Followers

Monday, March 18, 2019

சனியின் இரண்டாவது சுற்று


வணக்கம்!
          ஒவ்வொருவருக்கும் வரும் வியாதி அவர்கள் செய்யும் தவறால் வந்தாலும் ஒரு சில இடத்தில் கர்மாவாலும் வருகின்றது. ஒரு வியாதி வந்தாலே அது கடவுள் நமக்கு கொடுத்த தண்டனை என்று சொல்லும் மனநிலையிலேயே மக்கள் இருப்பார்கள். 

வியாதி வருவது பெரும்பாலும் அவர் அவர்கள் செய்யும் தவறால் தான் வரும் ஒரு கால் சதவீதம் மட்டுமே கர்மாவால் வருகின்றது என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். கால் சதவீதம் மட்டுமே ஒன்ற பிறவியிலேயே வருவது உண்டு. ஒரு சில இடத்தில் கர்மாவால் இடைப்பட்ட வயதில் உள்ளவர்களுக்கு வரும்.

ஒருவர் எப்படிப்பட்ட நல்ல நிலையில் உடலை பராமரித்த வந்தாலும் ஒருவருக்கு இரண்டாவது சுற்று சனி வரும்பொழுது கொஞ்சம் நோயை கொடுத்துவிடுகின்றது. நாம் உடலை ஒழுங்காக பராமரிக்கவிட்டால் இந்த நோயை அதிகமாக தாக்கிவிடுகின்றது.

நாற்பது வயதில் நோய் வருகின்றது என்பது சனி இரண்டாவது சுற்றும்பொழுது நோய் வந்துவிடுகின்றது. பெரும்பாலான ஜாதகர்களுக்கு இது போன்று தான் வருகின்றது. ஒரு சிலர் மட்டும் தப்பித்துவிடுகின்றனர். அவர்கள் சிறந்த முறையில் உடலை பராமரித்து வருவார்கள்.

சனியின் இரண்டாவது சுற்று வரும்பொழுது அனைவரும் உணவு விசயத்தில் மிக சரியாக பின்பற்றவேண்டும். இதுவரை கண்ட உணவை சாப்பிட்டு வந்தாலும் சனியின் இரண்டாவது சுற்று சுற்றும்பொழுது உணவில் கட்டுபாட்டை கொண்டுவந்தால் போதுமானது. சனி தசா நடப்பவர்களும் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: