Followers

Wednesday, April 17, 2019

மூன்றில் சந்திரன்


வணக்கம்!
          ஒருவருக்கு மூன்றாவது வீட்டில் சந்திரன் சென்று அமர்ந்துக்கொண்டு இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். பொதுவாக தீயகிரகங்கள் அமர்ந்தால் மறைவுஸ்தானத்திற்க்கு நல்லது என்று சொல்லுவார்கள். சந்திரன் மூன்றில் அமரும்பொழுது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு தண்ணீரில் கண்டம் வரும் என்று சொல்லலாம்.

பெரும்பாலும் சந்திரனோடு தீயகிரகங்கள் மூன்றாவது வீட்டில் கூட்டணி போட்டு அமர்ந்துவிட்டால் ஜாதகரின் தாய் வாழ்க்கை கேள்வி குறியாக போய்விடும். ஏதோ ஒரு வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றார் என்று சொல்லும் அளவுக்கு வாழ்க்கை இருக்கும்.

பெரும்பாலான ஜாதகர்களுக்கு இந்த தசா வந்தால் இளமையில் ஜாதகரின் தாய் மரணம் எய்துவிடுவார். ஒரு சிலருக்கு தாய் இருந்தாலும் அவர்களால் ஒன்றும் பலன் இருக்காது. தாயை வைத்து பராமரிப்பதற்க்கே வாழ்க்கை போய்விடும்.

சந்திரன் என்ற கிரகம் மறைவுஸ்தானத்தில் அமருவது தவறான ஒன்று அதோடு அந்த கிரகம் தீயகிரகங்களோடு அமரும்பொழுது கண்டிப்பாக பெரிய பிரச்சினையாக இருக்கும். பெரும்பாலான ஜாதகர்கள் மனரீதியாக பாதிப்பில் மாட்டிக்கொள்வார்கள்.

சந்திரனும் சனியும் ஒன்றாக மூன்றில் அமர்ந்தால் பெரும்பாலும் ஜாதகரின் தாய் இளம்வயதில் மரணம் அடைந்துவிடுவார் அல்லது பைத்தியம் போல் இருப்பார்கள். பெரும்பாலான தாய் நோய்வாய்ப்பட்டுக்கொண்டு இருப்பார்கள். மூன்றாவது வீட்டில் சந்திரன் அமருவது தவறான ஒன்றாகவே எடுத்துக்கொள்ளவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: