றது. இரண்டில் ஒன்று கண்டிப்பாக வேலை செய்து நமது வாழ்க்கையை வீணடித்துவிடுகின்றது. அதற்க்கு தான் பெரும்பாலான இடத்தில் நான் சொல்லுகிறேன். இராகு கேதுவிற்க்கு தகுந்த மாதிரி நமது வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவேண்டும். கேதுவைபற்றி நிறைய விசயங்கள் வரும் பதிவில் சொல்லுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, April 9, 2019

திருமணப்பொருத்தம்


வணக்கம்!
          நம்முடைய மக்கள் எல்லாம் பெரும்பாலும் மாப்பிள்ளை பெண் பொருத்தம் பார்க்கும்பொழுது செய்யும் வேலை அந்தந்த வீட்டில் விசாரிப்பார்கள். விசாரித்துவிட்டு ஒரு பக்கம் சரியில்லை என்றாலும் இவர்கள் சொல்லும் காரணம் சோதிடர் பொருத்தம் சரியில்லை என்று சொல்லிவிட்டார் என்று சொல்லுவார்கள்.

இருவருக்கும் ஜாதகப்பொருத்தம் நன்றாக இருந்தாலும் இவர்கள் ஒன்றை பிடிக்காத காரணத்திற்க்கு சோதிடர்கள் மேல் காரணம் சொல்லிவிடுவார்கள். இதனை சொல்லவேண்டாம் என்று சொல்லவில்லை இதனை சொல்லாமல் இருக்கவேண்டும் என்பதற்க்காக சொல்லுகிறேன்.

உண்மையான காரணத்தை நீங்கள் சொல்லிவிட்டால் உங்களைப்பற்றி அடுத்தவர்கள் இவர்கள் இதனை தான் எதிர்பார்க்கின்றனர் என்பதை சரியாக கணித்துவிட்டு அதற்கு தகுந்தார் போல் உங்களுக்கு வரனை சொல்லுவார்கள்.

நீங்கள் எதிர்பார்ப்பது என்ன என்பது அடுத்தவர்களுக்கு தெரிவித்துவிடவேண்டும். அதற்கு தகுந்தார்போல உங்களின் விருப்பத்திற்க்கு தகுந்தமாதிரி வரன் வந்துவிடும். நான் நிறைய பேர்களுக்கு திருமணப்பொருத்தம் பார்த்து சொல்லிருக்கிறேன். 

நான் திருமணப்பொருத்தம் பார்த்து சொல்லும்பொழுது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஏன் பிடிக்கவில்லை என்ற காரணத்தை சொல்லிவிடுங்கள் என்று சொல்லிவிடுவேன். இதனை அனைவரும் திருமணப்பொருத்தம் பார்க்கும்பொழுது செய்யுங்கள் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, April 8, 2019

மூன்றாவது வீடு


வணக்கம்!
          மூன்றாவது வீட்டைப்பற்றி எழுதியவுடன் பலர் தங்களின் ஜாதகத்தை அனுப்பியுள்ளனர். ஒவ்வொருவருக்கும் நான் கூப்பிட்டு பேசுகிறேன். நிறைய பேருக்கு மூன்றாவது வீடு பாதிப்படைந்து இருக்கின்றது என்று நினைக்கிறேன். 

உலகத்தில் உள்ள அனைத்து ஆன்மீகவாதிகளுக்கும் மூன்றாவது வீடு கெட்டு போயிருக்கும். ஒருவரை போட்டு அலைக்கழிக்க செய்யவைப்பது மூன்றாவது வீடாக தான் இருக்கும். ஊர் ஊராக சுற்றினாலும் ஒன்றுமே அவர்களுக்கு ஆகாது என்ற ரீதியில் சுற்ற வைக்கும்.

பெரும்பாலான சாமியார்கள் ஊர் ஊராக அலைந்துக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் அனைவருக்கும் மூன்றாவது வீடு கெட்டதால் தான் இந்த நிலை என்பது சோதிடம் தெரிந்தவர்களுக்கு நன்றாக தெரியும்.

ஒரு சிலருக்கு திருமணம் நடைபெறாமல் இருக்கும் அவர்களுக்கு எல்லாம் மூன்றாவது வீடு கெட்டு போயிருக்கும். ஒரு சிலருக்கு திருமணம் ஆனாலும் கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும் இது எல்லாம் மூன்றாவது வீட்டால் வந்து வினை என்று தான் எடுத்துக்கொள்ளவேண்டும்.

மூன்றாவது வீடு கெட்டு போயிருக்கின்றது என்பதை அறிய முதல் டெஸ்ட உங்களை அலைக்கழிப்பது அதன் வேலை அடுத்தது உங்களின் காது ஏதாவது ஒரு அரிப்பு ஏற்பட்டு பட்ஸ் வைத்து நோண்டிக்கொண்டே இருக்க வைக்கும் இது ஒரு சாதாரண உதாரணமாக நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, April 5, 2019

மூன்றாவது வீடு எனும் அரக்கன்


வணக்கம்!
          மூன்றாவது வீட்டில் லக்கனாதிபதி இருந்தால் அவர்க்கு மிகுந்த கஷ்டத்தை கொடுக்கும். மூன்றாவது வீட்டில் லக்கானதிபதி செல்வது என்பது ஒரு கடினமான பலனாகவே சம்பந்தப்பட்ட ஜாதகர்களுக்கு இருக்கின்றது.

மூன்றாவது வீட்டில் லக்கனாதிபதி செல்வது அல்லது மூன்றாவது வீட்டில் இருந்து ஒரு கிரகம் தசா நடத்துவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு பெரிய அவப்பெயரை ஏற்படுத்திக்கொடுத்துவிடுகின்றது. நிறைய போராட்டங்களை சம்பந்தப்பட்ட காலங்களில் சந்திக்க நேரிடும்.

மூன்றாவது வீடு என்பது நாம் எளிதாக எடுத்துக்கொள்ளமுடியாது. இதில் இராகு கேது அமரும்பொழுது தான் ஜாதகர் மிகுந்த கஷ்டத்தை சந்திப்பார். பித்ரு தோஷமாக மாறி ஜாதகரை போட்டு படுத்தி எடுக்கின்றது.

என்னைப்பொறுத்தவரை நான் பார்த்தவரையில் மூன்றாவது வீட்டின் தசா நடந்தால் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு எந்த ஒரு நல்ல காரியமும் நடைபெறுவதில்லை. என்ன தான் முயற்சி செய்தாலும் அவர்க்கு எந்த ஒரு காரியமும் நடக்காது.

மறைவுஸ்தானத்திலேயே மிகுந்த பவர் புல்லாக இருக்கும் இந்த வீடு ஒரு மிகுந்த கெட்ட வீடு என்று சொல்லலாம்.  ஒருவரை முடக்கி வைத்தால் அதுவும் நீண்டகாலத்திற்க்கு வைத்தால் அவரின் வாழ்க்கை எப்படி இருக்கும். இதனை மூன்றாவது வீடு கட்சிதமாக செய்கின்றது.

ராகு கேது இருந்தால் இதன் சக்தி மிகுந்த அளவில் வேலை செய்து பைத்தியக்காரன் என்ற பெயரை எடுக்க வைத்துவிடுகின்றது. உங்களுக்கும் இப்படிபட்ட நிலை இருந்தால் உங்களின் ஜாதகத்தை அனுப்பி அதற்கு விடை காணுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, April 4, 2019

அமாவாசை வழிபாடு


வணக்கம்!
          தற்பொழுது இருந்து நாளை பிற்பகல் 2:55 வரை அமாவாசை இருக்கின்றது. குலதெய்வம் மற்றும் இஷ்டதெய்வத்திற்க்கு என்று சிறப்பான பூஜைகளை செய்வதற்க்கு இது ஒரு உகந்த நேரமாக இருக்கும். 

குலதெய்வத்திற்க்கு சென்று ஒரு பொங்கல் வைத்து சாமி கும்பிட்டுவிட்டு வரலாம் அல்லது வீட்டில் பச்சைப்பரப்புதல் செய்து வழிபடலாம். அமாவாசை செய்தால் ஒரு சில குலதெய்வம் நீங்கள் கேட்டதும் கேட்காத பல நல்ல விசயங்களையும் உங்களின் குடும்பத்தினர்க்கு வாரி வழங்கும்.

வீட்டைவிட்டு வெளியிடங்களில் தங்கி வேலை செய்யும் நபர்கள் குலதெய்வம் மட்டும் இல்லாமல் உங்களுக்கு பிடித்த ஏதோ ஒரு கோவிலுக்கு சென்று வாருங்கள். இன்று மாலை நேரத்தில் கூட சென்று வரலாம். 

அமாவாசை அன்று முன்னோர்களுக்கு வழிபாடு செய்யலாம் அல்லது பச்சைப்பரப்புதல் செய்யும்பொழுது அவர்களுக்கு பிடித்த விசயங்களை வைத்து தனி இலையில் போட்டு படைக்கலாம். முன்னோர்களின் ஆசி உங்களுக்கு கிடைக்கும்.

எப்படிப்பட்ட தோஷத்தில் பிடிப்பட்டவர்களும் அமாவாசை தோறும் இப்படிபட்ட விசயங்களை செய்து வந்தால் அவர்களுக்கு தோஷம் விலகி நல்லது நடக்க ஆரம்பிக்கும். முடிந்தவரை அமாவாசை சம்பந்தப்பட்ட கோவிலாக இருந்தால் இன்னமும் சிறப்பாக இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, April 3, 2019

அம்மன் கோவில் கட்டும்பணி


வணக்கம்!
          அம்மன் கோவில் கட்டும் பணி ஆரம்பிக்கவேண்டிய ஒரு சூழ்நிலை நிலவுவதால் அதனை ஆரம்பிப்பதற்க்கு என்று நிறைய உதவிகளை உங்களிடம் எதிர்பார்க்கிறேன். ஏற்கனவே பல நண்பர்கள் தங்களின் காணிக்கை செலுத்தி வருகின்றனர். அனைவரும் இதில் பங்குக்கொள்ளவேண்டும் என்பதற்ககாக இதனை தெரிவிக்கிறேன் விரைவில் செலுத்தி வையுங்கள் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

அம்மன் கோவில் பணிக்கு உதவும் நண்பர்கள் தங்களின் முகவரியும் அனுப்பி வைத்தால் மிகவும் நல்லதாக இருக்கும். ஒவ்வொருவரும் தாங்கள் செலுத்தும் தொகைக்கு என்னிடம் இருக்கும் ரிசிப்டில் உங்களின் பெயரை எழுதி நீங்கள் அனுப்பும் தொகையும் பூர்த்தி செய்து உங்களின் வாட்ஸ்அப் எண்ணிற்க்கு அனுப்பி வைக்கப்படும்.

உங்களிடம் கொஞ்சம் அவசரப்படுத்துவது கடினமாக தான் இருக்கின்றது. வேலையின் காரணமாக தான் இதனை கட்டாயப்படுத்தி உங்களிடம் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு இருக்கிறேன். 

நம்முடைய அம்மன் கோவில் அடிக்கல் நாட்டுவிழாவிற்க்கும் சிறப்பான ஒரு உதவியை செய்தீர்கள். அம்மன் கோவில் ஆரம்பிக்கும் நேரத்திலும் இப்படிப்பட்ட உதவியால் நல்ல முறையில் அம்மன் காேவில் பணி ஆரம்பிக்கப்படும். உடனே செயல்படுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

தெளிவான நிலை உருவாக்க செய்யவேண்டியது?


வணக்கம்!
          நம்முடைய வாழ்வில் நிறைய கஷ்டங்களுக்கு காரணமாக இருப்பது நம்முடைய அறிவை தெளிவாக வைத்துக்கொள்ளாததும் ஒரு காரணமாக இருக்கின்றது. நமக்கு கிடைத்த அறிவை வைத்து மற்றும் வாய்ப்பை வைத்து நாம் செயலாற்றிக்கொண்டு இருப்போம் ஆனால் கிடைக்காத அறிவு மற்றும் வாய்ப்புகள் ஏராளமாக ஒவ்வொருவருக்கும் இருக்கும்.

ஒருத்தன் தெளிவாக இருந்தால் அவனை அவ்வளவு எளிதில் கிரகங்கள் பாதிக்காது. உங்களின் ஊரில் உள்ள பெரிய ஆள்களை பார்த்தால் அவர்கள் மிகுந்த தெளிவாக இருப்பார்கள். அவர்கள் செய்யும் அனைத்து காரியமும் தெளிவாக திட்டம் இட்டு செயலாற்றிக்கொண்டு இருப்பார்கள்.

நம்மிடம் மறைந்து இருக்கும் ஆற்றலை வெளிக்கொண்டு வருவதற்க்கு ஆன்மீகம் பயன்படும். நிறைய கோவில்களுக்கு செல்கிறோம் இந்த கோவிலுக்கு செல்லும்பொழுது எல்லாம் நமக்கு தெளிவான மனநிலை கிடைக்கும்.

ஒவ்வொரு கோவிலையும் நாம் தேடி தேடி சென்று தரிசனம் செய்வது எல்லாம் நம்மிடம் மறைந்து இருக்கும் ஆற்றலை வெளிப்படுத்திக்கொண்டு வருவதற்க்கு இந்த கோவில்கள் உதவி புரியும். பல பெரிய ஆட்கள் என்று சொல்லப்படும் நபர்கள் எல்லாம் இந்த வேலையை வெளியில் தெரியாமல் செய்துக்கொண்டு இருந்திருப்பார்கள்.

ஒரு சிலரை பார்த்தால் கோவிலுக்கு செல்லாமல் கூட நல்ல தெளிவாக இருப்பார்கள் இதற்கு காரணம் அவனிடம் உள்ள கிரக நிலை அப்படி இருக்கும் அவன் வளர்ந்த சூழ்நிலை அப்படி அவனை உருவாக்கி இருக்கின்றது. நம்மிடம் அப்படிப்பட்ட சூழ்நிலை இல்லை என்றால் நாம் அதனை உருவாக்க நிறைய ஆன்மீக வேலையை செய்யவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு


Tuesday, April 2, 2019

மேஷ இராசி


வணக்கம்!
          மேஷ இராசியின் குணங்களைப்பற்றி பார்க்கலாம். ஒவ்வொரு இராசியின் மைனஸ் பற்றி மட்டும் சொல்லுகிறேன். இதனை நீங்கள் திருத்திக்கொள்வதற்க்கு ஒரு வாய்ப்பாக இருக்கும். ஒவ்வொரு இராசியின் பெருமையைப்பற்றி நாம் சொல்லுவதால் ஒன்றும் நடக்க போவதில்லை அதனால் குறைகளைப்பற்றி சொன்னால் திருத்திக்கொள்ளமுடியும்.

மேஷ இராசியினர்க்கு இருக்கும் பெரிய பிரச்சினை நான் தான் செய்வேன் என்னால் தான் முடியும் என்ற ஒரு அதிகமான திமிர் இருக்கும். இதனை ஆணவம் என்றும் சொல்லலாம். இதனாலேயே பிறரால் ஒதுக்கப்படுவார்கள். இதனை புரிந்து நடந்துக்கொள்ளவேண்டும்.

பிறரிடம் எந்த வித ஆலோசனையும் இல்லாமல் முடிவு எடுப்பது. ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்தால் கூட உயர் அதிகாரியை கலந்து ஆலோசிக்காமல் தானே முடிவு எடுப்பதால் இவர்கள் பிரச்சினையில் சிக்குவது உண்டு.

பிறர் பித்தாலட்டம் செய்தால் இவர்கள் கோபப்படுவார்கள். அடுத்தவர்களுக்கும் இவர்களுக்கும் சம்பந்தமே இல்லாமல் அவர் ஏதோ ஒரு வில்லங்கத்தை செய்துக்கொண்டு இருந்தாலே இவர்கள் சம்பந்தமே இல்லாமல் சென்று வம்பு இழுப்பார்கள். அடுத்தவர்களை கண்டுக்கொள்ளாமல் இருப்பது தற்பொழுது உள்ள காலத்தில் நல்லவர்கள் என்று பெயரில் அழைக்கின்றார்கள். 

மேஷம் இராசி ஒரு நெருப்பு இராசி என்பதால் சுட்டு எடுக்கும் வார்த்தைகள் மற்றும் பார்வைகளை பிறர்களிடம் காட்டாமல் இருந்தால் நல்லது. நீங்கள் இப்படி காட்டுவது பிறர்க்க எரிச்சலை உண்டு செய்யும் என்பதை அறிந்து நடந்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, April 1, 2019

இனிய தொடக்கம்


வணக்கம்!
          அம்மன் பூஜை மாதந்தோறும் நடைபெறும். கண்டிப்பாக அம்மன் பூஜையை ஒவ்வொரு மாதமும் நடத்தவேண்டும் என்ற எண்ணத்தில் தான் இருக்கிறேன். கோவில் கட்ட போகிறோம் என்றவுடன் அம்மன் பூஜை இனிமேல் கிடையாதா என்று கேட்டார்கள். ஒவ்வொரு மாதமும் அம்மன் பூஜை உண்டு. அம்மன் பூஜையை நடத்துவதால் தான் இப்படிப்பட்ட நிலைக்கு வந்து இருக்கிறோம் அதனை நிறுத்தப்போவதில்லை. அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் செலுத்தலாம்.

இந்த மாதமே நம்முடைய அம்மன் கோவில் கட்டும்பணி ஆரம்பிக்க வேண்டும் என்ற திட்டத்தில் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறேன். ஜாதக கதம்பத்தில் உள்ள நண்பர்கள் தான் இதற்கு உறுதுணையாக செயல்படுகின்றனர். அனைவரும் ஒத்துழைப்பை தாருங்கள் என்று அன்போடு வேண்டுகோள் கேட்டுக்கொள்கிறேன்.


நிறைய பதிவுகளில் வீட்டை பராமரிப்பை பற்றி சொல்லிருக்கிறேன். அதே நேரத்தில் வீட்டில் ஒவ்வொரு பொருட்களும் இடம் மாற்றம் செய்தால் என்ன நடக்கின்றது என்பதை பார்க்கவேண்டும். ஒரு சோபா ஒரு இடத்தில் போட்டு இருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம் ஏதோ ஒரு காரணத்தால் அந்த சோபாவை இடம் மாற்றினால் என்ன நடக்கின்றது என்பதை நீங்கள் கவனித்து பார்க்கவேண்டும். 

ஒரு பொருளை ஒரு இடத்தில் இருந்து மற்ற இடத்திற்க்கு மாற்றும்பொழுது கூட ஏதாவது ஒன்று நடக்க ஆரம்பிக்கும். நல்லது நடந்து என்றால் பரவாயில்லை கெட்டது நடந்தால் ஏற்கனவே இருந்த இடத்திலேயே வைத்துவிடவேண்டும். அதனை மாற்றிக்கொண்டே இருக்ககூடாது.

வாடகை வீட்டில் நீங்கள் குடி போகின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீட்டிற்க்கு குடி போனதில் இருந்து உங்களுக்கு என்ன நடந்துக்கொண்டு இருக்கின்றது என்பதை பார்க்கவேண்டும். உங்களுக்கு நல்லது நடக்கின்றதா அல்லது கெட்டது நடக்கின்றதா என்பதை பார்த்து அதற்கு தகுந்தார்போல நீங்கள் இருக்கவேண்டும். 

ஒரு சில வீட்டிற்க்கு நீங்கள் சென்றதில் இருந்து உங்களுக்கு கெட்டது மட்டுமே வந்துக்கொண்டு இருக்கும். இந்த மாதிரியான வீட்டை தவிர்க்க பார்க்கவேண்டும். வீட்டை காலி செய்துவிட்டு புதிய வீட்டிற்க்கு செல்லவேண்டியது தான். இதனை வீட்டில் உள்ள பெண்கள் தான் கவனித்து உங்களின் கணவரிடம் சொல்லவேண்டும்.

வீட்டில் என்ன என்ன நடந்துக்கொண்டு இருக்கின்றது என்பதை பார்த்துக்கொண்டே வருவது நல்லது. உங்களின் வளர்ச்சிக்கு இந்த செயல் நல்ல உறுதுணையாக இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு