Followers

Monday, December 14, 2020

தலைமுறையை காக்கும் விரதங்கள்



 வணக்கம்!
                     விரதம் இருப்பது மிக முக்கியமான காரணமாக இருப்பது தன் உடலை சுத்தப்படுத்திகொள்வதும் அதோடு நம்முடைய நோக்கம் நிறைவேறுவதற்க்கும் முக்கிய காரணமாக இருக்கின்றது. தன் உடலை சுத்தப்படுத்தி விரதம் இருக்கும்பொழுது அதனுள் இருக்கும் ஆத்மாவும் சுத்தப்படுத்தப்படுகின்றது.

ஒருவர் வறுமையில் இருக்கும்பொழுது ஏதோ ஒரு விரதமுறையை மேற்க்கொண்டு வந்தால் அவரின் வாழ்க்கையில் கண்டிப்பாக ஒரு காலத்திற்க்கு பிறகு அவர் சிறந்த முறையில் வாழ்க்கை வாழ்வார். நிறைய செல்வ வளங்களை கொண்டு வாழ்வது போன்ற ஒரு அமைப்பை அவர் இருந்த விரதமுறை அவர்க்கு ஏற்படுத்திக்கொடுத்து இருக்கும்.

விரதம் இருக்கும் நபர்களின் வாரிசுகள் நல்ல வாழ்க்கை  வாழ்வதற்க்கு விரதங்கள் துணை நிற்க்கும் என்பதை பல பேர்களின் அனுபவத்தில் நானே பார்த்து இருக்கிறேன். ஒரு வீட்டில் இருக்கும் இல்ல தலைவர் மட்டும் விரதம் இருக்காமல் அவரின் வாழ்க்கை துணைவியும் விரதம் இருந்தால் விரைவிலேயே அந்த குடும்பம் ஒரு நல்ல நிலைக்கு வரும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

மிக கஷ்டமான ஒரு நிலையில் நீங்கள் இருந்தால் அந்த நிலையில் இருக்கும்பொழுது நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட விரத முறையை நீங்கள் பின்பற்றி வாருங்கள். நிறைய விரதங்கள் இருக்கும்பொழுது கண்டிப்பாக விரைவில் அது உங்களை காப்பாற்றி அந்த நிலையில் இருந்து மாற்றிவிடும். 

இந்த பதிவை நான் தரும்பொழுது கூட கடை சோமவார விரதமுறையை நான் மேற்க்கொண்டு இந்த பதிவை உங்களுக்கு தருகிறேன். கண்டிப்பாக உங்களின் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டத்திற்க்கு விரதங்கள் இருப்பது ஒரு பெரிய மாற்றத்தை கொடுக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: