Followers

Monday, March 4, 2019

அடிக்கல்நாட்டு விழா


வணக்கம்!
         அம்மன் கோவில் அடிக்கல்நாட்டு விழாவில் வேலை அதிகமாக இருப்பதால் பதிவுகள் குறைந்து வருகின்றன. அம்மன் கோவில் அடிக்கல்நாட்டுவிழா சிறப்பாக நடைபெறுவதற்க்கு அனைத்து வேலைகளை செய்துக்கொண்டு வருகிறேன்.

ஜாதக கதம்பத்தில் உள்ள நண்பர்களின் பங்கு மகத்தான ஒன்றாக இருக்கின்றது. உங்களால் தான் இது சாத்தியப்பட்டது. நீங்கள் இல்லை என்றால் கண்டிப்பாக இது நடந்து இருக்காது. அனைவரும் இதில் கலந்துக்கொள்ளவேண்டும் என்று அன்போடு வரவேற்கிறேன்.

அம்மன் கோவில் அடிக்கல் நாட்டுவிழா மற்றும் அம்மன் பூஜையும் ஒன்றாகவே நடைபெறவேண்டும் என்று தான் தீர்மானித்து செயலாற்றுகிறேன். அடிக்கல்நாட்டு விழாவிற்க்கு சிறப்பான ஒரு ஏற்பாட்டை செய்துக்கொண்டு இருக்கிறேன்.

அடிக்கல்நாட்டுவிழாவில் அன்னதானமும் சிறப்பான முறையில் நடைபெறவதற்க்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. அடிக்கல்நாட்டுவிழாவில் அன்னதானம் ஆயிரம் பேருக்கு என்ற முறையில் செயல்படுத்த வேண்டும் என்று வேலை செய்துக்கொண்டு இருக்கிறோம்.

அடிக்கல்நாட்டுவிழாவிற்க்கு முடிந்தவரை அனைவருக்கும் பத்திரிக்கை அனுப்பியுள்ளேன். அனைவரும் இதனை நேரிடை அழைப்பாக ஏற்றுக்கொண்டு இணைந்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: