Followers

Monday, December 18, 2017

காதலில் சொதப்பல்


ணக்கம்!
          இன்றைய காலத்தில் காதல் திருமணம் அதிகமாக நடைபெறுகிறது என்று சொல்லுகின்றனர். காதல் திருமணம் என்பது முதல் முதலாக காதலித்த ஆண் அல்லது பெண்ணை தான் திருமணம் செய்கின்றனர்களாக என்றால் அது இருக்காது என்றே சொல்லலாம்.

ஜாதககதம்பம் ஆரம்பித்த காலத்தில் நிறைய காதல் ஜோடிகள் தான் ஜாதகத்தை காட்டிக்கொண்டு இருவரும் திருமணம் செய்யலாமா அல்லது பிரிந்து போய்விட்டாேம் எங்களை சேர்த்து வையுங்கள் என்று எல்லாம் நிறைய பேர்கள் வருவார்கள்.

நிறைய ஆன்மீக வியாபாரம் எல்லாம் காதலர்கள் வைத்தே நடந்துக்கொண்டு இருக்கும் என்பதால் இதனை தவிர்த்து வந்திருக்கிறேன். இவங்களுக்கு எந்த வித வேலையும் செய்யாமல் இருப்பேன். ஒரு சிலர் பிடிவாதமாக இதனை பிடித்து அவர்கள் வேலை வாங்கியிருக்கின்றனர். 

பலர் என்னிடம் வந்து காதலுக்கு ஏன் நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்று எல்லாம் கேட்டு இருக்கின்றனர். உண்மையில் நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எல்லாேரும் அதனை தான் செய்துக்கொண்டு இருக்கின்றனர். நாமும் அதனை செய்யவேண்டாம் என்று தான் சொல்லிருக்கிறேன். 

காதலில் ஒருவர் வெற்றி பெறவேண்டும் என்றால் அவர்க்கு சுக்கிரன் பெரிதும் துணைபுரியவேண்டும். சுக்கிரன் கிரகம் அதிகமாக பலனை கொடுத்தால் வெற்றி பெற்றுவிடலாம். காதல் திருமணம் வெற்றி பெறுவதற்க்கு முதல் தாரக மந்திரமே காதலித்துக்கொண்டே இருக்ககூடாது உடனே திருமணம் செய்துவிட்டால் நல்லது.

நம்ம ஆளுங்க சுக்கிரன் கொடுக்கும் கொஞ்ச பலனை வைத்து காதலித்துவிடுவார்கள். சம்பாதிக்க மாட்டார்கள். பணம் இல்லாமல் திருமணம் செய்யமுடியாமல் தவித்துக்கொண்டு இருப்பார்கள். ஒரு சிலருக்கு மட்டும் தான் ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் தடை செய்யும். முக்கால்வாசி பேருக்கு காதலிக்க கொடுத்த சுக்கிரன் பணத்தை கொடுப்பதில்லை என்றே சொல்லலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: