Followers

Saturday, March 16, 2019

முருகன் வழிபாடு


வணக்கம்!
          ஒரு மனிதனுக்கு செவ்வாய் கிரகம் நீசம் பெற்றுவிட்டால் அவர்களுக்கு வீடு என்பது அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது. நிறைய பாேராட்டத்திற்க்கு பிறகு வீடு கிடைக்கும். செவ்வாய் கிரகம் நன்றாக இருந்தால் எளிதாக வீடு அமைந்துவிடும்.

செவ்வாய் கிரகம் உச்சம் பெற்றவர்களுக்கு அவர்கள் நிலம் மற்றும் வீடுகள் வியாபாரம் பற்றி எளிதில் புரிந்துக்கொள்ளுவார்கள். நிலமும் அவர்களுக்கு எளிதில் கிடைத்துவிடுகின்றது. இன்றைய காலக்கட்டத்தில் ஒரு மனிதனுடைய பெரிய போராட்டமாகவே இருப்பது ஒரு கனவு வீடு தானே. 

செவ்வாய் கிரகம் ஒருவருக்கு நன்றாக இல்லை என்றால் அவர்களை நான் நிறைய முருகன் வழிபாட்டை மேற்க்கொள்ளுங்கள் என்று சொல்லிருக்கிறேன். முருகன் வழிபாடு என்பது அவ்வப்பொழுது வந்துக்கொண்டே இருக்கும் அதாவது மாதத்திற்க்கு ஒரு சிறப்பான வழிபாடாக இருக்கும்.

தை பூசம்  அதன் பிறகு பங்குனி உத்திரம் என்று வந்துக்கொண்டே இருக்கும். இதனை நீங்கள் மிக சரியாக பயன்படுத்திக்கொண்டு இந்த விழாகளுக்கு என்று உங்களை தயார் செய்துக்கொண்டு ஏதோ ஒரு விஷேசமான முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள்.

ஒரு பெரியளவில் நம்மை தயார் செய்வதற்க்கு முருகன் வழிபாடு நம்மை பெரியளவில் உயர்த்தும். முருகன் கோவிலுக்கு அடிக்கடி சென்றுவருவது மற்றும் புகழ்பெற்ற முருகன் கோவிலோடு உங்களை தொடர்ப்படுத்திக்கொண்டே வாருங்கள். இதனைப்பற்றி நான் ஏற்கனவே சொல்லிருக்கிறேன் மீண்டும் இதனை சொல்லுவது உங்களின் நலனுக்காக இதனை சொல்லுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: