Followers

Thursday, March 14, 2019

சக்தி தரும் வீடு


வணக்கம்!
          சக்தி என்றாலே அது குதிரையை தானே நமது மக்கள் அடையாளப்படுத்துவார்கள். வீட்டில் குதிரை படத்தை வைத்தால் வீட்டிற்க்கு சக்தி கிடைக்கும் என்பது நமது மக்களின் எண்ணங்களாக இருக்கின்றது.

ஒன்று குதிரையின் லாடத்தை வைப்பார்கள் அல்லது குதிரையின் படத்தை வைப்பார்கள். ஒரு சிலர் கருப்பு குதிரையின் லாடத்தை தான் பயன்படுத்தவேண்டும் என்று வாங்கி வந்து வீட்டில் கட்டி வைப்பார்கள். கருப்பு குதிரையின் லாடம் என்று ஏமாற்று வேலையும் நடக்கின்றது.

குதிரையின் படத்தை வாங்கி வந்து வீட்டிற்க்குள் மாட்டுவார்கள். குதிரையின் படம் ஒன்று அல்லாமல் ஏழு குதிரை ஒடுவது போன்ற படத்தை வாங்கி மாட்டினால் நல்லது என்று கூட சொல்லுவார்கள். ஏழு குதிரையும் ஓடுவது போல இருந்தால் அது வீட்டில் நிறைந்த சக்தி தருவது போன்ற ஒரு நிலை என்பார்கள்.

ஏழு குதிரை என்பது ஏழு கிரகத்தை குறிக்கும் என்பதை தான் ஏழு குதிரை படத்தை காட்டுகின்றார்கள் என்பது என்னுடைய எண்ணம். இராகு கேதுவை விட்டுவிட்டு இதனை சொல்லுகிறேன். குதிரையின் படம் என்பதை தாண்டி உண்மையான குதிரையை வாங்கி கட்டி பார்த்தால் நல்ல விசயம் நடக்கும்.

குதிரையை வாங்கிக் கட்டி அதனை பராமரிப்பது கடினமாக இருந்தால் குதிரையின் படத்தை வாங்கி மாட்டிக்கொள்ளலாம். குதிரையின் படம் வீட்டிற்க்குள் சக்தி வருவது போன்று மாட்டிக்கொள்ளுங்கள். வீட்டிற்க்குள் ஓடி வருவது போன்ற நிலையில் மாட்டவேண்டும். 

இதனை எல்லாம் நாம் செய்து தான் சக்தி வரவழைக்கவேண்டும் என்பதை இல்லை. நல்ல பூஜையறையில் பூஜையை நீங்கள் செய்தாலே உங்களின் குடும்பத்திற்க்கு தேவையான சக்தியை உங்களின் குலதெய்வம் கொடுத்துவிடும்.

நாளை திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் பகுதியில் இருக்கும் நண்பர்கள் என்னை சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும்.

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: