Followers

Saturday, March 30, 2019

ஏழரைச்சனி பொன்னான காலம்


வணக்கம்!
          ஒருவரின் வாழ்நாளில் இரண்டாவதாக வரும் ஏழரைச்சனி அவரை மிகப்பெரிய அளவில் உயர்த்தி வைத்துவிடுகின்றது. ஏழரைச்சனி என்றாலே பயப்பட்டுக்கொண்டு தான் இருப்பார்கள் ஆனால் உண்மையில் நடப்பது என்பது வேறு விதமாக இருக்கின்றது.

ஏழரைச்சனி இரண்டாவது சுற்று வரும்பொழுது ஒருவர் மிகவும் பக்குவப்பட்ட ஒரு நிலையில் இருக்கின்றனர். இந்த நேரத்தில் இவர்கள் அதிகமாக வேலை செய்ய ஆரம்பித்து தன்னுடைய முழுதிறனையும் வெளிகாட்ட தொடங்கிவிடுகின்றனர்.

உங்களின் அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் சற்று நன்றாக கவனித்து பார்த்தால் அவர்கள் நல்ல நிலைக்கு வந்தது அனைத்தும் இந்த ஏழரைச்சனியின் காலக்கட்டத்தில் தான் இருக்கும். ஏழரைச்சனி காலக்கட்டத்தில் தன்னை பெரியளவில் உயர்த்தி காட்டிக்கொண்டு இருப்பார்கள்.

ஏழரைச்சனியின் காலத்தில் ஒருவேளை ஒரு சிலருக்கு பிரச்சினை என்றால் அவர்கள் கொஞ்சம் பொறுமை காத்து இருந்தாலே போதும் அடுத்த இரண்டரை வருடங்களுக்கு பிறகு ஒரு நல்ல நிலையை கொடுக்கலாம். நல்ல வாய்ப்புக்கள் எங்கு கிடைக்கின்றன என்பதை தேடிக்கொண்டே இருந்தால் போதுமானது.

எப்படி பார்த்தாலும் ஏழரை வருடத்தில் ஒரு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுக்காமல் மட்டும் சனி விட்டுவிடாது. மோசமான நிலையில் சனி ஜாதகத்தில் அமர்ந்தால் கூட நல்லதை செய்துவிட்டு தான் செல்லும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: