Followers

Thursday, March 26, 2020

இராகுவிற்க்கு பரிகாரம் சுக்கிரன்


வணக்கம்!
                கொரோனாவால் மக்கள் இராகு பக்கம் கேள்வி திருப்புகின்றனர். இராகுவால் தான் பெரிய பிரச்சினை வருகின்றது இதனை சரி செய்வது எப்படி மற்றும் இராகுகிரகத்தை எந்த கிரகத்தால் கட்டுப்படுத்த முடியும் என்று கேட்டனர். இராகுவின் நட்சத்திரமாக இருப்பது திருவாதிரை சுவாதி மற்றும் சதயம் நட்சத்திரம். திருவாதிரை மிதுன இராசியில் வருகின்றது. மிதுன இராசியில் புதனின் வீடு சுவாதி துலாம் இராசியில் வருகின்றது. துலாம் சுக்கிரனின் வீடு மற்றும் சதய நட்சத்திரம் கும்பத்தில் வருகின்றது. கும்பம் சனியின் வீடு. 

மூன்று இராசியில் துலாம் இராசியில் இராகுவின் வீரியம் குறைவாக இருக்கும். மற்ற இராசிகளை விட துலாம் இராசியில் இராகுவின் வீரியம் குறைவாக இருப்பதற்க்கு காரணம் அந்த இராசியின் அதிபதி சுக்கிரனால் மட்டுமே இது சாத்தியம். அசூரகுருவின் அருளால் இராகுவின் வீரியம் குறைந்துவிடுகின்றது. சுவாதி நட்சத்திரக்காரர்கள் மற்ற இராகுவின் நட்சத்திரத்தை விட நன்றாக வாழ்க்கின்றனர் என்றதால் அதற்கு சுக்கிரன் காரணமாக இருக்கின்றார்.

இராகுவின் வீரியம் சனி மற்றும் செவ்வாய் கிரகத்தால் வீரியம் குறையும் என்றால் அது அந்தளவுக்கு சாத்தியப்பட்டு வராது என்றே சொல்லவேண்டும். குரு கிரகம் நல்ல நிலையில் வரும்பொழுது இராகுவின் வீரியம் குறைய தொடங்கும் என்றாலும் அதுவும் அனுபவத்தில் ஏற்றுக்கொள்ளமுடியாதபடியாக தான் இருக்கின்றது.

இராகுவிற்க்கு துர்க்கை மற்றும் நாகாத்தமன் வழிபாடு எல்லாம் பெண் தெய்வங்களை வைத்தே வழிபாடு செய்யப்படுகின்றது. சுக்கிரனின் காரத்துவம் உடைய பெண் தெய்வங்களை வைத்து வணங்கும்பொழுது மட்டுமே இராகுவின் வீரியம் குறையும் மற்ற எந்த வழிபாடும் அந்தளவுக்கு ஏற்றுக்கொள்ள முடியாதபடியாகவே இருக்கும்.

இதனைப்பற்றி ஒரு வீடியோ பதிவை தந்திருக்கிறேன். இதனை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளவும்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, March 25, 2020

கொரோனா (Corona Virus)


வணக்கம்!
         கொரோனா உலகயே அச்சுறுத்தி வருகின்றது. கொரோனா தாக்குதலால் பலர் உயிர் இறந்து இருக்கின்றனர். கொரோனா தாக்குதலில் இருந்து மீண்டு வருவதற்க்கு அரசாங்கம் சொல்லிருக்கும் வழிமுறைகளை பின்பற்றி வாருங்கள் அதோடு ஆன்மீக வழியிலும் நீங்கள் வீட்டிலிருந்து வழிபாடு செய்து வாருங்கள். ஆன்மீக வழியில் பல மந்திரங்களை தற்பொழுது அனைத்து ஆன்மீகவாதியும் சொல்லிவருகின்றனர் அதனை அனைத்தையும் உங்களால் சொல்லமுடியாது. உங்களுக்கு தெரிந்த ஏதோ ஒரு வழிபாட்டை மட்டும் சொல்லி வரும்பொழுது உங்களுக்கு நல்லது நடக்கும்.

புதிய மந்திரங்களை சொல்லி வந்தால் அது உரு ஏற்றி வேலை செய்வதற்க்கு பல நாட்கள் சென்றுவிடும். ஒரு மந்திரம் ஒரு தடவையில் வேலை செய்யாது. வேலை செய்வதற்க்கு நீண்ட நாள்கள் எடுத்துக்கொள்ளும் என்பதால் புதிய மந்திரத்தை நீங்கள் எடுக்கவேண்டாம். உங்களுக்கு தெரிந்த மந்திரத்தை உரு ஏற்றினால் நல்லது. 

ஆன்மீக வழியில் நீண்ட நாள்களாக இருந்தால் நீங்கள் ஏதாே ஒரு மந்திரத்தை மட்டும் சொல்லி வந்து இருப்பீர்கள். அதனையே நீங்கள் இந்த நேரத்தில் பயன்படுத்திக்கொள்ளுங்கள். காயத்திரி மந்திரத்தை உரு ஏற்றி வந்திருந்தாலும் அதனையே நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

உங்களுக்கு எந்த ஒரு மந்திரமும் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை உங்களின் பூஜையறையில் சிறிது நேரம் உங்களின் மனதை விட்டு வேண்டிக்கொண்டாலே போதும். உங்களுக்கு நல்லது நடக்க ஆரம்பித்துவிடும். தற்பொழுது உள்ள சூழ்நிலையில் உங்களின் மனம் நல்ல ஆற்றலோடு இருக்கும்பொழுது மட்டுமே உங்களால் எளிதில் அனைத்தையும் எதிர்க்கொள்ளமுடியும். தற்சமயம் கோவில்களும் மூடி இருப்பதால் நீங்களே உங்களின் வீட்டின் பூஜையறையை நன்றாக பயன்படுத்திக்கொள்ளலாம்.


இதனைப்பற்றி வீடியோ பதிவை ஒன்றை வெளியிட்டு இருக்கிறேன். அதனை பார்த்த தெரிந்துக்கொள்ளுங்கள்.


அம்மன் பூஜை வருகின்ற 5 ஆம் தேதிக்குள் நடத்தப்படும். அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்களுக்களின் முன் ஏற்பாட்டிற்க்காக தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, March 23, 2020

அமாவாசை சிறப்பு பூஜை


வணக்கம்!
           கொரோனா தடுப்பு சிறப்பு யாகம் நேற்று சிறப்பாக செய்யபட்டது. யாகத்திற்க்காக தங்களின் குடும்பத்தினர்களின் பெயர்களை அனுப்பிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. கண்டிப்பாக உங்களுக்கு மிகப்பெரிய ஆற்றலை கொடுத்து இதனை  செய்து இருக்கிறேன். நம்முடைய நண்பர்கள் அனைவரும் இதில் இருந்து எளிதில் தப்பிக்கலாம். அரசாங்கம் சொல்லும் வழிமுறைகளையும் பின்பற்றி வாருங்கள்.

அமாவாசை இன்று பிற்பகலில் இருந்து வர இருப்பதால் இன்று மாலை நேரத்தில் சிறப்பு பூஜை நடத்த இருக்கின்றேன். இது முற்றிலும் இலவசம். அனைவரின் பெயரும் மற்றும் நட்சத்திரமும் என்னிடம் இருக்கின்றது அனுப்பதாவர்கள் வேண்டுமானால் அனுப்பி வைக்கலாம்.

தேவை ஏற்பட்டால் நவ சண்டி யாகமும் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்த இருக்கிறோம். அச்சம் இன்றி அம்மனின் அருளால் நீங்கள் நன்றாக வாழலாம்.  உங்களின் நலனுக்காக அனைத்தும் இலவசமாகவே நடத்தப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்களின் வீட்டில் இருந்து அம்மனை வேண்டிக்கொள்ளுங்கள். பல வழிபாட்டு முறைகள் உங்களுக்கு தெரிந்து இருக்கும் என்று நம்புகிறேன். உங்களுக்கு எது பிடித்த வழிபாடோ அதனை நீங்கள் தினமும் செய்து வாருங்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, March 20, 2020

கொரோனா தடுப்பு சிறப்பு யாகம்


வணக்கம்!
           உலகம் எங்கும் கொரோனா வைரசு தாக்குதலால் பல உயிர்கள் பலி வாங்கி உள்ளது. பல பேர்கள் இதற்கு பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். பல நாடுகளிலும் உள்ள மக்களை தாக்கிக்கொண்டு இருக்கின்றது. உலக நாடுகளில் உள்ள மக்கள் அனைவரும் அச்சுறுத்தலில் இருக்கின்றனர். இதற்கு தீர்வு அரசாங்கம் சொல்லுவதை கேளுங்கள் அதோடு ஆன்மீகத்தில் வழியலும் நாம் இதற்கு ஏதோ ஒன்றை செய்யவேண்டும் என்று தோன்றியது.

நமது நண்பர்களே என்னிடம் இதனைப்பற்றி கேட்டனர். இதற்கு தீர்வு எப்பொழுது வரும் என்று பல நண்பர்கள் கேட்டனர். என்னுடைய பதிலை அவர்களுக்கு கொடுத்து இருக்கிறேன். நம்முடைய ஆன்மீக சக்தியை வைத்து நாமும் ஏதோ செய்யவேண்டும் என்ற நினைப்பு இருந்தது. வரும் ஞாயிறுக்கிழமை அன்று சிவராத்திரி மற்றும் அன்று இராகுவின் நட்சத்திரமான சதயமும் வருகின்றது.

இன்றைய நாளில் கொரோனா தடை சிறப்பு யாகம் செய்ய இருக்கிறோம். நமது நண்பர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்திற்க்க்கும் மற்றும் உலக மக்களுக்காக இந்த யாகம் நடைபெற இருக்கின்றது. இதில் நமது ஜாதககதம்பத்தில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் நட்சத்திரத்தை அனுப்பி வைக்கவும். இதனை இலவசமாக தான் செய்ய இருக்கிறேன். இதில் விருப்பட்டு காணிக்கை செலுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் அனுப்பி வைக்கலாம். யாகம் பெரியளவில் நடைபெறுவதற்க்கு அது வழி செய்யும் என்பதால் மட்டுமே சொல்லுகிறேன். உடனே நமது நண்பர்கள் எனது வாட்ஸ்அப் எண்ணிற்க்கு தங்களை பற்றி விபரத்தை அனுப்பி வைக்கவும்.

நாம் பெயர் அனுப்பினால் பணம் அனுப்பவேண்டும் நாம் பெயரை அனுப்பவேண்டாம் என்று இருக்கவேண்டாம். அனைவரும் இதில் பங்குக்கொள்ளவேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம். பணம் அனுப்ப முடிந்தவர்கள் அனுப்பலாம் மற்றவர்கள் தங்களின் பெயர் மற்றும் நட்சத்திரத்தை உடனே அனுப்பி வையுங்கள். ஞாயிற்றுகிழமை இரவு யாகம் நடைபெறும்.

யாகம் (22.03.2020) ஞாயிற்றுகிழமை இரவு நடைபெறும்.

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, March 18, 2020

எட்டில் லக்கினாதிபதி தெய்வ உபாசாணை


வணக்கம்!
               எட்டாவது வீட்டில் லக்கினாதிபதி அமர்ந்தால் அந்த நபர் நிறைய கஷ்டபட வாய்ப்பு இருக்கின்றது. உடல் நிலையில் அடிக்கடி தெம்பு குறைவதற்க்கும் வாய்ப்பு இருக்கின்றது. உடலில் சக்தி இல்லாமல் கஷ்டபட வாய்ப்பு இருக்கின்றது. எந்த ஒரு வேலையை எடுத்தாலும் அவர் நிறைய கஷ்டப்பட்டு அதில் இருந்து முன்னேற்றம் காண்பதற்க்கு வழி இருக்கின்றது. 

லக்கினாதிபதி எட்டாவது வீட்டில் இருக்கும்பொழுது அவர்க்கு ஆயுளும் குறைவாக இருக்கும். இளைமையில் திருமணமும் நடைபெறுதற்க்கு வாய்ப்புகள் இல்லாமல் போய்விடும். இப்படிப்ட்டவர்கள் மயான கொள்ளைக்கு செல்லும் அம்மனை பார்த்து வணங்கினால் அவர்களுக்கு லக்கினாதிபதி வலுப்பெற்று நல்ல வாழ்க்கையை வாழமுடியும். 

உதாரணத்திற்க்கு மயானத்திற்க்கு செல்லும் அங்காளபரமேஸ்வரி மற்றம் சுடலை மாடன் போன்ற தெய்வங்களை உபாசாணை செய்வதன் வழியாக அவர்கள் நல்ல வாழ்க்கையை வாழமுடியும். நான் தெய்வத்தினை உபாசாணை செய்வது எல்லாம் முடியாத ஒன்று எனக்கு வேறு வழி இருந்தால் அதனைப்பற்றி சொல்லுங்கள் என்றால் அதற்கும் வழி இருக்கின்றது. 

உங்களின் ஊரில் அல்லது வெளியூரில் இறந்தவர்களுக்கு அதுவும் ஏழை மக்களாக இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு ஈமசடங்கு செய்வதற்க்கு உள்ள பணத்தை உதவியாக கொடுக்கலாம். நீங்கள் இறப்பிற்க்கு உதவி செய்வதன் வழியாக உங்களின் லக்கினாதிபதி பலப்பட்டு உங்களுக்கு நல்ல நிலையில் செயல்பட ஆரம்பிக்கும். பணஉதவி செய்யமுடியவில்லை என்றாலும் உங்களின் உடல் உழைப்பை இறப்பிற்க்கு போடும்பொழுது உங்களின் லக்கினாதிபதி பலம்பெறும்.

இதனைப்பற்றி ஒரு வீடியோ பதிவை போட்டு இருக்கிறேன். கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து நீங்கள் பார்த்துக்கொள்ளலாம்.

https://youtu.be/oQCmuHJSi04


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, March 12, 2020

மனை சாஸ்திரம்


வணக்கம்!
          ஒவ்வொருவரின் கனவு என்பது ஒரு வீடு கட்டவேண்டும் அல்லது வீட்டை வாங்கவேண்டும் என்பதில் இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்து வீட்டை வாங்கினாலோ அல்லது வீட்டை கட்டினாலோ அதில் பல வாஸ்து குறைகளை இந்த உலகம் சொல்லிவிடுகின்றது.

ஒரு வீட்டை கட்டும்பொழுது அதில் வாஸ்து குறைபாடு இருப்பது ஒன்றும் பெரிய விசயம் கிடையாது. ஒரு வீடு கட்ட மனையை தேர்வு செய்யும்பொழுது மட்டுமே ஒருவர் மிகுந்த கவனத்தோடு செயல்படவேண்டும். மனையை நன்றாக பார்க்கும் ஒருவரை அழைத்து வந்து அந்த இடத்தை காண்பிக்கவேண்டும். மனையை தேர்ந்தெடுக்கும் நபர்கள் உங்களிடம் இல்லை என்றால் நீங்கள் வாங்கும் மனையின் அருகில் இருக்கும் நபர்களிடம் அந்த மனையை பற்றி விசாரிக்கவேண்டும்.

ஒரு மனை அதன் காரத்துவத்தை நன்றாக வெளிப்படுத்தும். உதாரணத்திற்க்கு ஒரு மனையில் அதிகமாக பெண்கள் தான் வசிப்பது போல இருக்கும் ஒரு மனையில் ஆண்கள் வசிப்பது போன்ற நிலை இருக்கும். ஒரு சில மனையில் வம்பு வழக்கு ஏற்படும். ஒரு சில மனையில் கொலை கூட விழுவதற்க்கு வாய்ப்பு இருக்கின்றது. இது அனைத்தும் அந்த மனையின் காரத்துவத்தை வெளிப்படுத்தும் செயல்.

மனையைப்பற்றி நிறைய தகவல்களை இன்றைய வீடியோவில் பேசியிருக்கின்றேன். அதனை கீழே உள்ள லிங்கில் சென்று பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

 சேனல் பெயர் rajeshsubbu


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, March 9, 2020

ஆலய தரிசனம்


வணக்கம்!
         சனிக்கிழமை அன்று திருச்செந்தூர் சென்றுருந்தேன். வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் பயணம் திட்டம் போட்டு விடியற்காலையில் கிழப்பினேன். திருச்செந்தூர் மதியம் 12 மணியளவில் சென்று அடைந்தேன். கடலில் குளித்துவிட்டு நாழி கிணற்றில் குளித்துவிட்டு மாலை தரிசனத்திற்க்கு சென்றேன். திருச்செந்தூர் கோவிலை பற்றி பழைய பதிவில் சொல்லிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

திருச்செந்தூர் முருகன் நல்ல சக்தி வாய்ந்த முருகன் அதனை வைத்து நம்ம மக்கள் சம்பாதிக்கும் வழி சுத்தமாகவே எனக்கு பிடிக்கவில்லை. எப்படி சென்றாலும் மக்களிடம் இருந்து எப்படி சம்பாதிக்கலாம் என்பதில் தான் கவனத்தை நிர்வாகம் திட்டம் தீட்டுகின்றனர். முருகனை தரிசனம் செய்யவேண்டும் என்றால் நீங்கள் பணம் இல்லாமல் அவ்வளவு எளிதில் பார்த்துவிடமுடியாது.

இங்கு சொல்லுவதற்க்கு காரணம் இதனை படிக்கும் யாராவது சம்பந்தப்பட்ட நிர்வாகத்தில் இருக்கலாம் அவர்கள் இதனை கருத்தில்கொண்டு வசூல் செய்வதில் கொஞ்சம் குறைக்கலாம். ஏதோ ஒரு வழியை மட்டும் வைத்து அதில் சம்பாதித்துக்கொள்ளலாம் மற்றயவை அப்படியே விட்டுவிட்டால் எளிதில் மக்கள் பார்ப்பார்கள். கோவிலில் கட்டணத்தை வைத்தாலும் அதிலும் நிறைய குளறுபடி இருக்கின்றது.

வெளியில் நின்றுக்கொண்டு நிறைய பேர் நீங்கள் எளிதில் தரிசனம் செய்யலாம் இவ்வளவு பணம் கொடுங்கள் என்று நிறைய பேர் கேட்கின்றார்கள். இதனை எல்லாம் தவிர்த்தால் நன்றாகவே இருக்குமே என்று நான் நினைக்கிறேன். இந்த மாதிரியான கோவில்கள் எல்லாம் இருப்பது ஒன்றுமே இல்லாத மக்கள் இதனை பார்க்கவேண்டும் என்ற நோக்கத்தில் அந்த காலத்தில் உருவாக்கின்றார்கள்.

நான் செல்லும் கோவில்களைப்பற்றி நான் வெளியில் சொல்லுவது உண்டு. என்னுடைய கண்ணிற்க்கு இது எல்லாம் தவறாகபட்டது அதனை உங்களிடம் பகிர்ந்துக்கொண்டேன். திருநெல்வேலி வடி திருச்செந்தூர் சாலை படுமோசமான ஒரு சாலையாக இருக்கின்றது. இதனை சரி செய்யவும் முடிந்தவரை உங்களுக்கு தெரிந்தவர்களிடம் இதனைப்பற்றி சொல்லுங்கள். உயர் அதிகாரிகள் நினைத்தால் இது நடக்கும். திருச்செந்தூர் சென்றததால் வீடியோ பதிவை போடமுடியவில்லை இன்று மாலை வீடியோ பதிவு வந்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு