வணக்கம்!
இன்று பெளர்ணமி தினம். பச்சைப்பரப்புதல் என்ற ஒன்றை நான் நமது பதிவில் சொல்லிருக்கிறேன். இதனை எத்தனை பேர் ஞாபகம் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
உங்களின் குலதெய்வத்திற்க்கு இந்த பச்சைப்பரப்புதலை செய்யும்பொழுது உங்களின் குலதெய்வம் மனமிரங்கி உங்களுக்கு நல்ல வழிக்காட்டும். ஜாதகத்தில் ஏற்படும் எப்பேர்பட்ட தோஷத்தையும் நீக்கி நல்லவழியை கொடுக்கும்.
இன்று பெளர்ணமி தினம் என்பதால் உங்களின் குலதெய்வத்திற்க்கு உங்களின் வீட்டில் மாலை நேரத்தில் இந்த பச்சைப்பரப்புதலை செய்யுங்கள். நமது பதிவில் எப்படி செய்வது என்பது கொடுக்கப்பட்டு இருக்கிறது அதனை படித்துவிட்டு செய்யுங்கள்.
நாளைய தினம் காயத்ரி ஜெபம் என்ற ஒரு நாள். காயத்ரி மந்திரம் செபிப்பவர்கள் நாளை விஷேசமாக பூஜை செய்யலாம். காயத்ரி தேவி நல்ல அருளை வழங்கும் தினமாக நாளை இருக்கிறது. காயத்ரி மந்திரம் ஆரம்பிக்க நினைப்பவர்கள் கூட நாளை ஆரம்பிக்கலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment