Followers

Thursday, March 14, 2019

வெள்ளம் வருவதற்க்கு முன்பே அணை





வணக்கம்!
          ஒரு மனிதன் அவனுடைய வாழ்க்கையை நன்றாக வைத்துக்கொள்ளவேண்டும் அதற்கு ஒரு வழிகாட்டி தேவை என்ற கணக்கில் கொண்டு தான் சோதிடம் வந்தது. சாேதிடத்தில் சொல்லப்பட்ட விசயங்களை தன்னுடைய குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எப்படி அறிவுரை வழங்கி அவர்களை தீய பாதையில் இருந்து விலக்கிக்கொண்டு அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை கொடுக்கலாம் என்பதை குடும்பத்தில் உள்ள ஒருவராது இதில் தேர்ச்சியில் இருக்கவேண்டும்.

ஒரு சில தினங்களாக நெட்டை திறந்தாலும் முகநூலை திறந்தாலும் தொலைக்காட்சி திறந்தால் பொள்ளாட்சி பொள்ளாட்சி என்று தான் வருகின்றது. ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு செய்தி வந்தாலும் இந்த விசயம் அதிகமாக  பாதிப்பு அடைந்திருக்கின்றது என்று நினைக்கிறேன்.

ஜாதககதம்பத்தில் உள்ளவர்களுக்கும் சொல்லுவது ஒன்றை தான் உங்களின் பெண் குழந்தைகளாக இருந்தாலும் சரி ஆண் குழந்தைகளாக இருந்தாலும் சரி அவர்களுக்கு ஜாதகத்தில் நடக்கும் தசா எப்படி இருக்கின்றது கோச்சாரபடி என்ன நடக்கின்றது என்பதை தெரிந்துக்கொண்டு அவர்களின் மேல் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

இராகுவின் சாரம் அதிகமாக உங்களின் வீட்டில் உள்ளவர்களுக்கு இருந்தால் அவர்களை தேடி வம்பு வந்துவிடும். ஒரு பிரச்சினை வந்தபிறகு பிரச்சினையில் இருந்து வெளி வருவதற்க்கும் வருவதற்க்கு முன்பே அதில் இருந்து தப்பிபதற்க்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது.

உங்களால் முடிந்தவரை உங்களின் குடும்பத்தில் உள்ளவரை மீட்க முடியும். அதாவது ஜாதகத்தின் பலனை நன்றாக தெரிந்துக்கொண்டு அதற்க்கு தகுந்த வழிபாட்டையும் அவர்களுக்கு தேவையான அறிவுரையும் நீங்கள் வழங்கினால் கண்டிப்பாக உங்களின் குடும்பம் பாதிப்படையாது. 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: