வணக்கம்!
ஆடி மாதத்தில் வரும் அம்மன் பூஜையில் அனைவரும் பங்கு கொண்டு அம்மன் அருள் பெறுங்கள். அம்மன் பூஜைக்கு தங்களால் முடிந்த காணிக்கையை அனுப்பி வையுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
வணக்கம்!
ஆடி மாதத்தில் வரும் அம்மன் பூஜையில் அனைவரும் பங்கு கொண்டு அம்மன் அருள் பெறுங்கள். அம்மன் பூஜைக்கு தங்களால் முடிந்த காணிக்கையை அனுப்பி வையுங்கள்.
வணக்கம்!
ஆன்மீகம் எதற்கு என்று நண்பர் ஒருவர் கேட்டார். அவரிடம் உரிய விளக்கத்தை அளித்தேன். உரையாடலின் ஒரு பகுதியை மட்டும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
நாம் எது எல்லாம் நம்மை காப்பாற்றும் என்று ஓடிக்கொண்டிருக்கும் அனைத்தும் நம்மை காப்பாற்றாது. நிறைய சம்பாதித்து விட்டோம். நம்மை சுற்றி நிறைய பேர் உள்ளனர். நமக்கு மரியாதை இருக்கிறது. அரசியல் செல்வாக்கு இருக்கிறது. இப்படி நிறைய இருப்பது அனைத்தையும் மரணம் உங்களை விட்டு பிரித்து விடும். இது எதுவும் உங்களோடு வராது.
நாம் உடலில் துணி இல்லாமல் பிறந்தோம். எதுவும் கொண்டு வரவில்லை. போகும் போது எதுவும் கொண்டு செல்ல போவதில்லை. இந்த உலகில் சேர்க்கும் பொருட்கள் எதுவும் உங்கள் கூட வரப்போவதில்லை.
நீங்கள் செய்யும் தியானம் அருள் இதனை மட்டுமே உங்களோடு வரப்போகிறது என்று புத்தர் சொல்லி உள்ளார். அழிவு இல்லாத ஒன்றை பெறுவதற்கு ஆன்மீகம் தேவை என்பதால் ஆன்மீகத்தை நாட வேண்டும்.
இந்த உலகில் உள்ள அனைத்து பொருட்களும் இறைவன் நமக்கு தந்தது அதனை பயன்படுத்தி கொள்ளலாம். அது உங்களோடு வராது.
பொருட்களை எல்லாம் பயன்படுத்தி கொண்டாலும் அதன் மீது ஈர்ப்பு வேண்டாம். உங்களோடு வரும் அருளுக்கு ஆன்மீகம் தேவை.
நன்றி
வணக்கம்!
ஜாதககதம்பத்தில் நாம் நிறைய கருத்தை பார்த்து இருக்கிறோம். பலர் விரும்புவது ஜாதக கதம்பத்தில் படிப்பது என்பதை அதிகமாக சொல்லுவார்கள். அவர்களின் விருப்பத்தை நாம் முடிந்த வரை நிறைவேற்றுவோம்.
ஜாதக கதம்பம் படித்து இருப்பீர்கள் ஆனால் எத்தனை பேர் என்னை சந்தித்து இருப்பீர்கள். ஜாதக கதம்பம் எழுத்து வழியாக உங்களை தொடர்பு கொள்ளும் வழியாக இருந்தாலும் என்னை சந்திக்கும் பொழுது உங்களுக்குள் ஆன்மீகம் வளர்வதற்கு வழி வகுக்கும்.
என்னை சந்திப்பதை விட்டு விடலாம் நீங்கள் குருவாக நினைப்பவர்களோடு எத்தனை முறை சந்தித்து இருக்கின்றீர்கள். அடிக்கடி சந்திப்பு நடக்கிறதா என்று எண்ணி பாருங்கள்.
உயிரோடு இருக்கும் குருவை அடிக்கடி சந்தித்தால் உங்களின் உயிர் ஆன்மீகத்தில் நன்றாக வளர்வதற்கு உதவியாக இருக்கும்.
வணக்கம்!
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஜாதக கதம்பம் இன்று பதிமூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. தொடர்ந்து ஆதரவை தரும் நண்பர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
நாம் வீடியோ சேனலை ஆரம்பித்த காரணத்தால் இதில் கவனம் செலுத்த முடியவில்லை. இனிமேல் உங்களை திருப்த்திப்படுத்த இதிலும் பதிவுகள் வரும். தொடர்ந்து ஆதரவை தாருங்கள்.
நன்றி
ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் தினமும் சக்தியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் அதனோடு அந்த சக்தியை உயர்நிலைக்கு எடுத்துக் கொண்டு செல்ல சிவராத்திரியும் ஒரு நல்ல நாளாக எடுத்து கொண்டு அந்த நாளை நன்றாக பயன்படுத்தலாம்.
ஒவ்வொரு நாளும் நிறைய தவறுகள் செய்துவிட்டு சிவராத்திரி அன்று மட்டும் கண்முழித்து சிவன் அருள் வேண்டும் என்பது தவறான வழியில் செல்கிறோம் என்பதாக எடுத்து கொள்ளலாம்.
இந்தியாவை பொறுத்தவரை இது ஆன்மீக பூமி. இந்த நாட்டில் எந்த நாளும் எந்த நேரத்திலும் ஆன்மீக சக்தியை பெறுவதற்கு உள்ள நாடு. இதனை நீங்கள் எந்த நாளும் எடுத்து கொள்ள முடியும். சிவராத்திரி அன்று கூடுதலாக உங்களுக்கு கிடைக்கும்.
சிவராத்திரி அன்று தரிசனம் செய்ய கூடாதா என்று கேட்கலாம். நீங்கள் தரிசனம் செய்யுங்கள் அதில் இருந்து முழு ஆன்மீகவாதியாக மாறி விடுங்கள்.
ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும் போது உங்களின் கர்மா போகும் அதனோடு நல்ல சக்தி வாய்ந்த ஒரு நபராக உருவாகிவிடுவீர்கள்.
நன்றி
வணக்கம்!
இந்த வருடம் தை பூசம் வருகின்ற தை மாதம் 5 தேதி வருகிறது. 18-01-22 செவ்வாய் கிழமை நடைபெறுகிறது. தை பூசத்தை முன்னிட்டு நமது தளத்தின் வழியாக சிறப்பு அன்னதானம் முன்கூட்டியே செய்ய பட்டு இருக்கிறது.
அன்னதானம் தயாரித்து ஏழை மக்களுக்கு கொடுக்கப்படுகிறது. முருகனின் அருளை பெறுவதற்கு அன்னதானம் தை பூசத்திற்க்காக செய்யும் பொழுது முருகனின் அருளை பெறமுடியும்.
அன்னதானம் தை பூசத்திற்க்காக சிறப்பு சலுகையில் செய்ய இருப்பதால் செய்ய விரும்பும் நண்பர்கள் என்னை தொடர்பு கொள்ளவும்.
நன்றி
வணக்கம்
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அம்மனை வணங்கி பதிவுகளை தொடங்குகிறேன். அம்மன் அருளால் அனைவரும் இந்த வருடம் முழுவதும் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் சந்தோஷமாக வாழ்வீர்கள். இந்த வருடம் நிறைய பதிவுகள் தர உள்ளேன். தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
நன்றி
அன்புடன்
ராஜேஷ்சுப்பு