Followers

Monday, March 11, 2019

தீயகிரகங்கள் தரும் திருட்டு குணம்


வணக்கம்!
          ஒருவருக்கு தீயபழக்க எண்ணங்கள் உருவாகுவது அவர் அவர்களுக்கு நடக்கும் தீயதசாவில் அதிகமாக இருக்கும். ஒருவருக்கு சனி தசா அல்லது இராகு தசா நடந்தால் அதிகமாக பொய்யை சொல்லுவார்கள்.

சம்பந்தமே இல்லாமல் அனைத்தையும் மறைத்து மறைத்து செயலாற்றுவார்கள். அவர்களிடம் எதையும் முழுமையாக எதிர்பார்க்க முடியாது. சனி தசா நடந்தால் அதிகமான திருட்டு புத்தி இருக்கும். இது சனி எந்த இடத்தில் இருந்தாலும் அவர்களுக்கு திருட்டு புத்தியை தரும்.

இராகு தசா என்பது பெண்களின் விசயத்தில் நிறைய மறைத்து சொல்லுவார்கள். நிறைய பெண்கள் தொடர்பை வைத்துக்கொண்டு இருந்தாலும் வீட்டில் ஒன்றுமே தெரியாது பாேலவே நடந்துக்கொண்டு இருப்பார்கள்.

உங்களுக்கு எந்த ஒரு மறைமுக தசா நடந்தாலும் உங்களின் செயல்பாட்டில் ஒரு மறைமுகமான காரியங்கள் நடந்துக்கொண்டே இருக்கும். யாருக்கும் தெரியாத ஒரு விசயத்தை உங்களோடு நீங்கள் வைத்துக்கொண்டே இருப்பீர்கள்.

இன்றைய காலத்தில் அனைவரும் விவரமாக இருந்தாலும் அவர் அவர்களுக்கு நடக்கும் தசா தீய தசாவாக அல்லது மறைமுக தசாவாக இருந்தால் நீங்கள் கொஞ்சம் கூடுதலான திருட்டுதனத்தோடு செயல்படுவீர்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: