Followers

Tuesday, March 19, 2019

பங்குனி உத்திரம்


வணக்கம் !
         நாம் செய்த பெரிய வேலை என்பது என்னை நாடி வரும் நண்பர்களை ஒரு நல்ல ஆன்மீகவாதியாக மாற்றுவதற்க்கு முயற்சி செய்தேன். ஆன்மீகவாதியாக பலர் மாறி நல்ல நிலையில் வந்துக்கொண்டும் இருக்கின்றனர்.

ஆன்மீகவாதியாக மாறும் மற்றும் சாதாரணமான இருக்கும் நண்பர்களுக்கு அவ்வப்பொழுது வரும் விஷேச நாட்களில் என்ன என்ன செய்யலாம் என்பதைபபற்றி சொல்லிவருகிறேன். வருகின்ற வியாழக்கிழமை அன்று பங்குனி உத்திரம் வருகின்றது.

பங்குனி உத்திரநாளில் முருகபெருமானுக்கு அனைத்து முருகன் கோவிலும் திருவிழா நடைபெறும். பங்குனி உத்திரத்திற்க்கு விரதம் இருந்தும் கோவிலுக்கு சென்று வரலாம். வேலைப்பளு அதிகமாக இருக்கும் நண்பர்கள் அன்றைய மாலை பொழுதில் முருகன் கோவில் சென்று தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.

பங்குனி உத்திரநாளில் தரிசனம் செய்துவிட்டு வந்தாலே போதும் வாழ்நாளில் மிகப்பெரிய ஒரு நிலைக்கு உங்களை உயர்த்திவிடுவான் அந்த முருகப்பெருமான். உங்களால் முடிந்தால் ஆறுபடை வீடுகளில் தரிசனம் செய்யலாம் அல்லது அருகில் இருக்கும் முருகனை தரிசனம் செய்யலாம்.

பங்குனி உத்திரத்திற்க்கு பலர் காவடி எடுத்து செல்வார்கள். முருகன் கோவிலில் அன்னதானம் செய்வார்கள். அன்னதானம் செய்வதற்க்கு உங்களால் முடிந்த உதவியை அருகில் உள்ள முருகன் காேவிலுக்கு செய்யுங்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: