Followers

Friday, March 15, 2019

நமக்கு கிடைத்த பாக்கியம்


ணக்கம்!
           கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் பகுதியில் இருக்கும் நண்பர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும்.

ஒவ்வொரு மனிதனும் இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில் அவர் அவர்களின் வேலையை பார்ப்பதே மிக மிக கடினமான ஒன்றாக இருக்கின்றது. இந்த நேரத்தில் ஆன்மீக பணியிலும் உங்களை இணைத்துக்கொள்வது கொஞ்சம் அல்ல பெரிய பணியாகவே அது இருக்கும்.

நமது அம்மன் கோவில் அடிக்கல் நட்டபிறகு கோவிலின் வேலை ஆரம்பிப்பதற்க்கு பல கட்ட பணிகள் நடந்துக்கொண்டு வருகின்றன. நமது நண்பர்களுக்கும் அவர்களின் அதிக வேலைக்கு இடையில் இந்த பணியை எடுத்து செய்து வருகின்றனர். அனைவரும் இந்த பணியில் ஈடுபடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நமது பூர்வபுண்ணியமும் நமது பாக்கியமும் தான் இந்த மாதிரியான பணிகளை செய்ய நமக்கு வழி வகுக்கின்றது. முற்பிறவியில் நாம் செய்த புண்ணியம் இப்படிப்பட்ட வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றது.

நீங்கள் செய்த பாவங்களை போக்கவும் உங்களின் தோஷங்களை போக்கவும் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள முடியும். எப்படி என்றால் இதுவரை நாம் அம்மனின் துணையோடு உங்களுக்கு வழிகாட்டிக்கொண்டு இருந்தோம். வழிகாட்டிய அம்மனுக்கு கோவில் கட்ட நம்மால் முடிந்தவற்றை செய்தால் அதுவே மிகப்பெரிய நன்றி கடனாக அது இருக்கும்.

ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் தொடர்புக்கொண்டு பேசி வருகிறேன். அனைவரும் பங்குக்கொண்டு செயல்புரிவோம் என்று சொல்லியுள்ளனர். இனிமேலும் தொடர்புக்கொண்டு பேசுகிறேன் அனைவரும் இணைந்து இதனை செயல்புரிவோம்.

மதியம் பதிவு வரும் வந்து படித்துவிட்டு செல்லுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: