Followers

Monday, March 25, 2019

குலதெய்வம்


வணக்கம்!
          நாம் குலதெய்வத்தைப்பற்றி நிறைய பதிவை தந்திருக்கிறோம். குலதெய்வத்திற்க்கு உண்டான பச்சைப்பரப்புதல் நம்மால் பரிந்துரைக்கப்பட்டு நிறைய பேர்கள் இதனை தொடர்ச்சியாக செய்து வருகின்றனர். பல சோதிடர்கள் கூட இந்த பரிகாரத்தை பரிந்துரை செய்வதாகவும் தெரிகின்றது.

குலதெய்வத்திற்க்கு தொடர்ச்சியாக ஒரு பூஜையை நீங்கள் செய்து வந்தால் அது எப்படியும் உங்களை உயர்த்திக்கொண்டே இருக்கும். நல்ல வாய்ப்பையும் உங்களுக்கு குலதெய்வம் கொடுக்கும். எப்பேர்பட்ட நிலையிலும் மாதந்தோறும் இந்த பூஜையை செய்துக்கொண்டு வரவும்.

குலதெய்வத்திற்க்கு உண்டான பூஜையில் பச்சைப்பரப்புதலை மட்டும் ஒருவர் செய்து வந்தாலே போதும். உங்களின் குடும்பத்தில் உள்ளவர்களை விட நீங்கள் சிறப்பாக இருப்பீர்கள். நீங்கள் மட்டும் தெளிவாக இருப்பது போன்ற ஒன்றை வெளியில் காட்டும்.

ஒரு குலதெய்வத்திற்க்கு பத்து குடும்பம் இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். இந்த பத்து குடும்பத்தில் உங்களின் குடும்பம் மட்டும் தனியாக தெரியவரும். பச்சைப்பரப்புதல் செய்யும் குடும்பம் மட்டும் தனியாக தெரியும். ஒரு பிரபலமான குடும்பம் என்று பெயர் உங்களுக்கு வரும்.

ஒரு தடவை மட்டும் பச்சைப்பரப்புதலை செய்துவிட்டு அல்லது குலதெய்வ பூஜையை செய்துவிட்டு பலன் தெரியவில்லை என்று கேட்ககூடாது. உங்களின் தொடர்ச்சியான வழிபாட்டு வழியாக தான் இது நடைபெறும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: