Followers

Friday, March 15, 2019

சக்தி தரும் வீடு


வணக்கம்!
         வாஸ்துவில் மீன் வளர்ப்பதைப்பற்றி சொல்லுவார்கள். மீன் வளர்த்தால் அந்த வீட்டில் உள்ள வாஸ்து தோஷத்தையும் போக்கி செல்வவளத்தை கொடுக்கும் அதோடு வீட்டிற்க்கு நேர்மறையான சக்தியை கொடுக்கும் என்று சொல்லுவார்கள்.

வாஸ்துவில் வண்ண மீன்கள் பற்றியும் சொல்லுவார்கள். ஒரு மீன்தொட்டி அமைத்து அதில் பல வண்ண மீன்களை வளர்க்கவேண்டும் என்றும் சொல்லுவார்கள். இதனை எல்லாம் நீங்கள் கிட்ட பிடித்து பார்த்தால் கிரகத்தின் ஆற்றலை கொடுப்பதை தான் மறைமுகமாக சொல்லி இருப்பார்கள்.

ஒவ்வொரு கிரகத்திற்க்கும் ஒவ்வொரு கலரை சொல்லிருப்பார்கள். அதேபோல மீனும் வளர்த்தால் நல்லது என்பார்கள். சுற்றி வளைத்து அது கிரகத்தின் ஆற்றலை தருவது போலவே இருக்கும். கிரகத்தின் ஆற்றல் எந்தந்த இடத்திற்க்கு தரவேண்டும் என்பதை அறிந்து நீங்கள் அதனை வேறுவிதமாகவும் பயன்படுத்திக்கொள்ளமுடியும்.

ஆன்மீக ரீதியாக நாம் பார்த்தால் நம்முடைய மனிதனின் மனதை தயார் செய்வதற்க்கு உள்ள வழிகளாகவே அனைத்தும் இருக்கும். எங்களின் வீட்டிலும் மீன் வளர்க்கவேண்டுமா என்ற கேள்வியை கேட்கலாம். உங்களுக்கு இது எல்லாம் பிடித்து இருந்தால் வளர்த்துக்கொள்ளுங்கள்.

உங்களின் வீட்டில் ஒய்வு நேரத்தில் அதனோடு செலவிட ஒரு வழியாகவும் இது இருக்கும். நீங்கள் நகர்புறத்தில் இருந்தால் இதனை வளர்க்கலாம் இதனை ஏன் சொல்லுகிறேன் என்றால் வேறு உயிர் நீங்கள் வளர்க்க மாட்டீர்கள். கால்நடைகளை வளர்க்கமுடியாது இதனை வளர்த்தால் உங்களுக்கு வரும் ஆபத்தை அந்த மீன்கள் வாங்கிக்கொள்ளும் என்ற ரீதியில் வளர்த்துக்கொள்ளலாம்.

நமது வாடிக்கையாளர்கள் இதனை வளர்ப்பது குறைவாகவே இருக்கின்றது. ஒரு ஐந்து பேர் வளர்ப்பதே பெரிய எண்ணிக்கையாகவே இது இருக்கின்றது என்பதால் இதில் அனுபவமும் எனக்கு குறைவாகவே இருக்கின்றது. உங்களின் மனதிற்க்கு சக்தியூட்டுவதாக ஒரு சில நேரத்தில் இருப்பதாக எண்ணுவதால் இதனை வளர்த்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: