Followers

Friday, March 22, 2019

ரிஷப இராசி


ணக்கம்!
          இன்று வெள்ளிக்கிழமை அதனால் சுக்கிரனின் ரிஷப இராசியைப்பற்றி சும்மா கொஞ்சம் பார்க்கலாம். மாட்டின் சிம்பளை கொடுத்து இந்த இராசியை வைத்திருப்பதால் குடும்பத்திற்க்காக மாடு மாதிரி உழைப்பார்கள். மாடு மாதிரி உழைத்தாலும் குடும்பம் ஒன்றும் பெரியதாக சிறக்காது. 

ரிஷபஇராசியை திருமணம் செய்யும் நபர்கள் சோபிக்கமாட்டார்கள். இவர்களுக்கு அடியில் வாழும் வாழ்க்கை அல்லது இவர்களின் நேரம் அவர்களை ஒன்றும் இல்லாதவர்களாக மாற்றிவிடும். அது எப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும் சரி திருமணம் செய்யும் நபர் ஒன்றும் இல்லாமல் போய்விடுவார்கள்.

பணம் என்று தான் இவர்களின் எண்ணம் முழுவதும் இருக்கும் அந்த பணத்தை வைத்து ஒன்றும் செய்யமாட்டார்கள். வீணாக செலவு செய்து காசை வீணடித்துவிடுவார்கள். பணத்தை சம்பாதிக்கிறேன் என்று பணத்தை விட்டுவிடுவார்கள்.

நிறைய துணிகளை வாங்குவார்கள். புது துணிகளை வாங்கி அதனை ஒரு முறை போட்டுவிட்டு அதனை அப்படியே போட்டுவிடுவார்கள். அழகுப்படுத்துக்கொள்கிறேன் என்று அடுத்தவர்களை கொல்லுவார்கள். நிறைய பணத்தை துணிகளுக்கும் செலவு செய்வார்கள்.

சுக்கிரனின் இராசி என்பதால் ஆன்மீகத்திலும் நாட்டம் அதிகமாக இருக்கும். ஆன்மீக நாட்டம் பெரும்பாலும் சோதிடம் தாந்தீரிக வழியில் சென்று அதில் பங்குக்கொள்வார்கள். அதிக பய உணர்ச்சியும் இவர்களுக்கு இருக்கும். பெரிய வீரன் போல பேசுவார்கள் ஒரு அதட்டலில் பயந்து ஒதுங்கிவிடுவார்கள். நிறைய பேசிக்கொண்டே இருப்பார்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: