Followers

Saturday, November 8, 2014

அம்மன் பூஜை



வணக்கம் நண்பர்களே!
                    இந்த மாதம் அம்மன் பூஜை 9/11/14 ஞாயிறுக்கிழமை அன்று நடைபெறும்.

இந்த மாதம் அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்கள்

சென்னையை சேர்ந்த திரு கணேசன் அவர்கள்
சென்னையை சேர்ந்த திரு சம்பத்குமார் அவர்கள்
செய்யாரை சேர்ந்த திரு சரவணபாபு அவர்கள்
சென்னை சேர்ந்த திரு ராஜ்கண்ணா அவர்கள்
தூத்துக்குடியை சேர்ந்த கலைராஜன் அவர்கள்
சத்தியசீத்தாராமன் அவர்கள்
கோயம்புத்தூரை சேர்ந்த சுப்பிரமணியன் அவர்கள்

வழக்கம்போல் கிருஷ்ணப்பசரவணன் அவர்கள்
கண்டியூரை சேர்ந்த இராமபாலசுப்பிரமணியன் அவர்கள்.

மற்றும் பல நண்பர்கள் பணம் அனுப்பியுள்ளனர்.

அம்மன் பூஜை நடைபெறும் நாளில் அம்மனிடம் உங்களின் புதிய வேண்டுதலை வையுங்கள்.

நன்றி நண்பர்களே

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு

Thursday, November 6, 2014

சக்தி



வணக்கம் நண்பர்களே!
                    நேற்று கண்டியூர் இராமசுப்பிரமணியனை சந்திப்பதற்க்காக அவரின் இல்லத்திற்க்கு சென்று இருந்தேன். அவர் ஊர் ஆலங்குடி குரு கோவிலுக்கு அருகில் இருப்பதால் ஆலங்குடி குருவை தரிசனம் செய்யும் வாய்ப்பு கிட்டியது.பல முறை இந்த கோவிலுக்கு சென்றால் கூட நேற்றும் ஒரு வாய்ப்பாக அமைந்தது.

மாலையில் சென்று தரிசனம் செய்தேன். கோவிலில் கூட்டம் இல்லை நானும் என்னோடு வந்தவர் மட்டும் சென்று பொறுமையாக தரிசனம் செய்தோம்.கோவிலில் போட்டோ எடுக்க அந்தந்த கோவில் நிர்வாகதத்தில் கேட்டுவிட்டு தான் நான் போட்டோ எடுப்பது வழக்கம். இந்த கோவிலில் கேட்டபொழுது அவர்கள் போட்டோ எடுக்ககூடாது என்று சொல்லிவிட்டார்கள்.

ஒரு கோவிலில் சக்தி இருந்தால் நாம் போட்டோ எடுக்கும் கேமராவிலேயே தெரிந்துக்கொள்ள முடியும். கேமரா வழக்கத்திற்க்கு மாறாக ஒழுங்காக போட்டோ எடுக்காது. அதனை மீறி எடுத்தால் கூட அந்த போட்டோவில் சக்தியின் வெளிப்பாடாக ஏதாவது ஒன்று தெரியவரும். ஒரு சில கோவிலில்களில் போட்டோ எடுக்கும்பொழுது மங்கலாகவும் தெரியும்.

இந்த வழியில் கூட நீங்கள் கோவிலில் சக்தி இருக்கிறதா இல்லையா என்று நாம் தெரிந்துக்கொள்ள முடியும்.ஒரு சில கோவிலில் கேமராவில் கூட கண்டுபிடிக்கமுடியாத அளவுக்கு சக்தி இருக்கும்.


நன்றி நண்பர்களே!

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு


Wednesday, November 5, 2014

செல்வவளம் சேருவதற்க்கு செய்யவேண்டியவை


வணக்கம் நண்பர்களே!
                      ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் முன்னேற்றம் காணவேண்டும் நல்ல செல்வ செழிப்போடு வாழவேண்டும் என்று தான் உழைத்துக்கொண்டு இருக்கிறார்கள். உழைத்தால் மட்டும் போதுமா இறைவன் அதற்கு அருளவேண்டும் அல்லவா.

செல்வவளத்திற்க்கு என்றே பல நல்ல விசயங்களை பின்பற்றுங்கள் என்று ஜாதககதம்பத்தில் அடிக்கடி சொல்லிக்கொண்டு வருகிறேன். அந்த வகையில் ஒரு புதிய கருத்தை சொல்லுகிறேன். 

ஒன்றை மட்டும் முதலில் நினைவில் வையுங்கள் உங்களை மாற்றிக்கொள்ளாதவரை நீங்கள் என்ன தான் செய்தாலும் உங்களால் செல்வநிலையை அடையமுடியாது. பொதுவாக இந்துக்கள் அனைவரும் செல்வநிலையில் வாழ்ந்துவிடமுடியாது அதற்கு காரணம் இந்துக்களின் வழிபாடுகள் அனைத்தும் முக்தி என்ற நிலையை நோக்கியே அதிகமாக இருக்கும்.

முக்தி என்ற நிலை வந்துவிட்டால் அப்புறம் அங்கு செல்வவளத்திற்க்கு என்ன பேச்சு இருக்கமுடியும். அதே நேரத்தில் நீங்கள் கோவில் கோவிலாக அழைந்துக்கொண்டு இருந்தால் செல்வவளத்தில் ஒரு நாளும் முன்னேற்றம் காணமுடியாது. கேது உங்களுக்கு ஞானத்தை கொடுத்துவிடுவார். 

நான் சொன்ன பல நல்ல விசயங்கள் ஜாதககதம்பத்தில் இருக்கின்றன. அதாவது வெள்ளிக்கிழமை மட்டும் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபடுவது மற்றும் பல கோவில்கள் இல்லாத விசயங்களை நான் சொல்லிருக்கிறேன். அதனை நீங்கள் செய்தாலே போதும் உங்களுக்கு செல்வவளம் வரும்.

நன்றி நண்பர்களே!

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு

சோதிட அனுபவம்


வணக்கம் நண்பர்களே!
                      அம்மன் பூஜை மற்றும் சொந்த வேலை காரணமாக ஊருக்கு சென்றுக்கொண்டிருக்கிறேன். அம்மன் பூஜை அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியிடுகிறேன்.

ஒரு பெண்ணிற்க்கு ஆறாவது வீட்டில் கேது அமர்ந்து அந்த பெண்ணிற்க்கு ஏழாவது வீடும் பாதிக்கப்பட்டால் அந்த பெண்ணை திருமணம் செய்பவர்கள் பெரும்பாடு படவேண்டும். பல ஜாதகங்களை நான் பார்த்து இருக்கிறேன்.

இப்படிப்பட்ட ஜாதக அமைப்புடைய பெண்களை திருத்துவதும் கடினம். இந்த மாதிரி ஜாதகஅமைப்புடைய பெண்களை திருமணம் செய்த ஆண்கள் அவர்கள் கையால் அடிவாங்குவார்கள். இந்த காலத்தில் பெண்கள் ஆண்களை அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்பதை இந்த மாதிரி அமைப்பை வைத்து தான் நான் தெரிந்துக்கொண்டேன்.

ஒரு சில ஆண்கள் என்னிடம் வந்து இதில் இருந்து என்னை காப்பாற்றுங்கள் என்று கேட்பார்கள். அவர்களிடம் நான் அமைதியாக ஒதுங்கிவிடுங்கள் என்று சொல்லுவேன். அவர்களை எதிர்த்து ஒன்றும் செய்யமுடியாது. எதிர்த்து ஜெயிக்கமுடியாது. முடிந்தளவு அமைதியாக வெளியில் வந்து விடுங்கள் என்று சொல்லுவேன்.

இப்படிப்பட்ட ஜாதக அமைப்பில் பெண் இருந்தால் அவர்களை திருமணம் செய்யும்பொழுது மிகுந்த எச்சரிக்கையோடு இருங்கள். ஏழாவது வீட்டு அதிபதி யாரோடு சேர்ந்து இருக்கிறாரோ அவரை துணைக்கு வைத்துக்கொண்டு உங்களிடம் சண்டை போடுவார்கள்.

நன்றி நண்பர்களே

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.


Monday, November 3, 2014

அம்மன் வழியாக வெற்றி கிடைக்க


வணக்கம் நண்பர்களே!
                      பல நண்பர்கள் என்னிடம் தொடர்புக்கொண்டு ஏதாவது ஒன்றை உடனே செய்துக்கொடுங்கள் என்று கேட்பார்கள். அதாவது எந்த வேலையும் செய்யாமல் அதுவாகவே நடக்கவேண்டும் என்று கேட்பார்கள்.

எந்த ஒரு வேலையும் அதுவாகவே நடந்துவிடாது. நாம் அதற்க்காக முயற்சி செய்துவிட்டு அம்மனிடம் வேண்டுதல் வைத்தால் நடக்கும். நமது உழைப்பை கொடுத்துவிடவேண்டும் அதன் பிறகு விடையை எதிர்பார்த்தால் அனைத்தையும் வெற்றியாக முடித்துக்கொடுத்துவிடலாம்.

கடவுளோடு வேலையோ அவன் அந்த வேலையை ஒழுங்காக செய்து இருக்கிறானா என்று தான் பார்ப்பார். ஒழுங்காக செய்துவிட்டால் கண்டிப்பாக எப்படியும் அவனுக்கு வெற்றியை கொடுத்துவிடுவார்.99 சதவீதம் உழைப்பை கொடுத்துவிட்டு 1 சதவீதம் வந்தால் சக்சஸ் என்று இருக்கும்பொழுது வெற்றி கிடைக்கும்.

நிறைய பேர்கள் என்னிடம் வந்து உடனே ஏதாவது செய்துக்கொடுப்பார் என்று எதிர்பார்த்துவிட்டு அது நடக்கவில்லை என்றால் உடனே சென்றுவிடுவார்கள். அவர்களை பற்றி நான் கவலைக்கொள்வதில்லை காரணம் என்ன என்றால் அவர்கள் வேலையே செய்யவில்லை பிறகு எப்படி வெற்றி கிடைக்கும்.

இனிமேலாவது வருபவர்கள் அனைத்து வேலையும் செய்துவிட்டு வெற்றி எப்படியும் வரவேண்டும் என்று நினைத்து வந்தால் எளிதில் நாம் கொடுத்துவிடலாம். இப்படி வருபவர்களுக்கு அம்மன் கண்டிப்பாக வெற்றி கொடுக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

கதித்தமலை வெற்றி வேலாயுதசுவாமி பகுதி 3

வணக்கம் நண்பர்களே!
                      கோவிலுக்கு முன்னால் ஒரு புற்று கோவில் உள்ளது. இது ஒரு சித்தரின் சமாதி என்று சொல்லுகின்றனர். மயூரகிரிநாதர் என்றும் ஒரு சிலர் சொல்லுகின்றார்கள். இதனை மக்கள் அழைப்பது சுப்பராயர். 



கீழே உள்ள படத்தில்இருப்பது காவல்தெய்வம்



கீழே இருக்கும் இந்த கோவில் தான் புற்று கோவில். இதில் தான் சித்தர் சமாதி அமைந்திருப்பதாக சொல்லுகின்றனர். சக்தி மிகுந்த ஒரு இடமாக இது இருக்கிறது.  அதன் சக்தியை காட்டியவுடன் அருகில் இருக்கும் கடையில் இருந்து மாலை மற்றும் பூக்களை வாங்கி வந்து பூஜை செய்தோம்.


இந்த பகுதிக்கு நீங்கள் செல்லும்பொழுது கண்டிப்பாக இந்த ஆலயத்திற்க்கு சென்று வணங்கி வாருங்கள். அந்த பகுதியில் நீங்கள் வசித்து வந்தால் தினமும் சென்று வணங்கி வாருங்கள். இது ஒரு அற்புதமான கோவில். 

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.





கதித்தமலை வெற்றி வேலாயுதசுவாமி பகுதி 2

வணக்கம் நண்பர்களே!
                      இந்த கோவிலில் வள்ளி தெய்வாணை சந்நிதிகள் தனியாக உள்ளன. வள்ளி தெய்வாணை இருவருக்கும் தனியாக பின்புறம் தனி கோவில் உள்ளது.










நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.