Followers

Saturday, December 20, 2014

செல்வவழி


வணக்கம் நண்பர்களே!
                       என்னை தொடர்புக்கொள்ளும் நண்பர்களில் முக்கால்வாசி பேர் எப்படியாவது என்னை பயன்படுத்திக்கொண்டு மேம்மையான வாழ்க்கை வாழவேண்டும் என்று நினைக்கின்றார்கள். அதனை என்னால் உங்களுக்கு செய்துக்கொடுக்க முடியும்.

பணக்காரர் ஆகவேண்டும் என்றால் அது உடனே நடந்துவிடாது. அதற்கு நிறைய உழைக்கவேண்டும். என்னிடம் வந்த நாளே பணக்காரர் ஆகிவிடவேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. உங்களை தயார்படுத்த சிறு காலம் தேவைப்படும் அந்த காலம் வரை நீங்கள் பொறுமை காக்கவேண்டும்.

வேலை பார்த்துக்கொண்டு இருப்பவர் என்னிடம் வந்து பெரிய அளவில் நான் பணக்காரர் ஆகவேண்டும் என்று வந்தால் அது உடனே சாத்தியப்படாத ஒன்று. ஏன் என்றால் அவரின் வேலை வழியாக மட்டுமே அவருக்கு பண வரவு இருக்கும்பொழுது வேலையில் இருப்பவர்களுக்கு பெரிய அளவில் பணத்தை கொடுக்ககூடிய அளவிற்க்கு கம்பெனி தயாராக இருந்தால் அதற்கு வழி செய்யலாம். வருடத்திற்க்கு ஒரு ஊதிய உயர்வை மட்டும் தரும் நிலையில் உள்ள கம்பெனியில் வேலை பார்த்தால் அது சாத்தியப்படாத ஒன்று.

தொழில் செய்பவர்கள் குறைந்த காலம் என்னிடம் ஒழுங்காக இருந்தால் கண்டிப்பாக நல்ல முறையில் நீங்கள் பெரிய அளவில் வரமுடியும். உங்களால் எளிதில் செல்வந்தராக மாறிவிடமுடியும். ஒரு தடவை பணத்தை பார்த்தவுடன் ஓடி விடுபவர்கள் தான் அதிகம் இருக்கும்பொழுது என்னால் எப்படி தொடர்ந்து உங்களுக்கு செய்யமுடியும்.

பொதுவாக வரும் நண்பர்கள் உடனே ஜாதகத்தை வைத்து செய்துக்கொடுங்கள் என்று கேட்பவர்களாக தான் இருக்கின்றார்கள். ஜாதகத்தை வைத்து உங்களுக்கு செய்துக்கொடுக்க தயாராக இருக்கிறேன் ஆனால் நீங்கள் எனக்கு காலம் முழுவதும் உதவ தயார் என்ற நிலை ஏற்படும்பொழுது மட்டுமே அது சாத்தியப்படும். அதற்கு காரணம் குருவின் கட்டளை அப்படிப்பட்டது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: