Followers

Wednesday, March 13, 2019

சக்தி தரும் வீடு


வணக்கம்!
          இன்றைய காலக்கட்டத்தில் வாஸ்து என்பது பெரியதும் வீட்டிற்க்கு பயன்படுகின்றது. அனைவரும் வாஸ்து பார்த்து வீட்டை கட்டுகின்றார்கள். அனைத்து மதத்தினரும் வாஸ்து பார்த்து கட்ட தொடங்கிவிட்டனர்.

பெரும்பாலும் சக்தி நன்றாக கிடைக்கவேண்டும். எதிர்மறையான சக்தி இருக்ககூடாது. வீட்டில் உள்ளவர்கள் ஆரோக்கியமாக நல்ல நிலையில் இருக்கவேண்டும் என்பது தான் அடிப்படையான எண்ணம் தான் இதனை எல்லாம் பார்த்து செய்ய தோன்றுகின்றது.

உங்களுக்கு நல்ல சக்தி கிடைத்தால் போதும் உங்களுக்கு அனைத்தும் கிடைத்துவிடும். நல்ல சக்தி கிடைக்கு என்ன என்ன வழிகள் இருக்கின்றனவோ அதனை எல்லாம் உங்களின் வீட்டில் செய்துக்கொள்ளுங்கள்.

சக்தி கிடைப்பதற்க்கு முன்பு ஒன்றை கவனித்துக்கொள்ளுங்கள். முதலில் உங்களின் வீடு சுத்தமாக இருக்கவேண்டும். வீடு சுத்தமாக இருந்தால் தான் உங்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும். வீடு சுத்தமாக இருந்தாலே போதும் உங்களின் வீட்டில் சக்தி நிலைத்திருக்கும்.

பெரும்பாலும் வீட்டில் ஈசானிய மூலை நன்றாக இருக்கின்றதா அங்கு எதுவும் தடைகள் இருக்கின்றன என்று பார்த்துக்கொள்ளுங்கள். ஈசானிய மூலை நன்றாக இருந்தால் எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் உங்களின் வீட்டிற்க்கு சக்தி கிடைத்துக்கொண்டே இருக்கும். 

ஈசானிய மூலையில் தடங்கல் இருக்கும்பொழுது உங்களின் வீட்டிற்க்கு சக்தி கிடைக்காது என்பது விதி. ஈசானிய மூலை சரியில்லாத வீட்டில் குடியிருக்க வேண்டாம் என்பார்கள். எந்த ஒரு வகையிலும் சக்தியை கொண்டுவரமுடியாது என்பார்கள். ஈசானிய மூலையை மட்டும் சரி செய்துவிடவேண்டும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: