Followers

Tuesday, September 22, 2015

பாக்கியஸ்தானம் பரிகாரம்


வணக்கம்!
         பல நண்பர்களுக்கு இது அனுபவமாக இருக்கலாம் அல்லது எதிர்காலத்தில் இப்படிப்பட்ட அனுபவம் ஏற்படலாம். வாழ்வில் ஏதாவது ஒரு கட்டத்தில் ஏதாவது ஒரு ரூபத்தில் நமக்கு ஒரு நல்ல வாய்ப்பு வரும். அந்த நல்ல வாய்ப்பை நமது மனது செய்த தந்திரத்தால் அதனை இழந்து இருப்போம். உனக்கு நீ தான் எஜமான் என்று உங்களின் மனம் சொல்லும். அப்படி சொல்லும் மனம் எல்லாம் இடத்திலும் சரியான முடிவை எடுக்காது என்பது நமக்கு தெரியாது. அது சொல்லுவது போல் நாம் செய்துக்கொண்டு நமது வாய்ப்பை தவறவிட்டு இருப்போம்.

ஒரு மனிதன் ஒரு வாய்ப்பை நமக்கு கொடுத்திருப்பான் அந்த வாய்ப்பு ஏதோ ஒரு காரணத்தால் அதனை இழந்து இருப்போம். அவர் வழியாக நமது வாழ்க்கையே மாறி போயிருக்கும் ஆனால் அதனை நாம் தவிர்த்து கஷ்டப்பட்டுக்கொண்டு இருப்போம்.

ஒவ்வொருவருக்கும் இப்படி நடக்கும் அதற்கு காரணம் யாரும் இல்லை. உங்களுக்கு இப்படிப்பட்ட வாய்ப்பை உருவாக்கியது ஐந்தாம் வீடு என்ற பூர்வபுண்ணிய ஸ்தானம் அதனை கிடைக்கவிடாமல் செய்தது ஒன்பதாவது வீடு என்று சொல்லக்கூடிய பாக்கியஸ்தானம்.

ஐந்தாவது வீடும் ஒன்பதாவது வீடும் இரண்டும் சரியாக வேலை செய்யும்பொழுது மட்டுமே ஒருவன் வாய்ப்பை பெற்று நல்ல நிலைக்கு செல்வான். 

கிரகங்கள் பிரச்சினை செய்தாலும் மனிதனால் ஒரு வேலை மட்டும் செய்யமுடியும் அதாவது அனைத்தையும் பொறுமையாக கையாளவது இதற்கு சரியான வழியாக இருக்கும். பொறுமையாக செயல்பட்டால் கண்டிப்பாக வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: